India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 1,132 காலிப் பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலை, மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஜன.7 முதல் ஏப்.9 வரை நேர்காணல் நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் <
இளம் வீரரான அபிஷேக் சர்மாவுக்கு யுவராஜ் காட்டிய கண்டிப்பு குறித்து யுவராஜின் தந்தை சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். பயிற்சிக்காக அபிஷேக் யுவராஜ் வீட்டிற்கு வந்த போது, அவர் இரவு பார்ட்டி, பெண் தோழியுடன் சுற்றுவது போன்றவற்றை யுவராஜ் தடுத்ததாக கூறியுள்ளார். இதேபோல் ஷுப்மன் கில்லுக்கு யுவராஜ் அறிவுரை வழங்கியுள்ளாராம். அபிஷேக் சர்மா கிரிக்கெட் உலகில் நட்சத்திரமாக ஜொலிக்க யுவராஜ் ஒரு முக்கிய காரணம்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு தலா ₹2,000 உயர்வு வழங்கப்படும் என்றும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க ஆண்டொன்றுக்கு ₹64.08 கோடி கூடுதல் செலவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 50,000 இலவச விவசாய மின் இணைப்புகள் இந்தாண்டு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழக அரசு சார்பில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் நாசர், MLA இனிகோ ராஜ் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. போப் மறைவுக்கு தமிழக அரசு ஏற்கெனவே 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், வாடிகனில் நடக்கும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் இரு பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் – 1 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட மெயின் தேர்வின் முடிவுகள் <
மக்கள் பிரச்னைகள் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுக்கிறார் என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். டாஸ்மாக் தலைமையகத்தில் நடந்த சோதனை குறித்து பேச முயன்றபோது, அனுமதி தர முடியாது என சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்தார். மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக ₹10 ரூபாய் பெற்று, மாதம் ₹450 கோடி ரூபாய் வரை அரசு ஊழல் செய்து வருகிறது எனவும் குற்றம்சாட்டினார்.
மும்பை அருகே ஓடும் அரசு பஸ்ஸில் ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பான்வேல் – கல்யாண் சென்ற அந்த பஸ்ஸில் கூட்டம் இல்லாததால் பின் இருக்கையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டிராபிக்கில் பஸ் நின்றபோது, பைக்கில் வந்த இளைஞர் இதை கவனித்ததுடன், வீடியோ எடுத்து போஸ்ட் செய்துள்ளார். இதனால், பஸ் டிரைவர், கண்டக்டர் ஏன் இதை தட்டிக் கேட்கவில்லை என விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உதகையில் வரும் 25, 26-ம் தேதிகளில் பல்கலை. துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக ராஜ்பவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும், சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இம்மாநாட்டிற்கு பலரும் எதிர்த்து தெரிவித்து வருகின்றனர்.
டாஸ்மாக் முறைகேடு குறித்து பேச அனுமதிக்காததால் அதிமுக MLAக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். டாஸ்மாக் முறைகேடு குறித்து இபிஎஸ் பேச எழுந்தபோது, அவரது மைக் அணைக்கப்பட்டது. அப்போது என்ன பயமா? என இபிஎஸ் கேட்ட நிலையில், யாருக்கும் பயமில்லை என சபாநாயகர் பதிலளித்தார். அப்போது அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், பேச அனுமதிக்கப்படவில்லை. இதனை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த 2024–2025 நிதியாண்டில் டாஸ்மாக் ₹48,344 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் வருமானம் ₹2,488 கோடி அதிகரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு வருமானம் அதிகரித்துள்ள அதே வேளையில் மதுவுக்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.