India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TN சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர் செரியன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, கேள்வி நேரம் தொடங்கும். அதன் பின் அதிமுக சார்பில் சபாநாயகர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு கோரப்படலாம். உடனடியாக அதை ஏற்கும்பட்சத்தில் துணை சபாநாயகர் அவையை வழிநடத்திச் செல்வார்.
TNல் வெப்பத்தின் தாக்கம் இன்று முதல் ஒரு வாரத்துக்கு அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் அதன் தாக்கத்தை அதிகமாக உணர முடியுமாம். குறிப்பாக திருப்பத்தூர், வேலூர், ஈரோடு, கரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என கூறப்படுகிறது. வெளியே செல்லும்போது குடையை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
தெருக்களில் சுற்றித்திரியும் வெறிநாய்க் கடித்தால் தாமதிக்காமல் உடனே ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. காயம் ஏற்பட்ட பகுதியில் 15 நிமிடங்களுக்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். நாய்க் கடித்ததில் இருந்து 28 நாட்களுக்குள் 4 தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். ரேபிஸ், இம்யூனோகுளோபின் தடுப்பூசிகள் அரசு ஹாஸ்பிடலில் இலவசமாகவே கிடைக்கின்றன. SHARE IT!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள், கூண்டோடு தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்துள்ளனர். சென்னையில் நடந்த இணைப்பு விழாவில், நாதகவின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெகதீச பாண்டியன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள், வேல்முருகன் முன்னிலையில் தவாகவில் இணைந்துள்ளனர். இதன்பின் அவர்கள் பேசுகையில், அனைவரும் தமிழ் தேசிய பாதையில் பயணிப்போம்; அதேசமயம், பெரியாரையும் போற்றுவோம் என கூறியுள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு
மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயோதிகம் காரணமாக, இயற்கை, யோகா ஹாஸ்பிடல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மேல் சிகிச்சைக்காக வேலூர் நறுவி ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே, சென்னையில் உள்ள ஹாஸ்பிடலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது. அதேவேளையில், மார்ச் 20ஆம் தேதி வரை, தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
USAவைச் சேர்ந்த விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ் நிகழ்ச்சியில் PM மோடி பங்கேற்றார். அவரிடம் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளில் எது சிறந்தது எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த PM, சில நேரங்களில் முடிவுகள் தாங்களாகவே பேசுகின்றன. சில நாட்களுக்கு முன்புதான் IND-PAK அணிகள் மோதின. அதன் முடிவு எந்த அணி சிறந்தது என்பதை வெளிப்படுத்தியது எனக் கூறினார்.
திருச்செந்தூர் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற துயர சம்பவம் நிகழ, இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டிய அவர், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, கூட்ட நெரிசலை சமாளிக்க முறையாகத் திட்டமிட வேண்டும் என திமுக அரசுக்கு யோசனை வழங்கியுள்ளார்.
*முருங்கைப் பூவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
*முருங்கைப் பூ உடல் வலிக்கு நிவாரணம் தரும்.
*மன அழுத்தம், மனச்சோர்வை குறைக்கும் வல்லமை கொண்டது.
*தாது பலனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
*மாதவிடாய் பிரச்னைகளை தணிக்கும்
*நோய் எதிர்ப்பு மண்டலத்தை முருங்கைப் பூ பலப்படுத்தும்.
சமந்தா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சுபம்’ படம், ரிலீஸுக்கு தயாராக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். இவர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளனர். கோடை விடுமுறையில் படம் ரிலீஸாகும் எனப் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.