India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு சட்டப்பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். உடல்நலக் குறைவால் அவதியடைந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி தனது 84 வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு CM ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
கடந்த 22-ம் தேதி 1 கிராம் தங்கம் ரூ.9,290ஆகவும், சவரன் தங்கம் ரூ.74,320ஆகவும் அதிகரித்து உச்சம் தொட்டது. எனினும் 23, 24-ம் தேதிகளில் தங்கம் விலை குறைந்தது. 24-ம் தேதி 1 கிராம் ரூ.9,005ஆகவும், 1 சவரன் ரூ.72,040ஆகவும் விற்பனையானது. ஆனால் நேற்று அந்த விலை மாற்றப்படவில்லை. அதேபோல் இன்றும் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சர்வதேச சந்தையில் தங்க விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நம்மில் பலரும் சாப்பிடும் போது, உணவை வேகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களே. ஆனால், இதனால் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது தெரியுமா? உணவை மெதுவாக மென்று உண்ணுபவர்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் வயிறு நிரம்பியிருப்பதை உணர நமது மூளை நேரமாகும். இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். வயிறு நிரம்பியிருப்பதை உணர, மூளைக்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகுமாம்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பேட்டி ஒன்றில் எந்த ஆதாரமும் இன்றி இந்தியா தங்களை குற்றம்சாட்டி வருவதாக பாக். பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். போர் வெடிப்பதை விரும்பவில்லை என தெரிவித்த அவர் போரால் பேரழிவு மட்டுமே ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.
ஆபரண நகைகளில் 22 கேரட் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், 24 கேரட் தங்கம் நாணயம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த 2 வகைகளில், 24 கேரட் விலை அதிகமாகும். 22 கேரட் விலை சற்று குறைவாகும். ஆனால் இந்த 2 வகைகளையும் விட 18 கேரட் விலை 25% குறைவு. 24 கேரட், 22 கேரட் விலை அதிகரிப்பதால், அனைவரின் பார்வையும் 18 கேரட் தங்கம் மீது திரும்பியுள்ளது. அதற்கான மவுசும் அதிகரித்துள்ளது.
காலமான கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிறுபான்மையினர் விவகாரத்துறை இணைஅமைச்சர் ஜார்ஜ் குரியனும் அஞ்சலி செலுத்தினர். போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
காலமான கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிறுபான்மையினர் விவகாரத்துறை இணைஅமைச்சர் ஜார்ஜ் குரியனும் அஞ்சலி செலுத்தினர். போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
நடப்பு IPL தொடர் CSK-விற்கு பெரும் சோகமாக மாறியுள்ளது. நேற்றைய தோல்வியுடன் கிட்டத்தட்ட CSK-வின் ப்ளே ஆப் கனவும் கலைந்து விட்டது. 16 ஆண்டுகால CSK வரலாற்றில், தொடர்ச்சியாக 2 முறை ப்ளே ஆப்பிற்கு செல்ல முடியாமல், CSK வெளியேறுவது இதுவே முதல் முறை. இந்த மோசமான தோல்விக்கு என்ன காரணம் என நினைக்குறீங்க?
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு எல்லை கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூட்டை தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் மேலும் சில புதிய கட்சிகள் இணையக்கூடும் என்று இபிஎஸ் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய இபிஎஸ், பாஜகவுடன் தற்போது அதிமுக கூட்டணி அமைத்து இருப்பதாகவும், இக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணி அமையும் என்றும் கூறினார். ஆனால் அக்கட்சிகள் பெயரை அவர் கூறவில்லை. எந்த கட்சிகள் சேரும்? உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.