India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட ஊதியத்தை விலைவாசிக்கு ஏற்ப உயர்த்த மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஊதியத்தில் வேறுபாடு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஊரக மேம்பாட்டுக்கான நிலைக்குழு, நாடு முழுவதும் ஒரே சீரான ஊதியத்தை வழங்கவும் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து பலமுறை பரிந்துரை அளித்தும் செயல்படுத்தவில்லை எனவும் விமர்சித்துள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மூலம் வழங்கப்படும் 4 வருட ஆசிரியர் படிப்பில் (ITEP) சேருவதற்கு நடத்தப்படும் NCET எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்விற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க நாளையே தேதி (மார்ச் 16) கடைசி ஆகும். ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 4 ஆண்டுகால ஆசிரியர் படிப்பில் சேர இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பிக்க <
ஐபிஎல் 2025 தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ளன. இந்நிலையில், 2008 முதல் 2024 வரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் எந்த வீரர் அதிக சதம் அடித்துள்ளார் என்பதை பார்க்கலாம். இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ஆர்சிபி அணி ஆட்டக்காரருமான விராட் கோலியே அதிக சதம் விளாசியுள்ளார். 244 போட்டிகள் விளையாடி இதுவரை 8 சதங்கள், 55 அரைசதங்களை அடித்துள்ளார். ஐபிஎல் 2016ல் 4 சதங்களுடன் 973 ரன்களை குவித்துள்ளார்.
பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவோடு இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும், இந்திய நிதி உதவியுடன் சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் நிலையத்தை அவர் திறந்து வைக்கிறார். 2015ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 4வது பயணம் இதுவாகும்.
பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற எத்தகைய தியாகத்தையும் செய்பவர்தான் அம்மா. டெல்லியில் ஒரு தாய், தனது மகனுக்கு இரண்டாம் முறையாக உயிர் கொடுத்துள்ளார். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மகன் ராஜேஷுக்கு, 80 வயதான தாய் தர்ஷனா ஜெயின், தனது சிறுநீரகத்தை தானம் செய்து மறுவாழ்வு அளித்துள்ளார். தாயும், தானும் நலமுடன் இருப்பதாக ராஜேஷ் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அம்மா எப்பவுமே கிரேட் தான்!
ரோஜாக் கூட்டம், பூ, பிச்சைக்காரன் என தனித்துவமான படைப்புகளால் தனியே தெரியும் சினிமா இயக்குநர்களில் ஒருவர் சசி. மண்மணம் சார்ந்த படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் சசிக்குமார். இருவரும் புதிய படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ‘லப்பர் பந்து’ நாயகி ஸ்வாசிகா நடிக்க இருப்பதாகவும், படப்பிடிப்பு அடுத்த மாதம் கள்ளக்குறிச்சியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? என ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், வேளாண்மையை மேம்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமையவில்லை என விமர்சித்துள்ளார். கரும்புக்கு ஊக்கத் தொகை போன்ற அறிவிப்புகள் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் இருக்கிறது. கடந்த காலங்களை போல நடப்பு பட்ஜெட்டும் வளர்ச்சியை தராது என கூறியுள்ளார்.
யார் எந்த மொழியில் பேசினாலும், அதை குறிப்பிட்ட ஒரு மொழியில் மட்டுமே கேட்கும் வகையில் ஏர்பாட்ஸ்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏதுவாக இந்தாண்டு இறுதியில் ஏர்பாட்ஸ் சாப்ட்வேர் அப்டேட்டுகளை கொடுக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை செய்ததும் பிறர் எந்த மொழியில் போனில் பேசினாலும், அதை நாம் விரும்பும் மொழியில் கேட்க முடியும் எனச் சொல்லப்படுகிறது.
ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் 0.25 புள்ளிகள் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதை பின்பற்றி, வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைத்தன. இந்நிலையில், பணவீக்கத்திற்கு ஏற்ப ஏப்ரல், ஜூன், அக்டோபரில் தலா 0.25 புள்ளிகள் என 0.75 புள்ளிகள் ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கக்கூடும் என எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது. அப்படி குறைத்தால், வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி மேலும் குறையக்கூடும்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோஹித் ஷர்மா கேப்டனாக தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர் தோல்வி காரணமாக AUS எதிரான BGT தொடரின் கடைசி டெஸ்டில் ரோகித் பங்கேற்காமல் வெளியேறினார். இதனால் டெஸ்ட் கேப்டனாக அவரது எதிர்காலம் குறித்த விவாதம் எழுந்தது. இதற்கிடையே, CT கோப்பையை IND கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித்தை நியமிக்க BCCI நிர்வாகிகள் விரும்புவதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.