India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (ஏப்ரல் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
மம்தா பானர்ஜி ஒரு இந்து விரோதி என பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக, மம்தா தனது இந்து அடையாளத்தை சமீபகாலமாக வெளிப்படுத்திவருகிறார்.தான் ஒரு பெருமைமிகு இந்து என்று சட்டசபையிலே அறிவித்தார். தன்னுடைய பிராமண அடையாளத்தையும் பறைசாற்றிக்கொண்டார். இதனால், சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் மேற்கு வங்க அரசியல் களத்தில் மதம் பேசுபொருளாகி உள்ளது.
DC அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் RCB அணி மகத்தான வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த DC அணி, 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அதனை சேஸ் செய்த RCB அணியின் கோலி (51), க்ருனால் (73) ஆகியோரின் அபார ஆட்டத்தினால் 18.3 ஓவர்களில் அந்த அணி வெற்றி இலக்கை எட்டியது.
DC அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி & க்ருனால் பாண்டியாவின் பார்ட்னர்ஷிப், RCB அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. 163 என்ற இலக்கை துரத்த களமிறங்கிய RCB அணியின் படிக்கல் 0, பட்டிதார் 6, பெத்தெல் 12 என அவுட் ஆகினர். இருப்பினும் கோலி & க்ருனாலின் நிதானமான ஆட்டம் RCB-ஐ வெற்றியை நோக்கி நகர வைத்திருக்கிறது.
இருண்ட கால ஆட்சியில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். TN அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் விலகியுள்ள நிலையில், மக்கள் மன்றம், நீதிமன்றத்தின் கட்டாயத்தால் அவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என தமிழிசை கூறியுள்ளார். இந்த நடவடிக்கை தானாக எடுக்கப்பட்டது அல்ல; தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது என்றும் விமர்சித்துள்ளார்.
உடலில் 500-க்கு மேற்பட்ட வேலைகளை செய்யும் கல்லீரல் தான், உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது. அப்படிப்பட்ட கல்லீரலை பராமரிக்க இவற்றை பின்பற்றவும்: *குளிர்பானம், சோடா, சர்க்கரையை தவிருங்கள் *உடல்பருமனை கட்டுப்பாட்டில் வையுங்கள் *வலிநிவாரணி மாத்திரைகள் கூடவே கூடாது *ஃபாஸ்ட்புட் உணவை தவிர்க்கவும் *மது, புகை வேண்டவே வேண்டாம் *கல்லீரல் அழற்சியை தவிர்க்கவும் *11 pm to 4 am கட்டாயமாக தூங்கவும்.
➤மேஷம் – துன்பம் ➤ரிஷபம் – செலவு ➤ மிதுனம் – ஆதரவு ➤ கடகம் – பெருமை ➤ சிம்மம் – பயம் ➤ கன்னி – தாமதம் ➤ துலாம் – வெற்றி ➤ விருச்சிகம் – பரிசு ➤ தனுசு – உயர்வு ➤ மகரம் – பொறுமை ➤ கும்பம் – ஆதாயம் ➤ மீனம் – லாபம்
பெற்றோர் விவாகரத்தால் வாழ்க்கை தலைகீழாக மாறியதாக நடிகை ஸ்ருதிஹாசன் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவரது தந்தை கமல்ஹாசன், தாயார் சரிகா இருவரும் பிரிந்தபோது ஸ்ருதிஹாசன் சரிகாவுடன் மும்பைக்கு சென்றார். ஆனால், அங்கு பெரும் சிரமத்தை அனுபவித்ததாக கூறிய அவர், BMWவில் இருந்த வாழ்க்கை லோக்கல் டிரைனுக்கு மாறியது எனத் தனது கசப்பான அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வரும் நிலையில்,விஜய் நடத்தியது பூத் கமிட்டி கூட்டம் போல இல்லை; பொதுக்கூட்டம் போல உள்ளது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மேலும், 2011-ல் வடிவேலுவுக்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறவில்லை என்றும் அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்போம் என்றும் தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இருந்த MI அணி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல் 5 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருந்த இந்த அணி, 5 தொடர் வெற்றிகள் மூலம் ராக்கெட் வேகத்தில் மேலே வந்துள்ளது. MI அணியின் இந்த அசுர வளர்ச்சிக்கு என்ன காரணம் என்று கமெண்ட்டில் சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.