India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வான்வெளியில் ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள் ஏராளம். அந்த வகையில், பூமியிலிருந்து 15,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நெக்லெஸ் நெபுலா கிரகத்தில் தோன்றிய அசாதாரண நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். ஒரு சிறிய, பிரகாசமான பச்சை வாயு மண்டலம், ஒளிரும் அண்டப் பொருட்களின் வளையத்தால் சூழப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட விஞ்ஞானிகள், ஹப்புள் ஸ்பேஸ் தொலைநோக்கி மூலம் இதனை படம்பிடித்ததாக தெரிவித்தனர்.

பொன்முடியை அமைச்சராக்க வேண்டி முதல்வர் ஸ்டாலின் அளித்த கடிதத்தை நிராகரித்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாது என்று பதில் கடிதம் எழுதியிருக்கும் ஆளுநர், “பொன்முடியின் தீர்ப்பு நிறுத்திதான் வைக்கப்பட்டிருக்கிறதே தவிர குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்படவில்லை” என்று பதிலளித்திருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

▶கிறிஸ் கெயில்- புனேவுக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில், 2013 ▶யூசுப் பதான்- மும்பைக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில், 2010 ▶டேவிட் மில்லர்- பெங்களூருக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில், 2013 ▶ஆடம் கில்கிறிஸ்ட்- மும்பைக்கு எதிரான போட்டியில் 42 பந்துகளில், 2008 ▶ஏபி டிவில்லியர்ஸ்- குஜராத்துக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில், 2016 ▶டேவிட் வார்னர்- பெங்களூருக்கு எதிரான 43 பந்துகளில், 2017

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மீதே சந்தேகம் உள்ளதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தேதியை நேற்று அறிவித்த தேர்தல் ஆணையம், பொய் செய்தி அதிகம் பரவுவதாக கவலை தெரிவித்தது. இதனை மேற்கோள்காட்டிய அவர், ஆணையம் மீதுதான் முதல் சந்தேகம் எழுகிறது என்றார். மேலும், எதிரிகள் எந்த ஆயுதம் எடுக்கிறார்களோ அதைவிட சிறப்பான ஆயுதத்தை எடுத்து வெற்றி பெறுவோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்

கிரில் சிக்கன், கோபி மஞ்சூரியன், சிக்கன் 65 போன்ற உணவுகளில் ‘ரோடமைன் B’ என்ற நிறமி கலப்பதால், 60 நாட்கள் வரை அந்த நிறமி நம் உடலைவிட்டு போகாது. அது நம் கல்லீரல், கிட்னி, மூளை, குடல் உள்ளிட்ட பகுதிகளில் தங்கிவிடும். ‘ரோடமைன் B’ நிறமி முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று. அது குடலில் காயத்தை உண்டாக்கி நாளடைவில் புற்றுநோயை வரவைத்துவிடும். இதனால் குழந்தைகள் வலுவிழந்து காணப்படுவார்கள். Source – Vikatan

பாஜகவை தோற்கடிப்பதே I.N.D.I.A. கூட்டணியின் ஒரே இலக்கு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற I.N.D.I.A. கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், பாஜகவால் மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதிலிருந்து நாட்டைக் காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மக்களை பிரித்தாலும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவோம் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.

முடிந்தவரை படங்களுக்கு தமிழ் பெயர்களை வையுங்கள் என திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி வலியுறுத்தியுள்ளார். இயக்குநர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த பின் பேசிய அவர், “படங்களுக்கு தமிழ் மொழியை தாண்டி வேறு மொழியில் பெயர் வைப்பதில் எனக்குமே உடன்பாடு இல்லை. OTT தளங்களில் மிகப்பெரிய அளவில் வியாபாரம் நடைபெறுவதால், படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வணிக நோக்கமே முழு காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் மூலமாக எந்த நிறுவனத்திடம் இருந்தும் நிதியுதவி பெறவில்லை என தேமுதிக தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்பிஐ வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்க கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தேர்தல் பத்திரங்கள் எதையும் வாங்கவில்லை எனக் கூறியுள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக்கில் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. WPL தொடர் பிப்ரவரி 23ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கியது. விறுவிறுப்பாக லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், அரையிறுதி ஆட்டங்களில் டெல்லி, பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றன. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் லேன்னிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க புதியத் தலைவராக ஆர்.வி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2024-26ஆம் ஆண்டுக்கான தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 27 பதவிகளுக்கு சென்னை வடபழனியில் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய தலைவரான ஆர்.கே. செல்வமணி மீண்டும் போட்டியிடவில்லை. இதனால் தலைவராக ஆர்.வி. உதயகுமார், துணைத் தலைவர்களாக அரவிந்த்ராஜ், கே.எஸ். ரவிக்குமார் போட்டியின்றி தேர்வாகினர்.
Sorry, no posts matched your criteria.