news

News March 17, 2025

சுனிதாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

image

9 மாதங்களாக விண்வெளியில் <<15786194>>மாட்டிக் கொண்டுள்ள<<>> சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவருக்கும் எவ்வளவு சம்பளம் தெரியுமா? அமெரிக்காவின் மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும் மிக அதிகமான GS-15 சம்பள பிரிவில் இருப்பதால், இந்திய மதிப்பில் ₹1.08 முதல் ₹1.41 கோடி வரை சம்பளம் கிடைக்கும். கூடுதல் வேலை நாட்களுக்கு ஒரு நாளைக்கு ₹347 என்ற அளவில், 9 மாதங்களுக்கு மொத்தம் ₹1 லட்சம் தான் கூடுதலாக கிடைக்குமாம்.

News March 17, 2025

அப்பாவு ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்: EPS

image

சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய EPS, பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். பல நேரங்களில் சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார், தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதை நேரலையில் வழங்குவதில்லை ஆகிய குற்றச்சாட்டுகளை EPS கூறினார். சபாநாயகர் அவையில் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

News March 17, 2025

ஊர் அறியட்டும் தமிழரின் பெருமை

image

தமிழர்களின் நிதி நிர்வாகம் குறித்த ‘தமிழர் நிதி நிர்வாகம் – தொன்மையும் தொடர்ச்சியும்’ என்ற நூலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். நிதித்துறை சார்பில் தொகுக்கப்பட்டிருந்த இந்நூலில், பண்டைய தமிழரின் நிதி மேலாண்மை குறித்து விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான சிறப்பு இணையதள பக்கத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் மூலம், தமிழர்களின் சிறப்பான நிதி நிர்வாகத்தை உலகம் அறியும்.

News March 17, 2025

சபாநாயகரை பதவிநீக்க கோரி தீர்மானம்

image

சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடங்கியுள்ளது. சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் RB உதயகுமார் முன் மொழிந்தார். அதற்கு 35 பேருக்கு மேல் ஆதரவு இருந்ததால் தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு OPS & செங்கோட்டையன் இருவரும் ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2025

செங்கோட்டையனை சமாதானம் செய்ய முயற்சி

image

அதிமுக தலைமையுடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் செங்கோட்டையனை சமாதானம் செய்ய மூத்த தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இன்று காலை EPS தலைமையில் நடைபெற்ற அதிமுக MLAக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து, தங்கமணி, SP வேலுமணி, KP முனுசாமி ஆகியோர் செங்கோட்டையனை தனிமையில் சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சமாதானம் ஆவாரா செங்கோட்டையன்?

News March 17, 2025

ஆடு, கோழி, சேவல் விலை உயர்ந்தது

image

தென் மாவட்டங்களில் அம்மன் கோயில்களில் பங்குனித் திருவிழா தொடங்க உள்ளதால், கோழி, சேவல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தென்மாவட்ட வியாபாரிகள், கிராம மக்கள் ஆடு, கோழி, சேவலை வாங்க தொடங்கியுள்ளனர். இதனால், 1kg எடைகொண்ட சேவல் ₹350க்கு விற்ற நிலையில், தற்போது ₹450 – ₹500 வரையும், 1kg எடைகொண்ட நாட்டுக்கோழி விலை ₹450 இல் இருந்து ₹1500 வரையும் விற்பனையாகிறது. ஆடு (ஒன்றுக்கு) ₹3000 வரை உயர்ந்துள்ளது.

News March 17, 2025

நடிகை ரன்யா ராவ் குறித்து அசிங்கமாக பேசிய எம்எல்ஏ

image

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் குறித்து பாஜக எம்எல்ஏ பசன்கவுடா பாட்டீல் அறுவறுப்பாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடலில் எங்கெல்லாம் ஓட்டைகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் தங்கத்தை பதுக்கி கடத்தினார் என அவர் அறுவறுப்பாக பேசியதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. அதே சமயம் இந்த வழக்கில் தொடர்புடைய மாநில அமைச்சர்களின் பெயர்களை அம்பலப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

News March 17, 2025

ஆடு பகை… குட்டி உறவு..!

image

EPSஐ தொடர்ந்து புறக்கணித்து வரும் செங்கோட்டையன், இன்றைய சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டார். அப்போது, கடம்பூர் ராஜூவுடன் அவர் தீவிரமாக பேசிக் கொண்டிருந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. தலைமையுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் செங்கோட்டையன், மற்ற தலைவர்களையும் தன் வசம் இழுக்கிறார் என்று பேச்சு அடிபடும் வேளையில், இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது. என்னதான் நடக்கிறது அதிமுக கூடாரத்தில்!

News March 17, 2025

வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்!

image

சென்னையில் வெள்ளி விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று (மார்ச் 17) காலை வர்த்தகப்படி கிராம் ஒன்றுக்கு ₹1 உயர்ந்து ₹113க்கு விற்பனையாகிறது. இது வரலாறு காணாத புதிய உச்சமாகும். இதனால், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,13,000க்கு விற்பனையாகிறது. கடந்த 1ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி ₹105க்கு விற்பனையான நிலையில், 17 நாள்களில் கிராமுக்கு 8 ரூபாயும், கிலோவுக்கு ₹8,000 ரூபாயும் உயர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.

News March 17, 2025

குடிநீரால் நின்ற திருமணம்.. கண்ணீரில் மணமக்கள்!

image

இதுக்கெல்லாமா கல்யாணம் நிற்கும் எனச் சிந்திக்க வைக்கிறது இந்த சாம்ராஜ்நகர் சம்பவம். கர்நாடகாவின் ஹிரியூரில் மனோஜ் – அனிதா ஜோடிக்கு நேற்று திருமணம் செய்ய கோலாகலமாக ஏற்பாடுகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு நடந்த வரவேற்பு விழாவுக்கு தாமதமாக வந்த சிலருக்கு தண்ணீர் பாட்டில் வைக்கவில்லையாம். இதனால் ஏற்பட்ட மோதலால் கல்யாணமே நின்றுபோய் கடைசியில் கண்ணீருடன் இளம்ஜோடி மண்டபத்தை காலி செய்த அவலம் நடந்துள்ளது.

error: Content is protected !!