India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காங்கிரசுக்கு மேலும் 2 நோட்டீஸ்கள் வருமான வரித்துறையால் அனுப்பப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அக்கட்சிக்கு ரூ.1,823 கோடி செலுத்தக் கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், ஜெய்ராம் ரமேஷ் அளித்துள்ள பேட்டியில், “வருமான வரித்துறை நேற்றிரவு மேலும் 2 நோட்டீஸ்களை அனுப்பியிருக்கிறது. இது வரி தீவிரவாதம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியை பிரதமர் பரப்புவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றி வருகிறார் பிரதமர் மோடி. 2 ஆண்டுகளாக காசித் தமிழ்ச் சங்கமம் விமரிசையாக நடத்தப்பட்டது. அதுமட்டுமல்ல, செம்மொழி ஆய்வு மையத்திற்கான புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேர்வுகளை தமிழில் எழுத பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார் என விளக்கமளித்தார்.

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பாரத ரத்னா விருதை வாங்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இன்று வரவில்லை. அவருடன் சேர்த்து, 5 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டது. இதில் 4 பேர் சார்பில் அவர்களின் வாரிசுகள் நேரில் விருதை பெற்றுக் கொண்டனர். ஆனால், அத்வானியோ, அவரது குடும்பத்தினரோ வரவில்லை. உடல்நிலை காரணமாக அத்வானியின் வீட்டுக்கு சென்று விருது அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிக்கவுள்ள புதிய படம், டைம் டிராவல் படமாக இருக்கலாம் என தகவல் பரவி வருகிறது. ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் ரஜினி தற்போது நடிக்கிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள பட போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் ரஜினியின் பின்னால் டைம் மெஷின் இருப்பது போல உள்ளது. இதை வைத்து டைம் டிராவல் படமாக இருக்கலாம் என தகவல் பரவுகிறது.

நடிகை ராதிகாவின் சித்தி தொடரில் அறிமுகமாகி சின்னத்திரையிலேயே தனித்துவம் காட்டியவர் பாலாஜி. அதில், டேனியல் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்ததால் அவர் டேனியல் பாலாஜி ஆனார். இந்நிலையில், அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், டேனியல் பாலாஜியின் மறைவை நம்பமுடியவில்லை என்றும் இச்செய்தி தன்னை துயரில் ஆழ்த்துவதாகவும் ராதிகா உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏப்.19 முதல் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பொதுவாக வாக்குப்பதிவு முடிந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், 7 கட்டங்களாக தேர்தல் நடப்பதால் ஏப்.19 காலை 7 மணி முதல் ஜூன் 1 மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

சுதந்திரம் அடைந்ததில் இருந்து 67 ஆண்டுகளாக 2014 வரை நாட்டின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் மட்டும் ரூ.150 லட்சம் கோடி கடன் பெற்றதால், நாட்டின் மொத்த கடன் ரூ.205 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பாஜக அரசு வாங்கிய கடனால் ஒவ்வொரு இந்தியர் தலையிலும் ரூ.1.5 லட்சம் கடன் சுமை ஏறியுள்ளது என வேதனை தெரிவித்தார்.

அதிகாரிகள் தங்களது கடமைகளைச் செய்யத் தவறினால், நீதிமன்றங்கள் அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காது என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளாா். இது தொடர்பாக பேசிய அவர், “அரசாங்கங்களும், அதன் அதிகாரிகளும் தனி நபர் உரிமைகளை பாதிக்கும் வகையில், பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார்கள். அதனை நீதித்துறை வேடிக்கை பார்க்காது. பலமுறை கடுமையான நடவடிக்கைகளை ஏற்கெனவே எடுத்துள்ளோம்” என்றார்.

வயநாட்டில் ராகுலுக்கு எதிராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் மீது 242 கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில், 237 வழக்குகள் சபரிமலை போராட்டத்திற்காகவும், 5 வழக்குகள் கட்சி போராட்டத்தில் கலந்துகொண்டதற்காகவும் போடப்பட்டுள்ளது. இந்த தகவலை வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, எர்ணாகுளம் பாஜக வேட்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மீது சுமார் 211 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பிரதமர் மோடி அடிக்கடி வருவது தமிழகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஒவ்வொரு முறை மோடி வரும்போதும் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை தந்து சென்றுள்ளதாகவும் தெரிவித்தார். குமரியில் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர், தேர்தலில் தான் வெற்றி பெற்றால் ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய கப்பல், ஹெலிகாப்டர் தளம், இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
Sorry, no posts matched your criteria.