India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தபோது புலிப்பாண்டி இபிஎஸ், எலிப்பாண்டியாக இருந்தாரா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சிஏஏ உள்பட பல்வேறு சட்டங்களை பாஜகவுடன் இணைந்து ஆதரித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அதை எதிர்த்து பேசுவதாகக் கூறிய அவர், தேர்தல் காரணமாக சிறுபான்மையினர் மீது திடீரென பாசத்தை காட்டி வருவதாக காட்டமாக விமர்சித்தார்.

தனியாக விடப்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வீரர்கள் கேப்டனாக ஏற்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதேபோல, வீரர்கள் சேர்ந்து விளையாடினால் தான் வெல்ல முடியும் என நவ்ஜோத் சிங் சித்துவும், ரோகித் மற்றும் பும்ரா ஆகியோர் பாண்டியாவை குழப்ப முயற்சிப்பதாக அம்பத்தி ராயுடுவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக MI கேப்டன் பாண்டியாவுக்கு சக வீரர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

திருச்சி மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு அதிக வாக்குகள் பெற்றுத் தரும் அதிமுக நகர செயலாளருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ப.கருப்பையாவை ஆதரித்து பேசிய அவர், ‘தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் வட்டச் செயலாளருக்கு 5 சவரன் தங்கச் சங்கிலி பரிசளிக்கப்படும்’ என்றார்.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் சில ரகசியங்களை தெரிந்து கொள்வது அவசியம். குழந்தை பொறாமை எண்ணத்துடன் இருந்தால், மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்று பொருள். பொய் சொல்கிறார்கள் என்றால், அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் அதிகமாக திட்டி, அடிக்கிறீர்கள் என்று பொருள். அதிகமாக தொந்தரவு செய்கிறார்கள் என்றால், அரவணைப்புக்கு ஏங்குகிறார்கள் என்று பொருள். இதனை கவனித்தாலே பிரச்னையை சரிசெய்யலாம்.

மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாளை வழக்கு தொடர உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் சென்னை உள்பட 8 மாவட்டங்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்தன. அதனை சீரமைக்க தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டிய முதல்வர் ஸ்டாலின் நாளை காலை வழக்கு தொடர உள்ளதாக அறிவித்தார்.

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிவரும் எல்எஸ்ஜி வீரர் டி காக் அரை சதம் கடந்துள்ளார். 38 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 58* ரன்கள் அடித்துள்ளார். கே.எல்.ராகுல் 20 ரன்னிலும், படிக்கல் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டொய்னஸ் 9* ரன்கள் அடித்துள்ளார். தற்போது வரை LSG 12 ஓவர்கள் முடிவில் 102/2 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்சிபி தரப்பில் சிராஜ், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

2024ஆம் நிதியாண்டில் 6,644 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து புதிய சாதனை படைக்கப்பட்டிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், இது 1,100 கிலோ மீட்டர் கூடுதலாகும். நாட்டின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகள் அவசியமாக இருக்கும் நிலையில், அதிக நீளத்திற்கு சாலைகள் அமைப்பதில் புதிய உச்சம் தொடப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ், திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய கச்சத் தீவு விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது பாஜக. 1974ஆம் ஆண்டு இந்திய அரசு கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கியதை குறிப்பிடும் பாஜக, அப்போதைய முதல்வர் கருணாநிதி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், 1974 ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்த விவகாரத்தை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் கருணாநிதி.

Mother of Dragons ( டிராகன்களின் தாய்) என்று செல்லமாக அழைக்கப்படும் Pons – Brooks வால் நட்சத்திரம் 70 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமியை நெருங்கி வந்திருக்கிறது. மேற்கு வானில் மிக பிரகாசமாக காணப்படும் இந்த வால் நட்சத்திரம் கடைசியாக 1954ஆம் ஆண்டு தென்பட்டது. இன்னும் சில தினங்களுக்கு வானில் தெரியும் இந்த வால் நட்சத்திரம் மீண்டும் 2095ஆம் ஆண்டு தென்பட வாய்ப்புள்ளது.

13 வருடத்திற்கு முன் இதே நாளில், தனது சிறுவயது கனவு நனவானதாக சச்சின் கூறியுள்ளார். 2011 ஏப்ரல் 2-ல் நடைபெற்ற ODI உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. அது குறித்த தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள சச்சின், அந்த நினைவுகளுக்காகவும், அணிக்காகவும், பல லட்சம் மக்களின் நம்பிக்கைக்காகவும் என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.