news

News April 24, 2025

முதலில் ஏவுகணை.. இப்போது விமானப்படை..!

image

இந்தியா- பாக். இடையே போர் தொடங்கும் சூழல் நிலவிவரும் நிலையில், ரஃபேல், சுகோய்- 30 ஆகிய போர் விமானங்களில் இந்திய விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ‘ஆக்ரமன்’ என்ற பெயரில் இந்த பயிற்சியை வீரர்கள் செய்து வருகின்றனர். ஏற்கனவே ஏவுகணை வீசி சோதனை செய்த நிலையில், இப்போது விமானப்படையும் பயிற்சியில் ஈடுபடுகிறது. மறுபுறம், பாகிஸ்தானும் தனது எல்லைகளில் ராணுவத்தை குவித்து வருகிறது.

News April 24, 2025

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்தியர்கள் யார்?

image

இந்திய <<16203309>>படை வீரர் <<>>பாகிஸ்தானிடம் சிக்கிய நிலையில் ஏற்கனவே இந்திய வீரர்கள் சிக்கியதும் நினைவுபடுத்தப்படுகிறது. 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த போது, இந்திய கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கினார். 1999-ம் ஆண்டு கார்கில் போர் நடக்கும் போது இந்திய வீரர் நச்சிகேட்டா பாகிஸ்தானிடம் சிக்கினார். இருவரும் பல சித்திரவதைகளுக்கு பின் நாடு திரும்பினர்.

News April 24, 2025

மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அப்டேட்

image

அரசுப் பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுபவர்கள் 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் பெற்றாலும், அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், எச்ஐவி, பார்கின்சன், தொழுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அரசு துறைகளின் உதவித் தொகை பெற்றாலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2025

AI ஸ்மார்ட் கூலிங் கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்

image

Ray-Ban Meta ஸ்மார்ட் கிளாஸ்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. AI வசதி, பார்க்கும் இடங்களில் உள்ள எழுத்துக்களின் மொழிபெயர்ப்பு, மியூசிக் ப்ளேயர் கண்ட்ரோல், இன்ஸ்டா, வாட்ஸ்அப் மெசேஜ்கள் உள்ளிட்ட பல வசதிகளை இதில் பயனர்கள் பெறலாம். வெறும் ‘Hey Meta’ என்று சொல்வதின் மூலம் இத்தனை வசதிகளையும் நீங்கள் பெறலாம். கடந்த 2023-ல் இந்த ஸ்மார்ட் கிளாஸ்கள் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

News April 24, 2025

இன்று இரவே ஆட்டத்தை ஆரம்பிக்கும் இந்தியா?

image

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. சிந்து நதி நீரை நிறுத்தி அதிரடி காட்டிய இந்தியாவின் நடவடிக்கையை, போராக பார்ப்பதாக பாகிஸ்தானும் அறிவித்துள்ளது. இதற்கிடையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளுக்கு முழு ஆதரவை அளித்துள்ளன. இதனால், இன்று இரவே கூட இந்தியா தாக்குதலை தொடங்கலாம் என Geopolitical கருத்தாளர்கள் சிலர் கணிக்கின்றனர்.

News April 24, 2025

இந்தியா எப்படி தாக்குதல் நடத்தும்? (1/2)

image

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், 2 வழிகளில் தாக்குதல் நடத்தலாம் என ராணுவ நிபுணர்கள் கணிக்கின்றனர். 1)எல்லையை (LOC) கடந்து தாக்குவது: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து, பாக்., ஆக்கிரமித்துள்ள POK காஷ்மீரை கைப்பற்றலாம். இதன்மூலம் காஷ்மீர் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் (சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர்த்து). 2) நவீன ஏவுகணைகள் மூலம் துல்லிய தாக்குதல். (பார்க்க பகுதி-2)

News April 24, 2025

இந்தியா எப்படி தாக்குதல் நடத்தும்? (2/2)

image

2-வது யுத்தியான ஏவுகணை தாக்குதல் நடத்தப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானிடம் ஏவுகணை அழிப்பு தளவாடங்கள் போதிய அளவில் இல்லாததும், இந்தியாவிடம் அதிநவீன சூப்பர் சோனிக் ஏவுகணைகள் இருப்பதும் தான் இதற்கு காரணம். அதற்கு ஏற்றார் போல், இந்தியா இன்று ஏவுகணை சோதனையை செய்துள்ளது. இத்தாக்குதலில் பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

News April 24, 2025

டாஸ்மாக் இயக்குநருக்கு ED சம்மன்

image

டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன், மேலாளர்கள் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோருக்கு ED சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதன் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தில் ₹1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 24, 2025

கிங் கோலி மீண்டும் அரைசதம்.. தொடரும் RCB ஆதிக்கம்

image

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். பில் சால்ட் 26 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். ஆனால் பொறுப்பாக ஆடிய விராட் கோலி 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவருக்கு துணையாக படிக்கல் அதிரடி காட்ட ரன் வேகமாக ஏறியது. 14 ஓவர்கள் முடிவில் 134/1 ரன்களை RCB சேர்த்துள்ளது.

News April 24, 2025

குரு பயணம்: ராஜயோகம் அடிக்கப் போகும் 3 ராசிகள்

image

ஜோதிட சாஸ்திரப் படி, குரு பகவான் வரும் மே 14-ம் தேதி மிதுன ராசிக்கு பெயர்கிறார். அதனால் பின்னர் நன்மைகள் பெறக்கூடிய ராசிகள்: *கும்பம்: தொழில்ரீதியான வெற்றி, அதிர்ஷ்டத்தின் ஆதரவு *தனுசு: புதிதாக வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு, நல்ல செய்தி தேடி வரும், ஆன்மிகத்தில் ஆர்வம் *மேஷம்: மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும், நிலம் தொடர்பான தொழிலில் முன்னேற்றம், வெளிநாட்டு நிதி ஆதாயங்கள் பெற வாய்ப்பு.

error: Content is protected !!