India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சந்தோஷ் தாஸ் என்பவரின் நுரையீரலில் இருந்து 8 cm நீளமுள்ள கத்தியை ஒடிசா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். 3 வருடங்களுக்கு முன்பு பெங்களுருவில் கத்தியால் குத்தப்பட்ட தாஸுக்கு சிகிச்சை முடிந்தபின்பும் வறட்டு இருமல் இருந்துள்ளது. இதற்காக 8 மாதங்களாக சிகிச்சை பெற்ற நிலையிலும் குணமாகவில்லை. இந்நிலையில், சிடி ஸ்கேனில் கத்தி இருந்தது கண்டறியப்பட்டு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் இருந்து சிகாகோ நோக்கி சென்று கொண்டிருந்த சவுத்வெஸ்ட் விமானத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென ஆடைகளை களைந்த பெண் பயணி ஒருவர், தனது சீட்டிலேயே மலம் கழித்துள்ளார். பெண்ணின் செயலைக் கண்ட சக பயணிகளை அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் இவ்வாறு விநோதமாக நடந்துகொள்ள என்ன காரணம் என்று விசாரணை நடைபெறுகிறது.
பான், ஆதார், வாக்காளர் அட்டை என இவற்றில் ஏதேனும் ஒன்றில் பெயரை மாற்றவே பெரும்பாடு படவேண்டிய சூழல் இனி இல்லை. ஒரே நேரத்தில் அனைத்து அரசு அடையாள அட்டைகளிலும் பெயரை மாற்றிக்கொள்ளலாம். இதற்கான, ஒரு ஒருங்கிணைந்த ஒரு டிஜிட்டல் போர்ட்டலை விரைவில் மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பெயர் மட்டுமின்றி மக்கள் தங்கள் முகவரி, எண் போன்றவற்றை ஒரே இடத்தில் புதுப்பிக்க முடியும். காத்திருப்போம்!
பாகிஸ்தான் மேலும் ஒரு சிக்கலை சந்தித்துள்ளது. அந்நாட்டில், ஒரு ‘மருத்துவ அவசரநிலை’ எழுந்திருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ரத்தானதை அடுத்து, புற்றுநோய், ரேபிஸ் போன்ற சில நோய்களின் மருந்துகளை சேமிக்க அந்நாட்டின் Ministry of Health அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் தற்போது அதன் மருந்து தேவைகளில் 30% – 40% வரை இந்தியாவை நம்பியுள்ளது.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
CM ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் வயிற்று வலி, வாந்தி காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியிருந்த நிலையில், இன்று(ஏப்.27) மீண்டும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
MI vs LSG போட்டியில் ரோஹித் ஷர்மா, ஒரு மாபெரும் சாதனையின் விளிம்பில் இருக்கிறார். இன்று அவர், 5 சிக்ஸர்களை அடித்தால், IPL-ல் 300 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை பெறுவார். இப்போட்டியில் டாஸ் வென்ற LSG கேப்டன் பண்ட், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ரோஹித் ரெக்கார்ட் படைச்சிடுவாரா..?
*பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, A, B, C வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. *இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்னைகளை சரி செய்கிறது. *குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. *ரத்தத்தில் உள்ள உப்பின் அளவை சரியான அளவில் பராமரித்து உடலின் குளிர்ச்சியை அதிகரிக்கிறது.
ஹாலிவுட் நடிகர் பிலிப் லோரி (88) காலமானார். வயது மூப்பின் காரணமாக அவர் காலமானார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஒரு டிவி தொடரின் கதாபாத்திரத்தில் நீண்ட காலம் நடித்தவர் என்ற கின்னஸ் சாதனை இவரையே சேரும். ஹாலிவுட்டில் மிக பிரபலமான ‘Coronation Street’ சீரியலில் 1960-1968 வரை டெனிஸ் டேனராக நடித்தவர், பிறகு மீண்டும் அதே கதாபாத்திரத்தில் 2011 முதல் இறக்கும் வரை நடித்துள்ளார். #RIP.
மும்பையில் நடைபெறும் இன்றைய IPL போட்டியில் MI, LSG அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற LSG கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறார். MI, LSG என இரு அணிகளும் முறையே, 5 & 6-வது இடங்களில் இருப்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், DC, RCB அணிகள் மோதவுள்ளன.
Sorry, no posts matched your criteria.