India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிருத்விராஜ், அமலாபால் நடிப்பில் மார்ச் 28ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் ‘ஆடுஜீவிதம்’. இப்படத்திற்காக உடல் எடையை குறைத்தது குறித்து நடிகர் பிருத்விராஜ் நேர்காணலில், ‘இக்கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக நான் 72 மணி நேரம் எதுவுமே சாப்பிடாமல் இருந்தேன். இது சரியான முறையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த சமயத்தில் எடையைக் குறைக்க வேண்டுமென அதைச் செய்தேன்’ என்றார்.

பாஜகவை அடையாளம் காட்டியதே அதிமுக தான் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “தேர்தலுக்கு பிறகு அதிமுக தமிழ்நாட்டில் இருக்காது என பாஜக கூறுகிறது. 1998 தேர்தலில் பாஜகவை தமிழகத்தில் அடையாளம் காட்டியதே அதிமுக தான். எங்கள் இயக்கத்தை தொட எந்த கொம்பனாலும் முடியாது” எனத் தெரிவித்தார். அதிமுக தேர்தலுக்கு பிறகு இருக்காது என மதுரை பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் விமர்சித்திருந்தார்.

விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் CSK அணி பவுலிங் செய்ய உள்ளது. புள்ளிப் பட்டியலில் 2 வெற்றிகளுடன் CSK முதலிடத்திலும், ஒரு வெற்றிகூட பெறாத DC 9ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. SRH நிர்ணயித்த 163 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய GT 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து, இலக்கை எட்டி வெற்றிபெற்றது. GT அணியில் கில் 36, சாய் சுதர்சன் 45, டேவிட் மில்லர் 44 ரன்கள் எடுத்தனர். SRH சார்பில் சாபஷ், மார்கண்டே, கம்மின்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.

தேசிய திறனறி தகுதித் தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பில் இந்தத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 9-12ஆம் வகுப்பு வரை மொத்தம் ₹48000 வழங்கப்படும். மாதந்தோறும் 7ஆம் தேதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நிலையில், ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் அடுத்த நாளான திங்கள் கிழமைதான் இந்த பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி எதிர்ப்பு போராட்டம் நெருப்புக்கு சமம் என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். “இந்தி எதிர்ப்பு போராட்டம் செருப்புக்கு சமமானது அல்ல, அது நெருப்புக்கு சமமானது. தமிழகத்தில் பற்றி எறிந்த வரலாற்று நெருப்பை யாராலும் மறக்க முடியாது. தமிழர் உணர்வை மதிக்காத எவரையும் தமிழகம் மன்னிக்காது” என்று X-இல் பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை செருப்போடு ஒப்பிட்டு அண்ணாமலை பேசியிருந்தார்.

ஏப்ரல் மாதத்தில் 4 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. ஏப்.9-உகாதி, ஏப்.11-ரம்ஜான், ஏப்.14-தமிழ் புத்தாண்டு, ஏப்.21-மகாவீரர் ஜெயந்தி ஆகிய நாட்கள் அரசு பொது விடுமுறை. இதில் ஏப்.14, 21 ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால், 2 நாள் கூடுதல் விடுமுறை கிடைக்காது. இது தவிர ஏப்.19-தேர்தல் விடுமுறை. 4 சனிக்கிழமை, 4 ஞாயிற்றுக்கிழமை என மொத்தம் 11 நாட்கள் விடுமுறை உள்ளது. இதைப் பொறுத்து உங்கள் பயணத்தை திட்டமிடுங்கள்.

மக்களவைத் தேர்தலோடு திமுகவின் சரித்திரம் முடிந்துவிடும் என எடப்பாடி பழனிசாமி ஆரூடம் தெரிவித்துள்ளார். சிதம்பரம் பிரசாரத்தில் பேசிய அவர், கள்ளக் கூட்டணி வைப்பதில் திமுக கை தேர்ந்த கட்சி என விமர்சித்தார். மேலும், திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது எனக் கூறிய அவர், தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதனை கடுமையாக எதிர்ப்போம் எனப் பேசினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் சினிமா உலகை அதிர்ச்சி அடையச் செய்தது. இந்நிலையில், நடிகராவதற்கு முன்பு சினிமா இயக்குநர் ஆக வேண்டும் என டேனியல் பாலாஜி ஆசைப்பட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இன்னும் சில காலம் அவர் வாழ்ந்திருந்தால் நிச்சயம் நல்ல ஒரு இயக்குநராகி இருப்பார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பள வரவேற்புக்கு தடை விதித்துள்ளது. வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு மட்டும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க அனுமதி அளித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம் இதே காரணத்திற்காக, ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் அமைச்சர்கள், தங்களது சம்பளத்தை விட்டுக்கொடுப்பதாக அறிவித்திருந்தனர்.
Sorry, no posts matched your criteria.