India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகை வழங்காததால் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், 2026 பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ₹5,000 வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவியது. இதனை உறுதி செய்யும் விதமாக, நிதி ஆதாரத்தை தயார் செய்ய நிதித்துறையிடம் அரசு அறிவுறுத்தியுள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தற்போது தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட உள்ளாராம்.
உங்களை பற்றி சர்வமும் அறிந்துவைத்திருக்கும் உங்கள் ஃபோன் Hack ஆகாமல் பார்த்துக்கொள்ள சில வழிகள் இருக்கிறது. ▶Playstore-ல் இல்லாத செயலிகளை பதிவிறக்க வேண்டாம். ▶தெரியாத எண்ணில் இருந்து வரும் Link-குகளை க்ளிக் பண்ணாதீங்க. ▶தொலைபேசியை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள். ▶Password Save பண்ண வேண்டாம் ▶App-களை அப்டேட் செய்யுங்கள் ▶பொது Wifi-களை பயன்படுத்த வேண்டாம். SHARE.
துணை ஜனாதிபதி தேர்தலில் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு கேட்டு ADMK MP-க்களுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்து பாஜகவின் பிடியில் தற்போது வீட்டு சிறையில் இருக்கும் ஜெகதீப் தன்கரின் நிலைதான், நாளை தமிழகத்தை சேர்ந்த CP ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்படும் என ஆருடம் தெரிவித்தார். முன்னதாக, NDA-வின் CPR-க்கு TN MP-க்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என EPS வலியுறுத்தியிருந்தார்.
SBI வங்கிகளில் 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசிநாள். TN-ல் 380 பணியிடங்கள் உள்ளன. மாதம் ₹24,050 – ₹64,480 வரை சம்பளம் கொண்ட இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி போதுமானது. ஆன்லைனில் முதல்நிலை, முதன்மை தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் தேர்வு எழுதலாம். மேலும் விவரங்களுக்கு <
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை(ஆக.25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஆக. 30-ம் தேதி வரை மழை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையிலும் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நாளை வேலை, கல்வி நிலையங்களுக்கு செல்பவர்கள் கவனமுடன் இருங்கள் நண்பர்களே..!
திமுகவினர் நடத்தும் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்ற மக்கள் தங்களது உடலுறுப்புகள் உள்ளதா என்பதை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என EPS கூறியுள்ளார். மண்ணச்சநல்லூர் பரப்புரையில் பேசிய அவர், ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க மக்களின் கிட்னியை கழற்ற வேண்டும் என திமுக MLA நக்கலாக பேசியது கேவலமானது என்றார். விசாரணையில் கிட்னி திருட்டு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோர்ட்டில் அவர்களுக்கு தண்டனை உறுதி என்றார்.
என்ன செய்தாலும் முகம் Dull-ஆகவே இருக்கிறதா? முகத்தைப் பொலிவாக வைக்க பச்சைப் பால் போதும். இதற்கு, முதலில் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு, இரண்டு டீஸ்பூன் பச்சைப் பாலில், சிறிது தேன் கலந்து நன்றாகக் கலக்கி, அதை முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து, தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதை, தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவுடன் இருக்கும். SHARE.
60 ஆண்டுகாலம் சட்டம், நீதி, நேர்மைக்காக அர்ப்பணித்த உன்னத மனிதர் சுதர்சன் ரெட்டி என CM ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசியல் சாசனத்தை BJP சிதைக்க நினைக்கும் நிலையில், அதனை காக்க இவர் தேவை என கூறினார். மேலும், மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் தேசிய கல்வி கொள்கை, மனித மாண்புகளுக்கு எதிரானது என TN மக்களுக்காக பேசியவர் சுதர்சன் ரெட்டி என்றார்.
TN-ல் எந்த இடத்திலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ONGC-க்கு SEIAA அனுமதி வழங்கிய நிலையில், அதனை ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், TN-ல் இனி எப்போதும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாள்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, அடுத்த 2 நாள் கழித்து மீண்டும் விடுமுறை வருகிறது. ஆம், நாளை, நாளை மறுநாள் என 2 நாள்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். புதன்கிழமை (27-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி வருவதால், அன்று அரசு விடுமுறையாகும். 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் மாநிலம் முழுவதும் விடுமுறையாகும்.
Sorry, no posts matched your criteria.