India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட்டின் சந்தை மதிப்பு சுமார் ₹41,000 கோடி குறைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு 40 பில்லியன் டாலராக இருந்த Flipkart-ன் சந்தை மதிப்பு தற்போது 35 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. சில எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய Flipkart நிறுவனம் தவறியதே இந்த இழப்புக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தேர்தல் முடிந்த பிறகு அனைவரும் ஒன்றாகி விடுவோம் என நடிகர் ராதா ரவி கூறியுள்ளார். டப்பிங் யூனியன் தேர்தல் குறித்து பேசிய அவர், “இந்தத் தேர்தலே வந்திருக்க கூடாது. இவர் வரமாட்டார், படுத்துவிட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். எதிரணி ராஜேந்திரன் என்னை திட்டி வருகிறார். யார் யாரோ என்னை திட்டுகிறார்கள். என்ன வேண்டுமானாலும் திட்டட்டும். இதுபோன்ற பல பிரச்சனைகளை நான் பார்த்து இருக்கிறேன்”எனக் கூறியுள்ளார்.

லாட்டரி மார்டினிடம் இருந்து பாவப் பணத்தை திமுக நன்கொடையாக வாங்கியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளித்திருக்கும் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, “வெளிப்படைத் தன்மையுடன் எங்களது நன்கொடை விவரங்களை வெளியிட்டிருக்கிறோம். மிரட்டி தேர்தல் பத்திரங்களைப் பெற்ற பாஜக பற்றி அறிக்கை விட எடப்பாடி பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா?” என்று வினவியிருக்கிறார்.

சமீபத்தில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடக அரசுகள் பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்தன. காரணம் அதில் நச்சுத் தன்மை கொண்ட ரோடமின் -பி என்ற வேதிப் பொருள் இருப்பதுதான். அதே வேதிப் பொருள் அடர் நிறங்கள் கொண்ட உணவுப் பொருட்கள் அனைத்திலும் பயன்படுத்தப் படுவது தற்போது தெரியவந்துள்ளது. எனவே கடைகள் அல்லது ஹோட்டல்களில் அடர் நிறத்துடன் உணவுப் பொருட்கள் இருந்தால் அதனை தவிர்த்துவிடுங்கள்.

சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடித்துள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. டப்பிங் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் கலந்து கொண்ட 84 வயதான கவுண்டமணி 8 மணிநேரம் தொடர்ந்து டப்பிங் பேசியுள்ளார். அரசியலை நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும், யோகி பாபுவும் நடித்துள்ளனர்.

சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேரை இந்திய கடற்படையினர் அதிரடியாக கைது செய்தனர். சோமாலியா கடற்கொள்ளையர்களால் வணிக கப்பல்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அரபிக் கடலில் ரோந்து சென்ற இந்திய கடற்படையினர், கொள்ளையர்கள் சென்ற ரூயென் கப்பலை தடுத்து நிறுத்தினர். அதைத் தொடர்ந்து பிணைக் கைதிகளாக இருந்த 17 பேரை பாதுகாப்பாக மீட்டதுடன், 35 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

டெல்லி- பெங்களூரு அணிகளுக்கு இடையேயான WPL இறுதிப்போட்டி, டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2 பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால், அருண் ஜெட்லீ மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. போட்டியை காண சுமார் 23,190 பார்வையாளர்கள் இன்று மைதானத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு இணையான ரசிகர் கூட்டத்தை, WPL தொடரும் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.

நாடே எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 – ஜூன் 1 வரை நடைபெற உள்ளது. NDA கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் மோடி என்பது உறுதியான நிலையில், INDIA கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. காங்., தலைவர் கார்கேவை சிலர் பரிந்துரைத்ததாக தகவல் வெளியானாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடன இயக்குநர் பிரதிக் என்பவருடன் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையான நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவி விளக்கமளித்துள்ளார். அதில், “நானும் ஒரு பெண் தான். என்னை பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்திவிடுங்கள். இதுபோன்ற மீம்ஸ் மற்றும் டிரோல் என்னை பாதிக்காது. விமர்சிப்பதற்கு முன்பு கொஞ்சமாவது சிந்தியுங்கள். சோசியல் மீடியாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

சீட்டுக்கும், ரூபாய் நோட்டுக்கும் பேரம் பேசினால் கூட்டணி அமைவதில் தாமதம் ஏற்படத்தான் செய்யும் என அதிமுகவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மறைமுகமாக சீண்டியுள்ளார். பாஜகவுக்கு எதிராக உள்ள மாநிலம் என்பதால் தான் தமிழகத்தில் மட்டும் சீக்கிரமாக தேர்தல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், பாஜக வெற்றி பெறக்கூடிய மாநிலங்களில் மட்டும் பல கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளதாக விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.