India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மறைந்த தனது தந்தை ஜோசப் ஃபிலிப் (83) குறித்து தன் இன்ஸ்ட்டா பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை நடிகை மீரா ஜாஸ்மின் பதிவிட்டுள்ளார். ஃபிலிப்பின் இளமைக்கால படம் உள்ளிட்ட சில புகைப்படங்களை வெளியிட்ட அவர், “நாம் மீண்டும் சந்திக்கும் வரை… உங்கள் நினைவாக என்னிடம்” என பிரிவாற்றாமையில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த துயரத்தில் இருந்து மீள வேண்டுமென அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

கூட்டணிக் கட்சியான காங்கிரஸை கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார். I.N.D.I.A. கூட்டணியில் அங்கம் வகிக்கும் போதிலும், கேரளாவில் இக்கட்சிகள் தனித்தே போட்டியிடுகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், வாக்குகளுக்காக கொள்கைகளை மாற்றும் கட்சி காங்கிரஸ். ஆனால் தங்கள் கட்சி கொள்கைகளில் உறுதியாக உள்ள கட்சி என்றார்.

விழுப்புரம் மாவட்டம் திருவாதியைச் சேர்ந்தவர் புகழேந்தி (71). 1973ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்த அவர் கோலியனூர் ஒன்றியத் தலைவர், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட
பல பொறுப்புகளை வகித்துள்ளார். திமுக மூத்த அமைச்சரான பொன்முடியின் ஆதரவாளரான இவர் 2019 இல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியபோதும் 2021 இல் எம்.எல்.ஏவாக (விக்கிரவாண்டி) தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சற்றுமுன் காலமானார். நண்பரின் மறைவு செய்தியை கேட்ட முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பரப்புரையை பாதியில் நிறுத்திவிட்டு, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சற்றுநேரத்தில் விரைகிறார். அவருடன் மூத்த அமைச்சர்களும், முக்கிய தலைவர்களுக்கும் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

ஜார்க்கண்டைச் சேர்ந்த 92 வயது முதியவர், மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கவுள்ளார். பத்தோரியை சேர்ந்த முதியவர் அன்சாரி, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், இதுவரை வாக்களிக்காமல் இருந்தார். மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஆய்வு நடத்தியபோது இது தெரிய வந்ததையடுத்து அவரது பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. எனவே இம்முறை வாக்குப்பதிவு செய்ய இருப்பதாக அன்சாரி தெரிவித்துள்ளார்.

1 கிராம் தங்கம் விலை கடந்த 2023 ஏப்ரல் 6ஆம் தேதி ₹5,650ஆகவும், 1 சவரன் தங்கம் ₹45,200ஆகவும் இருந்தது. அதன் பிறகு கடந்த ஓராண்டில் இது படிப்படியாக அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு வருடத்தில் கிராமுக்கு ₹965 அதிகரித்து, இன்று ₹6615ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், சவரன் தங்கம் விலை ₹7,720 உயர்ந்து ₹52,920ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் கிராமுக்கு ₹705ம், சவரனுக்கு ₹5,640ம் உயர்ந்துள்ளது.

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) சற்றுமுன் காலமானார். நேற்று முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையின்போது மயங்கி விழுந்ததால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இச்செய்தியை கேட்ட உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விழுப்புரத்திற்கு விரைந்துள்ளனர்.

மாலத்தீவைத் தொடர்ந்து வங்கதேசத்திலும் ‘India Out’ என்ற பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளான பி.என்.பி, ஜாதிய கட்சி போன்றவை இந்தியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. ஷேக் ஹசீனாவை 5ஆவது முறையாக பிரதமராக்க இந்தியா தலையீடு செய்தது என்றும் எதிர்க்கட்சியினரைச் சிறையிலடைத்த அவாமி லீக் அரசின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்றும் கொந்தளிக்கின்றன.

ரோஹித் ஷர்மா கேப்டன்ஸி குறித்து CSK அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறிய கருத்து வைரலாகி வருகிறது. CSK அணி எந்த கேப்டனுக்கு பயப்படுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “உண்மையைச் சொல்வதானால், இந்தாண்டு அப்படியான கேப்டன் யாரும் இங்கில்லை. இறுதிப் போட்டியில் எங்களை வீழ்த்திய ஒரேயொரு கேப்டனும் இப்போது அந்த பதவியில் இல்லை. நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றார்.

I.N.D.I.A கூட்டணியில் உள்ள சிபிஐ கேரளாவில் ராகுல் காந்திக்கு எதிராக ஆனி ராஜாவை களமிறக்கியுள்ளது. இந்நிலையில், காங்., நிலை குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேலி செய்துள்ளார். ஒரு பக்கம், ராகுலை உ.பி-க்குச் சென்று போட்டியிடுமாறு இடதுசாரிகள் வலியுறுத்துவதாகவும், மறுபுறம் அதே இடதுசாரிகள் I.N.D.I.A கூட்டணிக் கூட்டத்தின் போது ராகுலை கட்டியணைப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.