news

News March 15, 2025

தெலங்கானாவில் தேர்வு மையம் – கொந்தளித்த காங்.

image

<<15768647>>தெற்கு ரயில்வே<<>> பணிக்கான தேர்வெழுதும் தமிழக தேர்வர்கள் 90% பேருக்கு தெலங்கானாவில் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, ஒன்றிய அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக சாடினார். தமிழக தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

News March 15, 2025

சொந்தமாக ரயில் வைத்திருந்த ஒரே இந்தியர் இவர்தான்!

image

ரயிலுக்கு சொந்தக்காரர் என்ற வரலாறு கொண்டவர் பஞ்சாப்பின் சம்பூரன் சிங். லூதியானா- சண்டிகர் ரயில் பாதைக்காக அவரது நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், உரிய இழப்பீடு கிடைக்காததால் அவர் கோர்ட்டை நாடினார். அதில், சதாப்தி ரயிலை ஜப்தி செய்யுமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து, லூதியானா ஸ்டேஷன் சென்ற அவர் ரயிலின் உரிமையைப் பெற்றார். இருப்பினும், சிறிது நேரத்தில் கோர்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

News March 15, 2025

முதல்வர் ஸ்டாலின் சிறை செல்வார்: தம்பிதுரை

image

மதுபான முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் போல முதல்வர் ஸ்டாலினும் சிறைக்கு செல்வார் என்று அதிமுக MP தம்பிதுரை தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான முறைகேடு வழக்கில்தான் அப்போதைய முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது, தமிழ்நாட்டிலும் டாஸ்மாக்கில் ₹1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ED தெரிவித்திருக்கும் நிலையில், தம்பிதுரை இவ்வாறு பேசியுள்ளார்.

News March 15, 2025

கனிமொழி விமர்சனம்: சீறிய பவன் கல்யாண்

image

தான் இந்தி மொழியை ஒருபோதும் எதிர்த்ததில்லை; இந்தி திணிப்பை மட்டுமே எதிர்த்திருக்கிறேன் என ஆந்திரா DY CM <<15769285>>பவன் கல்யாண்<<>> தெரிவித்துள்ளார். மேலும், NEP இந்தியை திணிக்கவில்லை எனக் கூறிய அவர், தான் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். முன்னதாக, பாஜக கூட்டணியில் இணைவதற்கு முன்பு GO BACK HINDI என பவன் கல்யாண் பதிவிட்டிருந்ததை கனிமொழி இன்று பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

News March 15, 2025

என் வாழ்க்கையே மாறிவிட்டது: கயாடு லோஹர்

image

நடிகை கயாடு லோஹர், ‘டிராகன்’ படம் குறித்து பேட்டியொன்றில் பேசினார். கீர்த்தி கேரக்டரை தான் டைரக்டர் அஷ்வத் மாரிமுத்து முதலில் எனக்கு ஃபிக்ஸ் செய்திருந்தார். பின்னர்தான், பல்லவி கேரக்டர் எனக்கு கொடுக்கப்பட்டது. 2 ஹீரோயின் படம் என்றாலும், மக்களுக்கு உன்னை பிடிக்கும் வகையில் காட்டுவேன் என அவர் கூறினார். சொன்னபடியே செய்து, என் வாழ்க்கையையே இன்று அஷ்வத் மாற்றிவிட்டார் என கயாடு கூறினார்.

News March 15, 2025

விலைவாசிக்கு ஏற்ப ஊதிய உயர்வு: நிலைக்குழு பரிந்துரை

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட ஊதியத்தை விலைவாசிக்கு ஏற்ப உயர்த்த மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஊதியத்தில் வேறுபாடு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஊரக மேம்பாட்டுக்கான நிலைக்குழு, நாடு முழுவதும் ஒரே சீரான ஊதியத்தை வழங்கவும் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து பலமுறை பரிந்துரை அளித்தும் செயல்படுத்தவில்லை எனவும் விமர்சித்துள்ளது.

News March 15, 2025

APPLY NOW: நாளை கடைசி நாள்

image

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மூலம் வழங்கப்படும் 4 வருட ஆசிரியர் படிப்பில் (ITEP) சேருவதற்கு நடத்தப்படும் NCET எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்விற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க நாளையே தேதி (மார்ச் 16) கடைசி ஆகும். ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 4 ஆண்டுகால ஆசிரியர் படிப்பில் சேர இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பிக்க <>NCET<<>> என்ற லிங்க்கை க்ளிக் செய்யவும்.

News March 15, 2025

IPL-இல் அதிக சதமடித்த வீரர் யார் தெரியுமா?

image

ஐபிஎல் 2025 தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ளன. இந்நிலையில், 2008 முதல் 2024 வரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் எந்த வீரர் அதிக சதம் அடித்துள்ளார் என்பதை பார்க்கலாம். இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ஆர்சிபி அணி ஆட்டக்காரருமான விராட் கோலியே அதிக சதம் விளாசியுள்ளார். 244 போட்டிகள் விளையாடி இதுவரை 8 சதங்கள், 55 அரைசதங்களை அடித்துள்ளார். ஐபிஎல் 2016ல் 4 சதங்களுடன் 973 ரன்களை குவித்துள்ளார்.

News March 15, 2025

இலங்கை செல்லும் பிரதமர் மோடி

image

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவோடு இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும், இந்திய நிதி உதவியுடன் சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் நிலையத்தை அவர் திறந்து வைக்கிறார். 2015ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 4வது பயணம் இதுவாகும்.

News March 15, 2025

மகனுக்கு இரண்டாம் பிறப்பு… தாய் செய்த தியாகம்…!

image

பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற எத்தகைய தியாகத்தையும் செய்பவர்தான் அம்மா. டெல்லியில் ஒரு தாய், தனது மகனுக்கு இரண்டாம் முறையாக உயிர் கொடுத்துள்ளார். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மகன் ராஜேஷுக்கு, 80 வயதான தாய் தர்ஷனா ஜெயின், தனது சிறுநீரகத்தை தானம் செய்து மறுவாழ்வு அளித்துள்ளார். தாயும், தானும் நலமுடன் இருப்பதாக ராஜேஷ் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அம்மா எப்பவுமே கிரேட் தான்!

error: Content is protected !!