India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாங்காக்கில் நடைபெற்ற இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ப. பாண்டி, ராயன், NEEK படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள இந்த படம், அக்.1-ம் தேதி வெளியாக உள்ளது. யாரெல்லாம் இந்த படத்துக்கு வெயிட்டிங்?
1971 போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. அதில் எதிரியை வீழ்த்த நம் ராணுவம், ஆணுறைகளை பயன்படுத்தியது உங்களுக்கு தெரியுமா? ஆம், பாக்., போர்க் கப்பல்களை தகர்க்க பயன்படுத்திய கன்னி வெடிகளை ஈரம் பாதிக்காமல் வைக்க, அவற்றை ஆணுறைகளால் கவர் செய்தனர். அதேபோல, வங்கதேச சதுப்புநிலப் பகுதிகளில் துப்பாக்கியின் ‘muzzle’ பகுதியை உலர்வாக வைக்க ஆணுறையால் மூடினர். வல்லவனுக்கு condoms-ம் ஆயுதமே!
155 ரன்கள் போதுமானது அல்ல, கூடுதலாக 20 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும் என CSK கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். மிடில் ஓவர்களில் ஸ்பின் பவுலர்களை எதிர்கொண்டு அதிக ரன்களை எடுக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பிரேவிஸ் நன்றாக பேட்டிங் செய்ததாகவும், அவரை போன்று மிடில் ஓவர்களில் விளையாட வேண்டிய தேவை இருக்கிறது எனவும் தோனி தெரிவித்தார். தோனி கூறியது சரிதானா? CSK வேறென்ன மாற்றம் செய்ய வேண்டும்?
▶ ஏப்ரல் 29 – சித்திரை- 13 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: த்ரயோதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶ பிறை: தேய்பிறை
டாஸ்மாக் அலுவலகத்தில் ED சோதனை நடத்தலாம் என்று ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து, டாஸ்மாக் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது. கடந்த மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ரெய்ட் நடத்திய ED, ₹1000 கோடி வரை மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டியது. அதனை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சோதனை நடத்தியதில் தவறில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் 2025-26ம் ஆண்டு பட்ஜெட் நலத்திட்டங்களுக்கு நிதி தேவைப்படுவதால், மதுபானம் மீதான கலால் வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த வரி உயர்வால், புதுச்சேரியில் மதுபான விலை கணிசமாக உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. புதுச்சேரி மது விலை குறைவு என்பதால், தமிழகத்தில் இருந்தும் பலர் அதை வாங்கி அருந்துவர். ஆதலால் மது பிரியர்களை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (ஏப்ரல் 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இந்த கடினமான காலத்தில் இந்தியாவுடன் துணை நிற்பதாக இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகே தெரிவித்துள்ளார் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான இலங்கையின் ஒற்றுமையையும், உறுதிப்பாட்டையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பழங்கள், காய்கறிகளை குறைவாக சாப்பிட்டால் பதற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று கனடாவில் நடந்த ஆய்வு தெரிவிக்கிறது. உணவில் ஒரு நாளைக்கு குறைந்தது 3 காய்கறிகள் அல்லது பழங்களாவது இல்லையெனில், அவருக்கு பதற்றம் ஏற்படும் வாய்ப்பு 24% அதிகரிக்கிறது. அதேபோல் உடல்கொழுப்பின் அளவு 36%-க்கு அதிகமானாலும் பதற்றம் வரும் வாய்ப்பு 70% அதிகரிக்கிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் CSK-வை வீழ்த்தி SRH வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த CSK அணி வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால், அந்த அணி 154 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹர்ஷல் படேல் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். எளிய இலக்குடன் களமிறங்கிய SRH அணியும் தொடக்கத்தில் தடுமாறியது. ஆனால், கடைசி நேரத்தில் நிதிஷ், கமிந்து அதிரடி காட்ட SRH அணி வென்றது.
Sorry, no posts matched your criteria.