India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

<<18664814>>கர்நாடக பஸ் விபத்தில்<<>> 20 பேர் உயிரிழந்த சம்பவம் தன்னை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். தனது X பதிவில், இரங்கல் கூறியுள்ள அவர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்த நபர்களுக்கு ₹50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற போது இந்த சோகம் நிகழ்ந்தது மிகவும் வேதனைக்குரியது.

சமீபகாலமாக காங்கிரஸ் உடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்த உண்மையை தற்போது செங்கோட்டையன் போட்டு உடைத்திருக்கிறார். காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் தவெகவுக்கு இல்லை என ஓபனாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், திமுக காங்கிரஸ் கூட்டணியில் உருவான புயல் சற்று வலுவிழந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

1968-ல் விவசாய கூலியாக அரைப்படி நெல் அதிகம் கேட்டதற்காக, பண்ணையாரின் அடியாட்களால் ஒரு கிராமமே தாக்குதலுக்கு உள்ளானது. இதில் பயந்து ஓடிய பெண்கள், குழந்தைகள் தப்பித்துக்கொள்ள ராமையா என்பவரது வீட்டிற்குள் சென்றனர். ஆனால், அந்த வீடு தாழிடப்பட்டு தீ வைத்ததில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்த ஆறாத வடுவான கீழ்வெண்மணி படுகொலை நடந்த தினமான இன்றும், அவர்களது அலறல்கள் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, டெல்லி ரிடெம்ப்ஷன் கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் PM மோடி பங்கேற்றார். இதுபற்றிய அவரது X பதிவில், கிறிஸ்துமஸ் வழிபாட்டில் கலந்து கொண்டது அன்பு, அமைதி, கருணை எனும் காலத்தால் அழியாத செய்தியை பிரதிபலித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த திருநாளின் உணர்வுகள், சமூகத்தில் நல்லெண்ணத்தையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வழங்க வேண்டும் என EPS, நயினார் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் CM ஸ்டாலின், அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியகருப்பன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு அறிவிப்பை CM ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமையல் சிலிண்டருக்கான மானியம் உங்களுக்கு சரியாக கிடைக்கிறதா என்பதை நீங்களே சரிபார்க்கலாம். ➤இதற்கு, www.mylpg.in இணையதளத்திற்கு செல்லுங்கள் ➤இதில், நீங்கள் பயன்படுத்தும் சிலிண்டர் கம்பெனியின் லோகோவை க்ளிக் செய்யுங்கள் ➤மொபைல் எண் & LPG ஐடியை உள்ளிடுங்கள் ➤பின்னர் மானியம் தொடர்பான அனைத்து விவரங்களும் தோன்றும் ➤மானியம் வரவில்லை என்றால் <

போக்சோ வழக்கில் ஜாமின் கோரிய RCB வீரர் யஷ் தயாலின் மனுவை ஜெய்ப்பூர் போக்சோ கோர்ட் நிராகரித்துள்ளது. கிரிக்கெட்டில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி எமோஷ்னல் பிளாக்மெயில் செய்து சிறுமி ஒருவரை யஷ் தயால் பலாத்காரம் செய்ததாக புகாரளிக்கப்பட்டது. மொபைல் Chat, போட்டோக்கள், ஹோட்டலில் தங்கியதற்கான ஆதாரங்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. கைதாகும் பட்சத்தில் அவர் IPL-ல் விளையாட முடியாமல் போகலாம்.

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி ஷெட்டிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. Gen Z-யின் கனவு கன்னியாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாவில் ரெகுலராக போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது பட்டுப்புடவையில் தேவதையாக மின்னும் அவரது போட்டோக்களை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் மேலே SWIPE பண்ணி பாருங்க…

தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹20 உயர்ந்து ₹12,820-க்கும், சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹1,02,560-க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,360 என தாறுமாறாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிமுக என்ற பூமாலை, இன்று குரங்கு கையில் மாட்டியுள்ளது என வைத்திலிங்கம் விமர்சித்துள்ளார். அந்த குரங்கு, OPS, தினகரன் என ஏராளமானவர்களை பிய்த்து போட்டுவிட்டதாக கூறிய அவர், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க EPS இல்லாத அதிமுக இருக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார். மேலும், EPS-க்கு அதிமுகவின் கொள்கை, கோட்பாடு என எதுவுமே தெரியாது எனவும் அவரை வீழ்த்துவதுதான் ஒரே குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளர்.
Sorry, no posts matched your criteria.