India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நடிகர் யோகி பாபு நடிக்க உள்ள அடுத்த படத்தை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான எந்தப் படமும் பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை. இதன் காரணமாக அடுத்தடுத்து தான் நடிக்கவுள்ள படங்களைத் தேர்வு செய்வதில் அவர் மிகுந்த கவனம் செலுத்துகிறாராம். இயக்குநர் சிம்புதேவனின் ‘போட்’ தனக்கு கைகொடுக்கும் என யோகி பாபு நம்புகிறார்.

தஞ்சாவூரில் பாஜக வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தத்தை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாகனப் பேரணி மூலம் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “DMK என்றழைக்கப்படும் திமுக, DRUG முன்னேற்றக் கழகமாக மாறியுள்ளது. போதைப் பொருட்கள் மூலம் திமுகவுக்கு வந்த செருக்கை, ஓட்டு மூலமாக நொறுக்க வேண்டும். திமுகவை நாம் ஓட ஓட விரட்ட, தேர்தலில் மக்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும்” என்றார்.

▶ஏப்ரல் – 14 | சித்திரை – 01
▶கிழமை: ஞாயிறு ▶திதி: சூன்ய
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 03:45 – 04:30 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, இரவு 01:30 – 02:30 வரை
▶ராகு காலம்: இரவு 04:30 – 06:00 வரை
▶எமகண்டம்: நண்பகல் 12:00 – 01:30 வரை
▶குளிகை: மாலை 03:00 – 04:30 வரை
▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
▶சந்திராஷ்டமம்: சுவாதி

ஐ.எம்.எஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா 2ஆவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் உலக மக்களுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், 2019இல் இருந்து ஐ.எம்.எஃப்-ஐ வழிநடத்தி வருகிறார். இதற்கு முன் இவர் உலக வங்கியின் சி.இ.ஓ-ஆகவும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

நாட்டில் பல ஆண்டு காலமாக நிலவிவரும் வறுமையை ஒழிக்க நடக்கவிருக்கும் தேர்தல் ஒரு வரலாற்று வாய்ப்பு என சீமான் கூறியுள்ளார். திருச்சி பிரசாரத்தில் பேசிய அவர், “இந்தியாவில் உள்ள ஏழை எளிய பாமர மக்களும் அம்பானியும் ஒரே மாதிரியான வரியினை செலுத்துகின்றனர். ஆனால் இருவரது வாழ்க்கை தரம் தான் வேறுபட்டு இருக்கிறது. இந்நிலை இனியும் தொடரக் கூடாது. மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் முன்வர வேண்டும்” எனக் கூறினார்.

லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலை ஏவுகணை தடுப்பு அமைப்பு மூலம் இஸ்ரேல் தாக்கி அழித்துள்ளது. அத்துடன் இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இத் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மலக்குடலில் தேங்கி நிற்கும் நச்சு கழிவுகளை நீக்கி, முடி உதிர்வை தடுக்க நெல்லி தேநீரை பருகலாம் என சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். பாத்திரத்தில் நெல்லிச் சாறை ஊற்றி கொதிக்க விடவும். அது நன்றாக கொதித்தவுடன் அதில் இஞ்சி, மிளகு தூள் சேர்த்து இறக்கி விடவும். குடிக்கும் சூட்டில் அதனை வடிகட்டி தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து 45 நாள்கள் பருகி வந்தால் முடி உதிர்வு நிற்குமாம்.

2024 மக்களவைத் தேர்தலை I.N.D.I.A கூட்டணிக்கும் என்.டி.ஏ-வுக்கும் இடையில் நடக்கும் போராக தான் பார்ப்பதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். ஸ்ரீநகரில் பேசிய அவர், “இந்தப் போர் ஒரு தனிநபருக்கு எதிரானதல்ல, பாஜகவின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு எதிரானது. பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கம். அதற்கு முடிந்த பங்களிப்பைச் செய்வோம்” என்றார்.

முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், 19 ஆண்டுகளில் முதல் முறையாக ஊழியர்களின் எண்ணிக்கையில் சரிவை பதிவு செய்துள்ளது. 2004 இல் தொடங்கப்பட்ட அந்நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருந்தது. ஆட்குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாத டிசிஎஸ்ஸில் இருந்து 2023-24இல் 13,249 ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது டிசிஎஸ்ஸில் 6,01,546 ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

DC அணியின் நிர்வாகத்தில் தான் இருந்திருந்தால் பிரித்வி ஷாவை நிச்சயம் அடித்திருப்பேன் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ரவி பிஷ்னோய் ஓவரில் தேவையில்லாத ப்ரித்வி ஷா ஷாட்டை அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தார். எப்போதுமே அவர் நன்றாக பேட்டிங் செய்யும்போது ஒரு மோசமான ஷாட்டை விளையாடி ஆட்டமிழப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தப் போக்கை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.