India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை அடுத்து 6 அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது. ஆனால் தங்களின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என அவர்கள் கூறினர். இந்நிலையில், ‘பணி நிரந்தரம் செய்யுங்கள்’ என்பது ‘குப்பை அள்ளுபவனே தொடர்ந்து அள்ளட்டும்’ என்ற கருத்துக்கு வலுசேர்ப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். எனவே அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
ஆசிய கோப்பைக்கான PAK அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாபர் அசாம் & முகமது ரிஸ்வான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 15 பேர் கொண்ட PAK அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), முகமது ஹாரிஸ், அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபக்கர் ஜமான், ஹாரிஸ் ரௌஃப், ஹாசன் அலி, ஹாசன் நவாஸ், உசைன் தலத், குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது வசீம், சாஹிப்ஸாதா ஃபர்ஹான், அப்ரிடி, சுஃப்யான் மோகிம், சைம் அயூப் & சல்மான் மிர்சா.
நடிகை மலைக்கா அரோரா தனது 2-வது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். தான் மிகவும் ரொமான்டிக் எனவும் தனக்கு காதல் மீது நம்பிக்கை இருப்பதாகவும், ‘So never say never’ என தெரிவித்தார். 51 வயதான மலைக்கா, 1998-ல் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டு, 2017-ல் விவாகரத்து பெற்றார். 2018-ல் அவர் நடிகர் அர்ஜுன் கபூரை டேட்டிங் செய்ததாகவும் கூறப்பட்டது. இவர் தமிழில் ‘தையா தையா’ பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
பாமக பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிரான 16 குற்றச்சாட்டுகளை ராமதாஸ் உருவாக்கிய ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையாக அளித்துள்ளது. >ராமதாஸின் தைலாபுர வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டது>நாள்தோறும் ராமதாஸ் குறித்து அவதூறு பரப்பினார்>பாமக அலுவலகத்தை திட்டமிட்டு வேறு இடத்திற்கு மாற்றினார்> ராமதாஸிடம் அனுமதி பெறாமல் உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது
2026 தேர்தலில் பாமக அதிக இடங்களில் வெற்றி பெறும் நோக்கில், கூட்டணியை முடிவு செய்ய ராமதாஸுக்கே முழு அதிகாரமும் வழங்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பாமகவில் புதிய விதி 35 உருவாக்கப்பட்டு, இதன்படி எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் கூட்டணி, வேட்பாளர்கள் குறித்து ராமதாஸே முடிவெடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் நேரத்திற்கு சூட்டிங் வருவதே பெரிய விஷயமாக மாறிப்போன நிலையில், நடிகர் அஜித் விபத்தில் அடிப்பட்டு “ஹாஸ்பிடலில்” சிகிச்சையில் இருந்தபோது ஆம்புலன்ஸில் வந்து டப்பிங் பேசியதாக ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார். நான் உட்பட பல புதுமுக இயக்குநர்களை அஜித்தான் அறிமுகப்படுத்தினார். யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்துள்ளார். எளிதாக இந்த இடத்திற்கு அவர் வரவில்லை எனவும் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் இன்று(ஆக., 17) நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும், நிறுவனரும் ராமதாஸ் தான் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஆக., 9-ல் மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இன்னும் ஓராண்டுக்கு அன்புமணி தான் தலைவர் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் தான்தான் தலைவர் என தீர்மானம் நிறைவேற்றுவதால் பாமகவினர் குழப்பத்தில் உள்ளனர்.
அன்புமணி மேலும் ஓராண்டுக்கு பாமக தலைவராக செயல்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றியது செல்லாது என, ராமதாஸ் தலைமையிலான சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்புமணியால் நியமிக்கப்பட்ட பதவி நியமனம், அறிவிப்புகள் செல்லாது என்றும், ராமதாஸால் நியமிக்கப்பட்டவர்கள் அப்படியே தொடர்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து கூற போன் செய்தபோது, சின்னம்மா மறைந்துவிட்டார் என்ற செய்தியை வேதனையுடன் விசிக தலைவர் திருமா சொன்னதும், ‘கண்கள் கலங்கினேன்’ என்று CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சிற்றன்னையின் மீதான அவரது பாசப்பிணைப்பையும், அவரது மறைவு ஏற்படுத்தியிருக்கும் வேதனையையும், அவரது (திருமா) உள்ளத்தில் நிறைந்திருந்த சோகத்தையும் நினைத்து துயரம் அடைந்தேன் என உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
CSK அணிக்கு டெவால்ட் பிரேவிஸ் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து CSK வீரர் அஸ்வின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு <<17426625>>CSK விளக்கமும்<<>> அளித்திருந்தது. இந்நிலையில், அஸ்வின் தனது கருத்து குறித்து விளக்கமளித்துள்ளார். பிரேவிஸ் விவகாரத்தில் பிசிசிஐ விதிகளை CSK மீறியதாக நான் சொல்லவில்லை, யார் மீதும் தவறில்லை எனக் கூறி அந்தர் பல்டி அடித்திருக்கிறார் அஸ்வின்.
Sorry, no posts matched your criteria.