India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்றும், நேற்று முன்தினமும் குறைந்து வந்தது. இதன்படி, 1 கிராம் தங்கம் நேற்று ரூ.9,005ஆகவும், 1 சவரன் தங்கம் ரூ.72,040ஆகவும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதன் விலை அதிகரிக்கவோ, குறையவோ இல்லை. நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. 1 கிராம் ரூ.111, 1 கிலோ ரூ.1.11 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. SHARE IT.
ADMK பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் இன்று மாலை 04:30 மணிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்த பிறகு கட்சியினுள் அதிருப்தி ஏற்பட்டதாலேயே இபிஎஸ் விருந்து வைத்ததாக தகவல் வெளியானது. மேலும், இந்த விருந்தில் செங்கோட்டையன் ஆப்சென்ட் ஆன நிலையில் நடைபெறவுள்ள இக்கூட்டம் அரசியல் கவனம் பெற்றுள்ளது.
மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3,935 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்று (ஏப்.25) முதல் மே 24 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மேலும் அறிய <
கவர்னர் தலைமையில் நடக்கும் துணை வேந்தர்கள் மாநாட்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. VC சந்திரசேகர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மதுரை VC பதவி காலியாக உள்ள நிலையில் பதிவாளர் ராமகிருஷ்ணன் மாநாட்டுக்கு செல்லவில்லை. கோவை பாரதியார் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழங்களில் இருந்தும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. மொத்தமுள்ள 52 பல்கலை.யில் 34-ல் இருந்து VC பங்கேற்றுள்ளனர்.
சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் மே 1-ம் தேதி ரிலீஸாக இருக்கும் ‘ரெட்ரோ’ பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலில் இருக்கும் நிலையில், படத்தை பார்த்த சூர்யாவிற்கு முழு திருப்தி ஏற்பட்டதாம். நல்லா வந்துருக்கு என சூர்யா தன்னிடம் கூறியதாக கார்த்திக் சுப்புராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். யாரெல்லாம் படம் பாக்க வெயிட்டிங்?
டெல்லியை சேர்ந்த ஒருவர், Zepto-வில் ட்ராக் பேண்ட் ஒன்றை வாங்கியுள்ளார். ஆர்டர் அவரை வந்து சேர, ஆசையாக பிரித்து பார்த்தவருக்கு பேண்ட் பாக்கெட்டில் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதில், ₹10-ம், ஜெய்ப்பூர் பஸ் டிக்கெட் ஒன்றும் இருந்துள்ளது. இதுகுறித்து, அவர் சோஷியல் மீடியாவில் பகிர, நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். ‘₹10-க்கு சோப்பு வாங்கி, துணியை துவைச்சி போட்டுக்கோங்க’ என கமெண்ட் பறக்கிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதுவரை இருமுறை துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஸ்ரீநகர் சென்று, காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்திக்கிறார். அதேபோல், ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி காஷ்மீர் சென்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
பஹல்காம் தாக்குதலின்போது தீவிரவாதிகள் இந்திய ராணுவ உடையில் வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், டேராடூன் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் ராணுவ உடைகள் விற்கும் கடைகளுக்கு மாநில போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ஆதார் கார்டு, ராணுவ அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்தால் மட்டுமே ராணுவ உடைகளை விற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
1-5 வகுப்பு மாணவர்கள் ஏப். 17 முதல் விடுமுறையில் உள்ளனர். 10,11, 12-ம் வகுப்பு மாணவர்களும் விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில், 6-9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேற்றுடன் தேர்வு முடிந்தது. இதனால் அவர்களுக்கும் இன்று முதல் விடுமுறை துவங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 2-ம் தேதியும், கல்லூரிகள் ஜூன் 16-ம் தேதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பயங்கரவாத மரணம்’ என்ற பிரிவு இல்லாத பாலிசிகளில் தீவிரவாத தாக்குதல் மரணங்களில் காப்பீடு கோர முடியாது. அதே நேரத்தில், தனிநபர் விபத்து காப்பீட்டில், ‘பயங்கரவாத பாதுகாப்பு’ என்பது சேர்க்கப்பட்டிருந்தால், ஒரு பயணத்தின் போது பயங்கரவாதத் தாக்குதலில் மரணமடைந்தால், இழப்பீடு கோரலாம். பயணக் காப்பீட்டு விதிமுறைகளில் ADB(Accidental Death Benefit) ரைடர் போன்ற சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.
Sorry, no posts matched your criteria.