India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சட்டப்பேரவையில் காரசாரமாக விவாதம் நடந்து வரும் நிலையில், EPSக்கு ஆதரவாக OPS குரல் கொடுத்தார். கடன் வாங்காமல் இருக்க அமைத்த குழு என்ன செய்கிறது என இபிஎஸ் கேள்வி எழுப்பினார். அவரின் பேச்சை இடைமறித்து, அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் சொல்ல முயற்சித்தார். இதை பார்த்த உடன், சட்டென்று எழுந்த OPS, கடன்களை மூலதனங்களுக்கே செலவிட வேண்டும் என EPSக்கு ஆதரவாக பேசினார். இதை அங்கிருந்த அனைவரும் உற்று நோக்கினர்.
ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால், போலி Loan Appகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். பணம் தேவைப்படும் மக்களை குறிவைத்து, மிகக்குறைந்த வட்டி, விரைவான ஒப்புதல் என ஆசை வார்த்தைகள் கூறி மோசடிக் கும்பல்கள் வலை விரிக்கின்றன. இதை நம்பி, Loan Appகளை பதிவிறக்கம் செய்யும்போது, பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, மோசடி அரங்கேற்றப்படுவதாக எச்சரித்துள்ளனர்.
அனைத்து பள்ளிகளிலும் வரும் 26ம் தேதி பெற்றோர் – ஆசிரியர் கழக கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், Good touch, Bad touch குறித்தும், POCSO சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
கடந்த 5 ஆண்டுகளில் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை ₹400 கோடி வரி செலுத்தியுள்ளதாக அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். GST வரியாக ₹270 கோடியும் பிற வரி வகைகளின் கீழ் ₹130 கோடியும் அரசுக்குச் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோயிலுக்கு கூட வரியா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
எதிரெதிர் துருவங்களாக திரும்பியிருக்கும் EPS, OPS & செங்கோட்டையன் மூவரும் இன்று சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக ஒரே அணியில் நின்றனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் R.B. உதயகுமார் கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் செங்கோட்டையனும், ஓ.பன்னீர்செல்வமும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இருப்பினும், வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வி கண்டது.
டாஸ்மாக்கிற்கு எதிரான பாஜகவின் போராட்டத்தை வரவேற்பதாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், மது ஒழிப்பு வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவை வலியுறுத்தி வருகிறோம் எனக் குறிப்பிட்ட அவர், மதுபானம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அதுதான் எங்களின் கொள்கை, அதற்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் வரவேற்போம் என்றும் கூறியுள்ளார்.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை டாஸ்மாக் ஊழல் பணத்தை வைத்து திமுக நடத்த திட்டமிட்டுள்ளதாக, <<15788153>>அண்ணாமலை <<>>குற்றம் சாட்டியுள்ளார். செந்தில் பாலாஜி என்ன உத்தமரா?, காந்தியவாதி போல் திமுகவினர் வேடமிடுகின்றனர் என்று விமர்சித்த அவர், தலை முதல் கால் வரை ஊழல் ஆட்சி நடைபெறும் அமைச்சரவையில் உள்ளவர்தான் செந்தில் பாலாஜி என்றும் சாடியுள்ளார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில், அப்பாவு மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தார். தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர், அப்பாவு அவையை விட்டு வெளியேறினார். தற்போது, மீண்டும் இருக்கையில் அமர்ந்திருக்கும் அவர், “தவறு செய்திருந்தால் நானே திருத்தியிருப்பேன். அல்லது முதல்வரால் திருத்தப்பட்டிருப்பேன்” என்று பேசினார்.
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக, அதிமுகவினர் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம், டிவிஷன் வாக்கெடுப்பிலும் தோல்வியடைந்தது. தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்ட பின்னர், துணை சபாநாயகர் நடத்திய குரல் வாக்கெடுப்பில் அது தோல்வி கண்டது. பின்னர், EPS கோரிக்கையை ஏற்று நடத்தப்பட்ட டிவிஷன் வாக்கெடுப்பிலும் தீர்மானம் தோல்வி கண்டுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 63 பேரும் எதிராக 154 பேரும் வாக்களித்தனர்.
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை டிவிஷன் முறையில் நடத்த வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தினார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், கடந்த கால சம்பவங்களுக்கும், அப்பாவுவிற்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பிய அவர், நாங்களும் பேச ஆரம்பித்தால் அவையில் மீண்டும் கூச்சல் ஏற்படும். இதனால் அமைதியாக இருக்கிறோம் என்று இபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்தார்.
Sorry, no posts matched your criteria.