India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுகவில் உள்ள மிகப்பெரிய தலைவர்கள் பாஜகவில் இணையவுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன். பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். சில முக்கிய திமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பொறுத்திருந்து பாருங்கள், மிகப்பெரிய மாற்றம் நடக்கப்போகிறது எனக் கூறியுள்ளார். அதிமுக தலைவர்கள் திமுகவில் இணைந்து வரும் நிலையில், எல்.முருகனின் இந்த பேச்சு அரசியல்ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
1. மிகவும் லேசான வாயு எது?
2. வாக்காளர்களுக்கு முதல்முதலாக அடையாள அட்டை வழங்கிய இந்திய மாநிலம் எது?
3. குறைந்த வயதில் பத்ம பூஷண் விருது பெற்றவர் யார்?
4. கர்நாடக இசையில் சோகத்தை குறிக்கும் ராகம் எது?
5. கை உண்டு விரல்கள் இல்லை. கழுத்து உண்டு தலை இல்லை அது என்ன?
விடைகள் மதியம் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தபோதும், அதை முறியடித்து மூன்றே நாளில் ₹320Cr+ வசூலித்துள்ளது. இதன்மூலம் ரஜினியின் திரைத்துறை வாழ்க்கையில் 3 நாளில் ₹300cr வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. ஜெயிலர் 3 நாளில் ₹224Cr+ வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி, 2021 தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இது நிறைவேற்றப்படாததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், மீண்டும் வாக்குறுதியை மட்டுமே அளித்து 2026 தேர்தலில் வெல்லலாம் என நினைத்தால் ஏமாந்து போவார்கள் என அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் போட்டிகளின்போது படுகாயம் அடைந்தவர்களுக்கு பதில் மாற்று வீரர்களை களமிறக்க BCCI அனுமதி அளித்துள்ளது. இது ரஞ்சி டிராபி, துலீப் டிராபி போன்ற முதல்தர போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். முன்னதாக, இங்கி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுடன் களமிறங்கினார் பண்ட். அதேபோல், கை தோள்பட்டை காயத்துடன் விளையாடினார் இங்கி.,ன் வோக்ஸ். இந்நிலையில் தான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஐ.பி.,க்கு சொந்தமான இடங்களில் ED சோதனை நடக்கிறது. ரெய்டில் இன்னும் பல அமைச்சர்கள் சிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தென் பகுதியில் இந்த ரெய்டு ஒரு புயலை கிளப்புமாம். அதாவது, அமைச்சர்கள் மூர்த்தி(மதுரை), KKSSR.ராமச்சந்திரன் (விருதுநகர்), பெரியகருப்பன்(சிவகங்கை) ஆகியோர் இந்த பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ரெய்டு தி.மலையில் என EPS கூறியதால் வேலுவும் பட்டியலில் இருக்கலாம்.
கிடைக்கும் யூடியூப் சேனல்களில் எல்லாம் நேர்காணல்கள், ஆடியோ லாஞ்ச்சில் துதிபாடல்கள், அல்டிமேட் ஸ்டார் காஸ்ட் என பல இருந்தும் சரியான திரைக்கதை இல்லாததால் ‘கூலி’ கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், செப்.5-ல் ரிலீஸாகவுள்ள ‘மதராஸி’ படத்துக்கு அதிக புரமோஷன் செய்து ரசிகர்களுக்கு தேவையில்லாத எதிர்பார்ப்பை அளிக்கப் போவதில்லை என AR முருகதாஸ் கூறியுள்ளார். வெற்றி பெறுவாரா SK?
பாமகவின் சிறப்பு பொதுக்குழு இன்று(ஆக., 17) நடக்கவிருக்கிறது. இதில் ராமதாஸ் அதிரடி தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ராமதாஸ் அறிவித்திருந்த அன்புமணியின் செயல் தலைவர் பதவி பறிக்கப்படவுள்ளதாகவும், அனைத்து அதிகாரமும் நிறுவனர் ராமதாஸுக்கு மட்டுமே என விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட இருக்கிறதாம். மூத்த மகள் காந்திமதிக்கு முக்கிய பொறுப்பு வழங்க வாய்ப்பிருக்கிறது.
அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக ED தெரிவித்துள்ளது. சொத்து ஆவணங்கள், முதலீடு விவரங்கள், செல்போன் தகவல்கள், நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சம்மன் அனுப்பி ஐ.பெரியசாமியை விசாரணைக்கு அழைக்கவும் ED திட்டமிட்டுள்ளது. தேர்தல் வரவிருக்கும் நிலையில், இது அவருக்கு பயங்கர நெருக்கடியாக மாறியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கொடிகட்டி பறந்த கே.பி.எஸ். (பழம்பெரும் நடிகை கே.பி.சுந்தராம்பாளால் கட்டப்பட்ட) திரையரங்கம் இடிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய 3 பேரும் ஒன்றாக வந்து திறந்து வைத்த வரலாற்று சிறப்பு இந்த திரையரங்கிற்கு இருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கருணாநிதியும், எம்ஜிஆரும் தியேட்டரை திறந்து வைக்க, ஜெயலலிதா குத்து விளக்கு ஏற்றினார்.
Sorry, no posts matched your criteria.