India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

<<18173836>>ஆந்திர கோயில் கூட்டநெரிசல் <<>>விவகாரத்தில், கோயில் நிர்வாகம் அரசுக்கு தகவல் தெரிவித்து இருந்தால், உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் என அம்மாநில CM சந்திரபாபு நாயுடு தெரிவித்து இருந்தார். ஆனால், சொந்த நிலத்தில் கோயில் கட்டிய நான் ஏன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என அக்கோயிலை கட்டிய ஹரி முகுந்தா பாண்டா கூறியுள்ளார். மேலும், எத்தனை வழக்குகளை போட்டாலும் தனக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இன்று இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் அடிக்கப்பட்ட ஒவ்வொரு சதமும் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது மட்டுமல்ல, பெண்கள் கிரிக்கெட்டின் தரத்தையும் உயர்த்தி உள்ளது. சதம் அடித்த வீராங்கனைகள் யார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.

நாடு முழுவதுமுள்ள அனைத்து CBSE பள்ளிகளுக்கான கல்வி செயல்திறன் அட்டை(ரிப்போர்ட் கார்டு) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 10, +2 மாணவர்களின் கல்வி திறன் விவரங்கள் பாடவாரியாக ரிப்போர்ட் கார்டில் இடம்பெற்றிருக்கும். இதன்மூலம், மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் குறைவான மார்க் பெற்றுள்ளனர் என அறிந்து கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். SHARE IT.

தமிழக மக்களின் வாக்குரிமையை பறித்து, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் SIR-க்கு எதிராக, ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்து கட்சிகளின் கடமை என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், கூட்டத்தில் பங்கேற்காதவர்கள் தங்களுடைய கட்சிகளில் SIR குறித்து விவாதித்து, ஜனநாயகத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நவ.14 முதல் ஜன.16 வரை 2 மாதங்களுக்கு இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். வெள்ளி இரவு 11.55-க்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.30-க்கு கொல்லத்தை அடையும். மறுமார்க்கத்தில் சனி இரவு 7.35-க்கு புறப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

மகளிர் ODI உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இன்று தென்னாப்பிரிக்கா – இந்தியா அணிகள் மோதுகின்றன. இதன் போது மழை குறுக்கிட்டதால், போட்டி தாமதமாகிறது. இன்று முழுவதும் மழை பெய்தால், போட்டி நாளை நடைபெறும். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த லீக் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் வென்று இந்திய மகளிர் அணி வாகை சூடுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என நேற்று அறிவித்த நிலையில், இன்று மாலை சட்ட வல்லுநர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை செய்கிறார். ஆலோசனைக்குபின், நாளை அவரது தரப்பில் வழக்கு தொடரப்படும் என தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, நவ.5-ல் OPS, TTV, செங்கோட்டையன் இணைந்து ஆதரவாளர்களையும், பிரிந்து சென்றவர்கள் மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களையும் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

Whatsapp-ல் கடந்த சில நாள்களாக, RTO Challan என்ற பெயரில் மெசேஜ் வருகிறது. அதில், உங்க வண்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, உடனே Check பண்ணுங்க, இல்லையேல் FIR போடப்படும் என தகவலும் சேர்த்து அனுப்பப்படுகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால், ஒரு APK File டவுன்லோடாகி, போனில் இருக்கும் அனைத்து தகவலையும் திருடி விடுவதாக கூறப்படுகிறது. எனவே, இது போன்ற மெசேஜுகள் வந்தால், மக்களே உஷாரா இருங்க. SHARE IT.

அனைவருக்கும் ஓரளவு சமைக்க முடியும். ஆனால், சிலரால் மட்டுமே சுவையாக சமைக்க தெரியும். ஆனால், இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. உங்களின் உணவும் டெஸ்ட்டியாக இருக்க, சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்து டிப்ஸை தெரிஞ்சிக்கோங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள். அதே போல, உங்களுக்கு தெரிஞ்ச சில சமையல் டிப்ஸையும் கமெண்ட் பண்ணுங்க.

இந்தியாவுக்கு எதிரான 3-வது T20-ல் ஆஸி.,யின் டிம் டேவிட் அதிரடி காட்டி வருகிறார். இதுவரை 3 சிக்ஸர், 7 பவுண்டரி பறக்கவிட்டுள்ளார். தற்போது 10 ஓவர்களில் ஆஸி., அணி 84/4 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. டிராவிஸ் ஹெட், இங்கிலிஸ், ஓவன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அரைசதம் கடந்துள்ள டிம் டேவிட் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளார். மேலும், T20I-களில் அவர் 1,000 ரன்களை கடந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.