India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஐபிஎல் 17வது சீசன் மார்ச் 22இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணி முதல் தொடங்கும் என்றும் டிக்கெட்டுகளை Paytm Insider, CSK தளத்தில் பெறலாம் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒரேநேரத்தில் அதிகளவில் பயனர்கள் குவிந்ததால் 2 தளங்களும் முடங்கியுள்ளது. இதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இன்னும் 4 நாட்களில் ஐபிஎல் 17வது சீசன் தொடங்க உள்ளது. மார்ச் 22இல் நடைபெறும் முதல் போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. ரூ.1700 முதல் ரூ.7500 வரை விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளை, Paytm Insider (9:30am) மற்றும் சிஎஸ்கே இணையதளத்தில் (9:30am) பெறலாம். ஒரு நபர் 2 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

வாக்காளர் அடையாள அட்டையில் ஆரம்ப காலத்தில் வாக்காளர்களின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது. 1957 இல், புகைப்பட அடையாள அட்டைகளை வழங்குவதற்கான யோசனை உருவானது. 1979 சிக்கிம் தேர்தலிலும், பின்னர் வடகிழக்கு மாநிலங்களிலும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1994 இல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1997ல் வாக்காளர் பட்டியல் கணினிமயமாக்கல் துவங்கியது.

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பு இல்லை; 420 மோசடி பேர்வழிகள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பேசுகிறார்கள் என்று பிரகாஷ் ராஜ் பாஜகவை மறைமுகமாக கடுமையாக விமர்சித்துள்ளார். NDA கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பிரதமர் மோடி பேசிய நிலையில், இது திமிர்த்தனமான பேச்சு என்றும் விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், வேட்புமனுத் தாக்கலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை, பணிகள் குறித்து எடுத்துரைக்கும் சாகு, வாக்காளர் பட்டியலுடன் துணை வாக்காளர் பட்டியலை சேர்ப்பது தொடர்பாக கருத்து கேட்கிறார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் பட்டியல் இன்று இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை இந்த முறை கொடுக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திமுக நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவரது தரப்பு அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்தக்கூடாது என்று இபிஎஸ் தரப்பு வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பு தான் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதால் ஓபிஎஸ் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் செய்து, சாமி கும்பிட்டார்.

தேர்தல் பத்திரங்கள் குறித்த மனுவை தாக்கல் செய்த பத்திரிகையாளர் பூனம் அகர்வால், பத்திர விவரங்கள் தவறாக உள்ளதாக மற்றொரு சந்தேகத்தை தெரிவித்துள்ளார். ஏப்ரல்-2018 இல் தலா ரூ.1000 வீதம் 2 தேர்தல் பத்திரங்களை வாங்கினேன். ஆனால், எஸ்பிஐ வெளியிட்ட பட்டியலில் 20 அக்டோபர் 2020இல் வாங்கப்பட்டதாகக் காட்டுகிறது. இது தவறா? அல்லது என் பெயரில் வேறு எவரேனும் வாங்கியுள்ளார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

விறுவிறுப்பான WPL இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கோப்பையை வென்றது. வெற்றிபெற்ற ஆர்சிபி அணிக்கு ரூ.6 கொடியும், டெல்லி அணிக்கு ரூ.3 கொடியும் பரிசாக வழங்கப்பட்டது. இருப்பினும் வெற்றிபெற்ற RCB மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு கொடுப்பதை விட குறைவாக பணம் கொடுத்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல்-ல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை என்றதும் நினைவிற்கு வருவது அண்ணாமலையாரும், கிரிவலமும் தான். மற்ற எந்த தலங்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக இங்கு மட்டுமே பக்தர்களுடன் சேர்ந்து அண்ணாமலையாரும் கிரிவலம் செல்லும் உற்சவம் நடைபெறும். கைலாயத்தை வலம் வந்து வணங்கியதற்கு சமமான பலனை தரக் கூடியது கிரிவலம். எப்போது கிரிவலம் சென்றாலும் உயர்வான பலன் கிடைக்கும். என்றாலும் பெளர்ணமி நாட்களிலே அதிகளவில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
Sorry, no posts matched your criteria.