India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தவெகவிடம் தற்போது இரண்டு தேசிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. NDA கூட்டணிக்கு அழைக்கும் பாஜக, கேட்கும் தொகுதிகள், கைகாட்டுபவர்களுக்கு MP சீட், Dy CM சீட் தருவதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறது. இன்னொரு பக்கம் டெல்லி காங்கிரசும் பேசிவருவதாக சொல்கின்றனர். எனவே கூட்டணி வைத்து போட்டியா, தனித்து போட்டியா என பனையூரில் தீவிர ஆலோசனை நடந்துவருவதாக தகவல் கசிந்துள்ளது.

‘ஜன நாயகன்’ பட சென்சார் வழக்கு தொடர்பாக ஜன.27 காலை 10.30 மணிக்கு சென்னை HC தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனால் படக்குழு மட்டுமல்லாது, விஜய் ரசிகர்களும் குஷியில் உள்ளனர். ஒருவேளை படத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்தால் பிப்ரவரி 2-வது வாரத்திலேயே ஜன நாயகன் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விஜய் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

‘ஜன நாயகன்’ தணிக்கை வழக்கில் பாஜகவின் தலையீடு இருந்தால் அதை விஜய் வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். ஆனால், பாஜக மற்றும் மோடி அரசை எதிர்ப்பதற்கு விஜய் தயாராக இல்லை என்றும், அவர் அச்சப்படுகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிவதாகவும் திருமாவளவன் பேசியுள்ளார். மேலும், எதற்காக அச்சப்படுகிறார் என்ற காரணத்தை மக்களிடம் விஜய் கூறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி, ➤கரிசலாங்கண்ணியை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ➤நரம்பு மண்டலத்தில் உள்ள கபால நீரும், பித்தப்பையில் உள்ள கெட்ட பித்தத்தையும் இது வெளியேற்றும் ➤குழந்தைகளுக்கு 2 சொட்டு கரிசலாங்கண்ணிச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கும் ➤மஞ்சள் காமாலை போன்ற அனைத்து வகை காமாலை நோய்களுக்கும் கரிசலாங்கண்ணி கீரை சிறந்த மருந்து. SHARE IT.

2017-ல் மதுரையில் எய்ம்ஸ் வரப்போவதாக சொல்லி, 2019-ல் அதற்கான செங்கல்லை வைத்தனர். 8 ஆண்டுகள் ஆகியும் கட்டி முடிக்கப்படவில்லை என உதயநிதி கூறியுள்ளார். தேர்தல் வருவதால் PM மோடி 10 முறையாவது TN வருவார் என்ற அவர், அப்படி வருபவரை மதுரைக்கு கூட்டிச்சென்று எய்ம்ஸுக்கு விடிவுகாலம் வரச்செய்ய வேண்டும் என்றார். மேலும், அது நடந்தால் TN மக்கள் அவருக்கு நன்றி சொல்வர் எனவும் பேசியுள்ளார்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று அதிக அளவு உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $78.97 உயர்ந்து $4,988.56-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $7.17 உயர்ந்து $103.3 ஆக உள்ளது. இதனால், இந்திய சந்தையில் நேற்று மாலை குறைந்த தங்கம், வெள்ளி விலை இன்று (ஜன.24) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெருமாளுக்காக சனிக்கிழமையில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சனி பகவான் துன்பங்களை தருவதில்லை என்பது நம்பிக்கை. செல்வம், ஆரோக்கியம், ஆயுள் இவை மூன்றும் பரிபூரணமாக கிடைக்க சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்கலாம். காலை குளித்துவிட்டு பூஜை செய்து மாலை வரை உணவு உண்ணாமல் பால், தண்ணீர் மட்டும் குடித்து விரதம் மேற்கொண்டால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

NDA கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் PM மோடி, EPS, TTV, அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து பேசிய தமிழிசை, காலை முதலே சூரியன் காணாமல் போய்விட்டது. எனவே, PM சொன்னதுபோல் 2026-ல் திமுக இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று கூறினார். மேலும், NDA கூட்டணி ஏற்கெனவே பலமாக உள்ளது, இன்னும் யாராவது சேர்ந்தால் கூடுதல் பலம் கிடைக்கும் என்றார்.

திருச்சி மாவட்டத்தில் இன்று வேலை நாளாக இருந்தாலும், பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். டிச.30-ம் தேதி அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்கும். இதேபோல், மற்ற மாவட்டங்களுக்கும் குடியரசு தினம் உள்பட 3 நாள்கள் தொடர் விடுமுறை. அதேநேரத்தில், தென்காசியில் நவ.24-ல் விடப்பட்ட மழை விடுமுறையை ஈடுசெய்ய, இன்று அனைத்து பள்ளிகளும் இயங்கும். SHARE IT

நேற்று நடந்த NDA கூட்டணி பொதுக்கூட்டத்தில், மோடியை தொடர்ந்து EPS, TTV, அன்புமணி என பலரும் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தனர். அந்த வரிசையில் அண்ணாமலை, சூரியன் மறையும்போது மழை வரும்; அப்போது தமிழ்நாட்டில் இலை துளிர்த்து தாமரை மலரும் எனவும், 2026 தேர்தலில் EPS வெற்றி பெற்று முதலமைச்சராவார் என்று பேசினார். மேலும், திமுக ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இருக்கிறோம் என்றார்.
Sorry, no posts matched your criteria.