India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை டிவிஷன் முறையில் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் EPS கோரிக்கை வைத்துள்ளார். தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியவுடனே சபாநாயகர் அப்பாவு வெளியேறிவிட்டார். இந்நிலையில், பேரவைச் செயலாளர் முன்னிலையில் டிவிஷன் முறை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக முன்வைத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனமான மாருதி சுசூகி வரும் 1ஆம் தேதி முதல் கார்கள் விலையை 4% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் 1.99% உயர்ந்து ₹11,737.10 ஆக BSE சந்தையில் வர்த்தகமாகிறது. மாருதி சுசூகி பிப்ரவரி 2025 மாதத்தில் மொத்தமாக 1,99,400 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு அதே மாதத்தில் விற்பனையான 1,97,471 யூனிட்களை விட, 0.97% அதிகமாகும்.
சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வாக்கெடுப்பின்போது காங்கிரசின் 17 உறுப்பினர்களும் விசிகவின் 4 உறுப்பினர்களும் அப்பாவுக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர். பாஜக, பாமக ஆகிய கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.
சட்டப்பேரவையில் தீர்மானங்களின் மீது 3 வகையில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. (1) குரல் வாக்கெடுப்பு (2) வாக்குச்சீட்டு முறை வாக்கெடுப்பு (3) டிவிஷன் முறை வாக்கெடுப்பு. இதில், முக்கிய பிரச்னைகள் மீது டிவிஷன் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வாக்கெடுப்பின்போது, சட்டப்பேரவையின் கதவுகள் அடைக்கப்படும். பங்கேற்கும் உறுப்பினர்கள் இடம் மாறி உட்காரக்கூடாது.
சபாநாயகர் அல்லது செயலாளர் தீர்மானத்தை படித்துவிட்டு, ஆதரவு தெரிவிப்போரை டிவிஷன் வாரியாக எழுந்து நிற்கச் சொல்வார். தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் 6 டிவிஷன்கள் உள்ளன. அதன்பின், எதிர்ப்பு தெரிவிப்போர் & நடுநிலையானோரை எழுந்து நிற்கச்சொல்லி, அவர்களது பெயர்கள் குறித்துக் கொள்ளப்படும். இறுதியில் தீர்மானம் வென்றதா இல்லையா என்று அறிவிக்கப்படும்.
9 மாதங்களாக விண்வெளியில் <<15786194>>மாட்டிக் கொண்டுள்ள<<>> சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவருக்கும் எவ்வளவு சம்பளம் தெரியுமா? அமெரிக்காவின் மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும் மிக அதிகமான GS-15 சம்பள பிரிவில் இருப்பதால், இந்திய மதிப்பில் ₹1.08 முதல் ₹1.41 கோடி வரை சம்பளம் கிடைக்கும். கூடுதல் வேலை நாட்களுக்கு ஒரு நாளைக்கு ₹347 என்ற அளவில், 9 மாதங்களுக்கு மொத்தம் ₹1 லட்சம் தான் கூடுதலாக கிடைக்குமாம்.
சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய EPS, பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். பல நேரங்களில் சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார், தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதை நேரலையில் வழங்குவதில்லை ஆகிய குற்றச்சாட்டுகளை EPS கூறினார். சபாநாயகர் அவையில் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழர்களின் நிதி நிர்வாகம் குறித்த ‘தமிழர் நிதி நிர்வாகம் – தொன்மையும் தொடர்ச்சியும்’ என்ற நூலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். நிதித்துறை சார்பில் தொகுக்கப்பட்டிருந்த இந்நூலில், பண்டைய தமிழரின் நிதி மேலாண்மை குறித்து விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான சிறப்பு இணையதள பக்கத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் மூலம், தமிழர்களின் சிறப்பான நிதி நிர்வாகத்தை உலகம் அறியும்.
சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடங்கியுள்ளது. சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் RB உதயகுமார் முன் மொழிந்தார். அதற்கு 35 பேருக்கு மேல் ஆதரவு இருந்ததால் தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு OPS & செங்கோட்டையன் இருவரும் ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தலைமையுடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் செங்கோட்டையனை சமாதானம் செய்ய மூத்த தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இன்று காலை EPS தலைமையில் நடைபெற்ற அதிமுக MLAக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து, தங்கமணி, SP வேலுமணி, KP முனுசாமி ஆகியோர் செங்கோட்டையனை தனிமையில் சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சமாதானம் ஆவாரா செங்கோட்டையன்?
Sorry, no posts matched your criteria.