news

News March 15, 2025

சிறப்பு கொள்முதல் முறை… ரத்து செய்தது டாஸ்மாக்

image

குடோன்களில் இருப்பு நிலவரத்தை வைத்து மாவட்ட மேலாளர்களே மதுபான நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கும் சிறப்பு கொள்முதல் முறையை டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. விற்பனையை அடிப்படையாக வைத்து இனி கொள்முதல் செய்யவும் முடிவு செய்துள்ளது. போதிய வரவேற்பு இல்லாத போதும் சில மதுபான நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்கள் தரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

News March 15, 2025

கிரேட் சார் நீங்க..

image

தெலங்கானாவில் 80 வயதான ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர் பால் ரெட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 1970 முதல் 2004 வரை ஆசிரியராக பணியாற்றிய அவர், தற்போதும் கற்பிப்பதை நிறுத்தவில்லை. அரசுப் பள்ளிகளில் தெலுங்கு, கணிதம், ஆங்கிலம் கற்பித்து வருகிறார். தினமும் தனது சொந்த செலவில் 15 கி.மீ பயணித்து, ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார்.

News March 15, 2025

கொலை மிரட்டல் வந்தது… வருண் சக்கரவர்த்தி ஷாக் பேட்டி

image

டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக செயல்பட்ட அவர், 2021 டி20 உலகக் கோப்பையில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இதை சுட்டிக்காட்டி, தனக்கு இந்தியாவுக்கு வரக்கூடாது என மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், சிலர் பைக்கில் தன்னை துரத்தியதாகவும் கூறியுள்ளார்.

News March 15, 2025

ராசி பலன்கள் (15.03.2025)

image

➤மேஷம் – உயர்வு ➤ரிஷபம் – வெற்றி ➤மிதுனம் – சுபம் ➤கடகம் – செலவு ➤ சிம்மம் – பிரீதி ➤கன்னி – போட்டி ➤துலாம் – மேன்மை ➤விருச்சிகம் – ஆதரவு ➤தனுசு – பயம் ➤மகரம் – நலம் ➤கும்பம் – அன்பு ➤மீனம் – கவலை.

News March 15, 2025

மிஸ் பண்ண கூடாத சூப்பர் வாய்ப்பு: டிரம்ப்

image

உக்ரைன் போரை நிறுத்த நல்ல வாய்ப்பு அமைந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்ததாகவும், ரஷ்ய வீரர்களால் சூழப்பட்டுள்ள உக்ரைன் வீரர்களை எதுவும் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் நேற்று புடினைச் சந்தித்து பேசிய நிலையில், டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

News March 15, 2025

IPL: மஞ்சள் படைக்கு மாநகர பஸ்களில் ஃப்ரீ…!

image

சேப்பாக்கத்தில் IPLபோட்டிகள் நடைபெறும்போது, போட்டியை காணச் செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்யப்படும். தற்போது மாநகர பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட்டை வைத்து, போட்டி தொடங்குவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்பு மட்டுமே பேருந்துகளில் (NON AC) பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 15, 2025

REWIND: இந்தியாவின் முதல் பேசும் படம் வெளியான நாள்!

image

இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா, 1931ஆம் ஆண்டு இதேநாளில் (மார்ச் 14) வெளியானது. ஹிந்தியில் வெளியான இந்த படத்தை அர்தேஷிர் இரானி என்பவர் இயக்கி தயாரித்து வெளியிட்டார். பார்சி மொழி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட ஆலம் ஆரா படத்தின் நீளம் 124 நிமிடங்கள். ஆலம் ஆரா என்பதற்கு உலகத்தின் ஆபரணம் என்பது பொருள். நாட்டின் முதல் முழு நீளத் திரைப்படம் 1913-ல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற மௌன படமாகும்.

News March 14, 2025

தமிழ்நாட்டை சீண்டிய பவன் கல்யாண்

image

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை விவகாரத்தில் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார். தனது கட்சி விழாவில் தமிழ், கன்னடம், மராத்தி, ஹிந்தி மொழிகளில் பேசியவர், ஏன் இத்தனை மொழிகளில் பேசுகிறேன் என கேட்டார். தொடர்ந்து, தமிழ்நாடு மட்டுமல்ல, தேசத்திற்கே பல மொழிகள் தேவை எனவும், அப்போதுதான் ஒரு மாநிலத்தவரை, பிற மாநிலத்தவர் புரிந்து கொண்டு அன்பை பரிமாறிக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

News March 14, 2025

நாளை தேர்வு எழுத முடியாதா… சிபிஎஸ்இ மீண்டும் வாய்ப்பு

image

ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. மேலும் சில மாநிலங்களில் நாளை (மார்ச் 15) கொண்டாடப்படவுள்ளது. இதனால் நாளை நடைபெறவுள்ள சிபிஎஸ்இ இந்தித் தேர்வுகளில் அந்த மாநில மாணவர்களால் பங்கேற்க முடியாது. அத்தகைய மாணவர்கள் பயப்படத் தேவையில்லை, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வுகளின்போது இவர்கள் அந்த தேர்வுகளை எழுதலாம் எனக் கூறியுள்ளது.

News March 14, 2025

வறுமையில் வாடும் முகலாயப் பேரரசரின் கொள்ளுப் பேத்தி

image

கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் ஷா, 1837இல் ஆங்கிலேயர்களால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். பின்னர் 1857இல் சிப்பாய் புரட்சிக்கு காரணமென ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டு 1862இல் உயிரிழந்தார். அவரின் கொள்ளுப் பேத்தியான சுல்தானா பேகம், காெல்கத்தா அருகே குடிசை வீட்டில் வசிக்கிறார். அரண்மனையில் வாழ வேண்டிய அவர், தற்போது வறுமையில் வாடுகிறார். அவருக்கு அரசு உதவியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

error: Content is protected !!