India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்டத்தில் இன்று வேலை நாளாக இருந்தாலும், பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். டிச.30-ம் தேதி அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்கும். இதேபோல், மற்ற மாவட்டங்களுக்கும் குடியரசு தினம் உள்பட 3 நாள்கள் தொடர் விடுமுறை. அதேநேரத்தில், தென்காசியில் நவ.24-ல் விடப்பட்ட மழை விடுமுறையை ஈடுசெய்ய, இன்று அனைத்து பள்ளிகளும் இயங்கும். SHARE IT

நேற்று நடந்த NDA கூட்டணி பொதுக்கூட்டத்தில், மோடியை தொடர்ந்து EPS, TTV, அன்புமணி என பலரும் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தனர். அந்த வரிசையில் அண்ணாமலை, சூரியன் மறையும்போது மழை வரும்; அப்போது தமிழ்நாட்டில் இலை துளிர்த்து தாமரை மலரும் எனவும், 2026 தேர்தலில் EPS வெற்றி பெற்று முதலமைச்சராவார் என்று பேசினார். மேலும், திமுக ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இருக்கிறோம் என்றார்.

தமிழகத்தில் இன்று கடலோரம் மற்றும் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. மேலும், குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என மீனவர்களையும் எச்சரித்துள்ளது.

▶ஜனவரி 24, தை 10 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சஷ்டி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவது குறையும்.*இதயம், தலைமுடி, சருமம், வயிறு போன்றவற்றிற்கு நன்மை. *செரிமானம் மேம்படும். *சருமம் பொலிவு பெறும். *நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். *ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். *அதிகளவில் இல்லாமல் அளவுடன் சாப்பிடுவது நல்லது.

சனே டகாய்ச்சி, ஜப்பான் பிரதமராக பதவியேற்ற 3 மாதங்களில் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்கு குறைந்த பெரும்பான்மை உள்ளதால், ஆளுங்கட்சியின் பலத்தை நிரூபிக்க இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ஜப்பானின் முதல் பெண் பிரதமரான இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

நடிகை பாவனா கேரள சட்டமன்ற தேர்தலில் சிபிஐ(எம்) வேட்பாளராக களமிறங்குவதாக SM-ல் தகவல்கள் தீயாய் பரவின. இதுகுறித்து பேசிய அவர், இது முற்றிலும் பொய்யான செய்தி எனவும் தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளியும் இல்லாதபோது, இதுபோன்ற வதந்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை எனவும் கூறினார். மேலும், இந்த செய்தியை பார்த்து நான் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை என்றார்.

மணத்தக்காளி கீரை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். *செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். *வயிற்று புண், அஜீரணம், மலச்சிக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும். *தோல் நோய்கள், முகப்பரு, தோல் அரிப்பு ஆகியவற்றை நீக்கும். *நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். *இதில் வைட்டமின்கள் ஏ, சி, இ, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

சீனாவுடன் வணிகம் செய்வது கனடாவுக்கு ஆபத்து என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர், கோல்டன் டோம் கிரீன்லாந்தின் மீது கட்டப்பட்டால் அது கனடாவையும் பாதுகாக்கும். இருப்பினும், கனடா அதற்கு எதிராக உள்ளது. ஆனால், இதற்கு பதிலாக சீனாவுடன் வர்த்தகம் செய்வதற்கு ஆவலோடு உள்ளது. ஆனால், ஒரு வருடத்திற்குள்ளேயே சீனா அவர்களை தின்றுவிடும் என்று தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவி தற்போது இந்தியில் 2 படங்களில் நடித்துள்ளார். ஆமிர் கான் மகன் ஜூனைத் கானின் ஜோடியாக ‘ஏக் தின்’ என்ற படத்திலும், ‘ராமாயணா’ படத்திலும் நடித்துள்ளார். ‘ஏக் தின்’ படத்தில் அவரே டப்பிங் பேசியிருக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய ஆமிர் கான், சாய் பல்லவி அருமையாக நடித்துள்ளதாகவும், தென்னிந்தியாவின் மிகச் சிறந்த நடிகை என்று சாய் பல்லவியை பாராட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.