news

News November 2, 2025

Co-Star மீது புகாரளித்த Stranger Things பிரபலம்

image

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரில் El கேரக்டரில் நடித்த மில்லி பாபி ப்ரவுன், டேவிட் ஹார்பர் மீது bullying, harassment குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் கசிந்துள்ளது. இறுதி சீசன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், அவர் இதுகுறித்து NETFLIX-யிடம் புகார் அளித்திருக்கிறார். இதன் மீதான விசாரணை மாதக்கணக்கில் நடந்ததாக கூறப்படுகிறது. இது பாலியல் ரீதியான குற்றச்சாட்டு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News November 2, 2025

குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி: செல்வப்பெருந்தகை

image

SIR தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம், CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, நியாயமான முறையில் வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் வெற்றி பெற பாஜக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

News November 2, 2025

ஓடும் ரயிலில் பயணிகளுக்கு கத்திக்குத்து!

image

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அருகே ஹண்டிங்டன் ரயிலில் சென்றுகொண்டிருந்த பயணிகள் மீது சரமாரியாக கத்திகுத்து தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தால் பலத்த காயங்களுடன் 10 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ரயிலில் நடந்த கொடூரமான சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது என UK PM கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

News November 2, 2025

நாளை அனைத்து மாவட்டத்திற்கும் HAPPY NEWS

image

தமிழகம் முழுவதும் தாயுமானவர் திட்டத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு நாளை முதல் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் என TN அரசு அறிவித்துள்ளது. முக்கிய அம்சமாக, முதியோர்களின் வயதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 70 வயதை கடந்தவர்களுக்கு வீடு தேடி பொருள்கள் வழங்கப்பட இருந்தது. தற்போது, 65 வயது நிரம்பினாலே ரேஷன் பொருள்கள் வீட்டிற்கே கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

விவசாயிகளை தேடி வரும் அரசு திட்டம்

image

வேளாண் நலத்துறையின் அனைத்து திட்டங்களையும் அதன் பயனையும் நேரடியாக விவசாயிகளின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்கிறது உழவரைத் தேடி வேளாண்மை திட்டம். இதன் கீழ், விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது & 4-வது வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த கிராமங்களில் நடக்கும். விவசாயிகளே, உங்களுக்கு சந்தேகங்கள், கோரிக்கைகள் இருந்தால் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம். அனைவரும் தெரிந்துகொள்ள SHARE THIS.

News November 2, 2025

தாலிக்கொடியில் Safety pin-ஐ மாட்டி வெக்குறீங்களா?

image

எங்காவது வைத்துவிட்டால், அவசரத்துக்கு தேட முடியாது என்ற காரணத்தால், பல பெண்களும் தாலியில் Safety Pin-ஐ மாட்டி வைப்பார்கள். ஆனால், இரும்பினால் செய்யப்படும் Safety pin-ஐ தாலியுடன் கோர்த்து வைத்திருப்பது நல்லதல்ல என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஜோதிடத்தின் படி, இரும்பு சனி பகவானின் பார்வை பெற்ற உலோகமாகும். இது எதிர்மறை ஆற்றலை கொடுக்கும் என்பதால், தாலியுடன் போட வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். SHARE IT.

News November 2, 2025

மரணப்படுக்கையில் தமிழ் சினிமா பிரபலம்

image

குடும்பங்கள் கொண்டாடும் படங்களை இயக்கிய இயக்குநர் வி.சேகர் மரணப்படுக்கையில் இருக்கிறார். தற்போது அவரின் உடல்நிலை மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் குணமடைந்து மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிய சினிமா பிரபலங்கள் ஹாஸ்பிடலுக்கு நேரில் செல்லவுள்ளனர்.

News November 2, 2025

SIR மேற்கொள்வதில் அவசரம் ஏன்?: கமல்

image

தகுதியான ஒருவரின் பெயர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். CM ஸ்டாலின் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அவர், வாக்களர் பட்டியலை சரிபார்ப்பது அவசியம்தான் ஆனால் அதில் அவசரம் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 2026 தேர்தலுக்கு பிறகே SIR பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News November 2, 2025

மெஸ்ஸியின் டூரில் அதிரடி மாற்றம்

image

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி டிசம்பர் இந்தியா வரவுள்ளார். கொச்சியில் கால்பந்து விளையாட்டில் பங்கேற்க இருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டு, சுற்றுப்பயணத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அட்டவணையில் முதலில் அகமதாபாத் நகருக்கு அவர் செல்வதாக இருந்த நிலையில், புதிய அட்டவணையில் அகமதாபாத்துக்கு பதிலாக, அவர் ஹைதராபாத் வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் சென்னைக்கும் வந்திருக்கலாம்ல?

News November 2, 2025

நடிகர் அஜித்துக்கு உதயநிதி ரியாக்‌ஷன்

image

கரூர் துயர சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் கூறியது எந்த கருத்தாக இருந்தாலும் அது பாராட்டதக்கதுதான் என DCM உதயநிதி கூறியுள்ளார். ஆனாலும், இதற்கு முறையாக யார் பேட்டி கொடுக்கனுமோ அவர் இன்னும் கொடுக்கவில்லை என்றார். முன்னதாக அஜித்குமார் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கரூர் துயர சம்பவத்தில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளதாகவும், தனி ஒருவர் மீது குறை கூறுவது நியாயமாகாது எனவும் பேசியிருந்தார்.

error: Content is protected !!