India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிக்கிமுக்கு வரும் வெளிமாநில, வெளிநாட்டு பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் ரூ.50ஐ அந்த மாநில அரசு வசூலிக்கத் தொடங்கியுள்ளது. சிக்கிமுக்கு வரும் சிறார் தவிர்த்த சுற்றுலா பயணிகள், 30 நாட்கள் தங்கியிருக்க இந்த கட்டணம் ஹோட்டல்களில் வசூலிக்கப்படுகிறது. பின்னர் அத்தொகை மாநில சுற்றுலாத் துறையிடம் அளிக்கப்படுகிறது. இத்தொகையை கொண்டு சுற்றுலா உட்கட்டமைப்பை மேம்படுத்த சிக்கிம் அரசு திட்டமிட்டுள்ளது.
இஸ்லாமில் விவாகரத்து செய்ய முத்தலாக் முறை உள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் கொண்டுவந்த மத்திய அரசு, தலாக் கூறி பெண்ணை பிரிவது தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்தது. இந்நிலையில், கேரளாவில் செல்போனில் தலாக் கூறிய கணவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஷாகுல் ஹமீது வரதட்சணை கேட்டு உடல், மன ரீதியில் தொல்லை கொடுத்ததாகவும், செல்போனில் தலாக் கூறியதாகவும் மனைவி அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் தாமிரத்தின் விலை தங்கத்தை விட வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு அவுன்ஸ் தாமிரம் (காப்பர்) நான்கு டாலருக்கு விற்பனையான நிலையில், வெறும் 3 மாதங்களில் அது ஐந்து டாலராக உயர்ந்துள்ளது. அதாவது, சுமார் 25% உயர்வு. இதனுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை கடந்த 3 மாதங்களில் 20% மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்களின் கவனம் காப்பரின் பக்கம் திரும்பியுள்ளது.
சபாநாயகர் அப்பாவுவை அதிமுக EX அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். இபிஎஸ்சுடன் கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில் நடந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தொகுதி பிரச்னை தொடர்பாக அப்பாவுவை சந்தித்ததாகவும், சபாநாயகரை எம்எல்ஏக்கள் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்றார்.
வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI ) அதிகாரிகள் 15 முறை அடித்ததாக தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த வாரம் தங்கம் கடத்தியதை ஒப்புக் கொண்ட அவர், அதனை மறுத்து ஏடிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். கட்டாயப்படுத்தி 50-60 பக்கத்தில் கையெழுத்து வாங்கினர், அதில் 40 பக்கம் வெற்று காகிதம், அடித்த அதிகாரியை அடையாளம் காட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.
<<15768647>>தெற்கு ரயில்வே<<>> பணிக்கான தேர்வெழுதும் தமிழக தேர்வர்கள் 90% பேருக்கு தெலங்கானாவில் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, ஒன்றிய அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக சாடினார். தமிழக தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ரயிலுக்கு சொந்தக்காரர் என்ற வரலாறு கொண்டவர் பஞ்சாப்பின் சம்பூரன் சிங். லூதியானா- சண்டிகர் ரயில் பாதைக்காக அவரது நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், உரிய இழப்பீடு கிடைக்காததால் அவர் கோர்ட்டை நாடினார். அதில், சதாப்தி ரயிலை ஜப்தி செய்யுமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து, லூதியானா ஸ்டேஷன் சென்ற அவர் ரயிலின் உரிமையைப் பெற்றார். இருப்பினும், சிறிது நேரத்தில் கோர்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
மதுபான முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் போல முதல்வர் ஸ்டாலினும் சிறைக்கு செல்வார் என்று அதிமுக MP தம்பிதுரை தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான முறைகேடு வழக்கில்தான் அப்போதைய முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது, தமிழ்நாட்டிலும் டாஸ்மாக்கில் ₹1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ED தெரிவித்திருக்கும் நிலையில், தம்பிதுரை இவ்வாறு பேசியுள்ளார்.
தான் இந்தி மொழியை ஒருபோதும் எதிர்த்ததில்லை; இந்தி திணிப்பை மட்டுமே எதிர்த்திருக்கிறேன் என ஆந்திரா DY CM <<15769285>>பவன் கல்யாண்<<>> தெரிவித்துள்ளார். மேலும், NEP இந்தியை திணிக்கவில்லை எனக் கூறிய அவர், தான் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். முன்னதாக, பாஜக கூட்டணியில் இணைவதற்கு முன்பு GO BACK HINDI என பவன் கல்யாண் பதிவிட்டிருந்ததை கனிமொழி இன்று பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை கயாடு லோஹர், ‘டிராகன்’ படம் குறித்து பேட்டியொன்றில் பேசினார். கீர்த்தி கேரக்டரை தான் டைரக்டர் அஷ்வத் மாரிமுத்து முதலில் எனக்கு ஃபிக்ஸ் செய்திருந்தார். பின்னர்தான், பல்லவி கேரக்டர் எனக்கு கொடுக்கப்பட்டது. 2 ஹீரோயின் படம் என்றாலும், மக்களுக்கு உன்னை பிடிக்கும் வகையில் காட்டுவேன் என அவர் கூறினார். சொன்னபடியே செய்து, என் வாழ்க்கையையே இன்று அஷ்வத் மாற்றிவிட்டார் என கயாடு கூறினார்.
Sorry, no posts matched your criteria.