news

News April 27, 2025

இரண்டாவது நாளாக ரோட் ஷோ

image

தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத் கமிட்டி முகவர்களுக்கான கருத்தரங்கை விஜய் நடத்தினர். இன்றும் இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கிற்கு அவர் ஹோட்டலில் இருந்து புறப்பட்டுள்ளார். செல்லும் வழி முழுக்க, திறந்த வாகனத்தில் விஜய் தொண்டர்களை சந்தித்தபடியே செல்கிறார்.

News April 27, 2025

32,438 பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பம்!

image

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 32,438 Group-D பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், 1 பணியிடத்திற்கு 3,329 பேர் மல்லுகட்டுகின்றனர். இது, நாட்டின் வேலைவாய்ப்பின்மையின் அவலம் என எதிர்க்கட்சியினரும், அரசு வேலையின் மீதுள்ள மோகம் என ஒரு தரப்பினரும் விமர்சிக்கின்றனர். எது எப்படியோ மே (அ) ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்குத் தேர்வர்கள் சிறப்பாக தயாராகுங்கள். ALL THE BEST..

News April 27, 2025

செந்தில் பாலாஜி இலாகாக்கள், இனி இவர்கள் வசம்?

image

கோவையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் உதயநிதி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிகளே அமைச்சராக <<16230061>>செந்தில் பாலாஜி <<>>பங்கேற்கும் கடைசி நிகழ்ச்சி எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும், அவர் வசமுள்ள மின்சாரத்துறை தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு, ஆயத்தீர்வை இலாகா முத்துசாமிக்கும் கூடுதலாக அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News April 27, 2025

தோனிக்குப் பதில் இனி இவரா? CSK முக்கிய முடிவு

image

ராஜஸ்தானைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் சர்மாவை (19) CSK பயிற்சி முகாமுக்கு அழைத்துள்ளது. இவரது செயலைப் பார்த்துவிட்டு, அவருக்கு வாய்ப்பு வழங்க CSK நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மோசமான தோல்வியைச் சந்தித்து வரும் CSK அணியில் தோனிக்குப் பிறகு விக்கெட் கீப்பர் யாரும் இல்லை என ரெய்னா கூறியிருந்தார். அதேநேரம், அடுத்த சீசனில் ஒருவேளை தோனி ஆடவில்லையென்றால் என்ற கேள்விக்கு விடை இதுவோ?

News April 27, 2025

வருமான உச்ச வரம்பு உயர்வு: TN அரசு அறிவிப்பு

image

கடந்த ஏப்.17-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளின்படி, தமிழகம் முழுவதும் 86,000 பேருக்கு புறம்போக்கு நிலத்துக்கான பட்டா வழங்கி TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதோடு, புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க வருமான உச்ச வரம்பு ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ₹5 லட்சமாக உள்ள குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்கப்படும்.

News April 27, 2025

CBSE 10,12 தேர்வு முடிவுகள் எப்போது? புதுத் தகவல்

image

CBSE 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதிய மாணவர்கள், முடிவு எப்போது வெளியாகும் என காத்திருக்கின்றனர். அந்த முடிவுகள், கடந்த 2023-ம் ஆண்டு மே 10, மே 9-ம் தேதிகளில் வெளியாகின. இதேபோல் கடந்த 2024ம் ஆண்டு மே 15, மே 12-ம் தேதிகளில் வெளியாகின. இதை சுட்டிக்காட்டியுள்ள கல்வி ஆர்வலர்கள், இந்தாண்டும் மே மாதம் மத்தியிலேயே தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். SHARE IT.

News April 27, 2025

2026-ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி.. உதயகுமார் உறுதி

image

2026 தேர்தலில் வென்று அதிமுக ஆட்சியமைப்பது உறுதி என்று EX அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 2026 தேர்தலுக்கு அதிமுக வலுவான கூட்டணி அமைத்துள்ளதாகவும், ஆதலால் தேர்தலில் வெற்றி உறுதி என்றும் குறிப்பிட்டார்.

News April 27, 2025

சீனாவே காரணம்.. மதுரை ஆதீனம்

image

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தால் பாக்.-க்கு சிந்து நதி நீரை தரக்கூடாது எனக் கூறிய மதுரை ஆதீனம், பாக்.-ஐ தனிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சீனா தான் காரணம் என குற்றஞ்சாட்டிய அவர், வக்ஃபுக்காக போராடுபவர்கள் ஏன் இந்த விவகாரம் குறித்து பேசுவதில்லை என கேள்வி எழுப்பினார். பாகிஸ்தான் ஒரு மதக்கலவர பூமி என குறிப்பிட்ட ஆதீனம், சீனாவை உலக நாடுகள் ஒதுக்க வேண்டும் என்றார்.

News April 27, 2025

சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு?

image

சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ரசிகர்களிடையே ஹாட் டாபிக்காக இது மாறியுள்ளது. KGF படத்தை தயாரித்த ஹொம்பலே நிறுவனம் தான் இப்படத்தையும் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு – சுதா காம்போ.. எப்படி இருக்கும்?

News April 27, 2025

2025 சீசனுடன் தோனி ஒய்வு பெறுகிறாரா?

image

CSK கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில், 2025 சீசனுடன் தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து சில ரசிகர்களிடம் இருக்கிறது. ஒருவேளை அவர் ஓய்வு பெற்று விடுவாரோ என கேள்வி எழுந்த நிலையில், ஒரு ஹேப்பி நியூசை ரெய்னா கூறியுள்ளார். அடுத்த சீசனில், CSK சிறந்த திட்டமிடலுடன் வருவார்கள். தோனி கண்டிப்பாக இன்னும் ஒரு சீசன் விளையாடுவார் எனத் தெரிவித்துள்ளார். நீங்க சொல்லுங்க.. தோனி அடுத்த சீசனில் விளையாடலாமா?

error: Content is protected !!