India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை வருகிறது. ஏப்.1 இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கு சேவை கிடையாது. ஏப்.9 தெலுங்கு புத்தாண்டு, ஏப்.10 (அ) ஏப்.11 ரம்ஜான், ஏப்.19 தமிழகத்தில் தேர்தல். இத்துடன் (ஏப்.7, 14, 21, 28) ஞாயிற்றுக்கிழமைகள், 2வது (ஏப்.13), 4வது (ஏப்.27) சனிக்கிழமைகளில் விடுமுறையாகும். இதற்கேற்ப உங்கள் நிதி தேவையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

தேர்தல் பத்திரம் அரசியலமைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு 3 நாள்களுக்கு முன்பு, 10,000 பத்திரங்களை அச்சிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது அம்பலமாகியுள்ளது. ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, தலா ரூ.1 கோடி மதிப்பு கொண்ட 10,000 பத்திரங்களை அச்சிட ஒப்புதல் அளித்தது, 2 வாரங்களுக்கு பிறகு நிறுத்த எஸ்பிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டது தெரிய வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

வேட்டையாடு விளையாடு படத்தில் பிணத்திற்கு டேனியல் பாலாஜி மேக்கப் போட்டுள்ளார். அந்த படத்தில் ஒரு காட்சிக்காக பிணத்திற்கு மேக்கப் போட வேண்டியிருந்தது. அதற்கு வெளிநாட்டு மேக்கப் கலைஞர்கள் அதிக தொகையை கேட்டுள்ளனர். இதனால் கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் யோசித்த நிலையில், தான் மேக்கப் போட்டு விடுவதாக கூறி, பிணத்திற்கு மேக்கப் போட்டுள்ளார். இதை டேனியல் பாலாஜி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட 1,749 பேர் மனுத்தாக்கல் செய்த நிலையில், 1,085 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

மன்சூர் அலி கானை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக அதன் தலைவர் மன்சூர் அலி கான் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்புமனுவில் அவர் குற்ற வழக்குகள் தொடர்பான விவரத்தை மறைத்துள்ளார் எனக்கூறி சென்னையை சேர்ந்த பாரி என்பவர் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார். புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிதம்பரத்தில் நான் போட்டியிட்டால் திருமாவளவன் வெற்றி பெற முடியாது என்பதால் பாஜக என்னை நிற்க விடவில்லை என்று அக்கட்சியில் இருந்து விலகிய தடா பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். திருமாவளவனுக்கு ஆதரவாக பாஜக செயல்படுகிறது. இதன் காரணமாகவே, சிதம்பரம் தொகுதியில் என்னை கேட்காமல் கார்த்திகாயினிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது எனவும் புகார் கூறியுள்ளார்.

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க முடிந்ததா? என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி இந்தியை பரப்புவதாக ஒரு பொய் செய்தியை முதல்வர் ஸ்டாலின் பரப்பி வருவதாக சாடினார். மேலும், திமுக தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் முதல்வரே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியர்களுக்கு உரிமையை பெற்று தந்துவிட்டு பாமகவுக்கு முதல்வர் பாடம் எடுக்கலாம் என ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பிற சமூகங்களின் பிரச்னைகளை ஓடோடி கேட்டு நிறைவேற்றும் முதல்வர், வன்னிய சமூக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கிறார். முதல்வர் நினைத்திருந்தால் வன்னியர் இட ஒதுக்கீடு எப்போதோ நிறைவேற்றப்பட்டிருக்கும். அரசியல் காரணமாக திமுக இதில் அலட்சியம் காட்டுகிறது” என்றார்.

கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங்கிற்கு ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி பேட் பரிசளித்துள்ளார். இந்திய அணி சார்பில் 20 ஓவர் போட்டிகளில் புதிதாக களமிறங்கியுள்ள ரிங்கு சிங், அதிரடியாக கலக்கி வருகிறார். அவர் ஐபிஎல்லில் கொல்கத்தா அணி சார்பில் விளையாடி வருகிறார். நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு கோலியை அவர் சந்தித்தார். அப்போது அவருக்கு கோலி, ஒரு பேட்டை பரிசாக வழங்கினார்.

விசிக என்றால் விழுப்புரம், சிதம்பரம் பகுதி கட்சி என அண்ணாமலை விமர்சித்துள்ளார். சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்திகாயினியை ஆதரித்து பேசிய அவர், “விசிகவுக்கு பொதுத் தொகுதி தரவில்லை என்றால் தீக்குளிப்போம் அக்கட்சி நிர்வாகிகள் கூறினார்கள். இப்போது திமுக பொதுத்தொகுதியை கொடுத்துவிட்டதா? வாயை திறந்தால் திருமாவளவன் பொய் பேசுகிறார். அவரின் பொய் இந்தமுறை சிதம்பரத்தில் எடுபடாது” எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.