India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சத்தீஸ்கரில் 10 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னனை கொலை சம்பவம் சிக்க வைத்துள்ளது. துலா ராம் என்பவர் 9 பெண்களை அடுத்தடுத்து திருமணம் செய்துள்ளார். அவர்கள் பிரிந்து சென்ற நிலையில், 10ஆவதாக ஒருவரை திருமணம் செய்தார். ஆனால் கல்யாண வீட்டில் அரிசி, சேலை உள்ளிட்டவற்றை திருடியதாக சந்தேகித்து அவரை கொலை செய்து காட்டில் வீசியுள்ளார். சடலம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி, துலா ராமை கைது செய்துள்ளது.
இக்கடுமையான தருணத்தில் ஆஸ்திரேலியர்களான நாங்கள் இந்திய மக்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என SRH கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். பஹல்காமில் நடந்தது மனவேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் கூறியுள்ளார். தீவிரவாத தாக்குதலுக்கு உலகம் முழுவதில் இருந்தும் இந்திய மக்களுக்கு ஆதரவு குரல்கள் வரும் நிலையில், கம்மின்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று (ஏப்ரல் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
MI-க்கு எதிரான போட்டியில் SRH வீரர் இஷான் கிஷன் 1 ரன்னில் அவுட் ஆனதை தொடர்ந்து, சோஷியல் மீடியாவில் ‘#FIXING’ ட்ரெண்டாகி வருகிறது. அவுட் ஆகாமலே எந்தவித சந்தேகத்தையும், ரிவிவ்யூவையும் கேட்காமலும், அம்பயர் அவுட் கொடுக்காத நிலையிலும் அவர் வெளியேறியதால், நெட்டிசன்கள் சந்தேகத்தை எழுப்பி இவ்வாறு கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், BCCI கிஷனை ஒப்பந்தத்தில் எடுத்ததையும் விமர்சித்து வருகின்றனர்.
காஷ்மீர் சகோதரர்களை பாக். ஒருபோதும் கைவிடாது என அந்நாட்டின் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்தில் பேசியிருந்தார். மேலும், இந்துக்களில் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள் எனவும் அவர் கூறியிருந்தார். இவ்வாறு அவர் பேசிய அடுத்த சில நாள்களில் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாக். ராணுவ தளபதியே தீவிரவாதிகளை உசுப்பிவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தளர்வான ஆடை அணிந்து உறங்குவது நல்லது. ஆனால், நிர்வாணமாக உறங்குவது அதைவிட அதிக நன்மைகள் தரும் என்கிறது பிரபல healthline இணையதளம். நிர்வாணமாக உறங்கினால் *விரைவாக தூக்கம் வரும் *நல்ல தூக்கம் கிடைக்கும் *சருமம் பொலிவு பெறும் *ஸ்ட்ரெஸ் குறையும் *எடை கட்டுப்படும் *இதயநோய், டைப்-2 நீரிழிவு ஆபத்து குறையும் *பிறப்புறுப்பு ஆரோக்கியம் மேம்படும் *ஆண்மை அதிகரிக்கும் *தன்மதிப்பு உயரும் *காதல் உறவு மேம்படும்.
➤மேஷம் – நட்பு ➤ரிஷபம் – நலம் ➤மிதுனம் – நன்மை ➤கடகம் – லாபம் ➤சிம்மம் – புகழ் ➤கன்னி – அன்பு ➤துலாம் – தடங்கல் ➤விருச்சிகம் – மகிழ்ச்சி ➤தனுசு – ஆதாயம் ➤மகரம் – சிக்கல் ➤கும்பம் – தாமதம் ➤மீனம் – அனுமதி.
பஹல்காம் தாக்குதல் இதயத்தை உலுக்குவதாக நடிகை ஆண்ட்ரியா வேதனை தெரிவித்துள்ளார். ஆனால், இதன் பிறகு அதீத கண்காணிப்பிற்கு உள்ளாகப்போகும் காஷ்மீர் மக்களை நினைத்து இதயம் கணப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நாடு பிரிவினையை நோக்கி செல்லும் இச்சூழலில், இச்சம்பவத்தால் பரப்பப்படும் குறிப்பிட்ட மதம் / சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரசாரங்களுக்கு நாம் இரையாகி விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
SRH அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி MI 5-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த SRH அணியில் கிளாசனை(71) தவிர அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களிலேயே நடையை கட்டினர். ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 144 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய MI, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. ரோஹித் சர்மா(70) அரைசதம் விளாசியதால், அந்த அணி ஈசியாக வெற்றி பெற்றது.
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பற்றிய தகவல் தருவோருக்கு ₹20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது. பஹல்காம் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் சுட்டதில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, வாகா எல்லையை மூடுவது, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.