India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 207 ▶குறள்: எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். ▶பொருள்: எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
IPLஇல் முதல் சதம் அடித்த வீரர் யார் என பார்க்கலாம். 2008ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான பாேட்டியில் ஆர்சிபி வீரர் பிரெண்டம் மெக்கல்லம் (நியூசிலாந்து) 158 ரன்கள் குவித்தார். இதுவே ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட முதல் சதம் ஆகும். இந்திய அணி வீரர்களில் முதன்முதலில் சதமடித்தவர் மணிஷ் பாண்டே ஆவார். 2009ஆம் ஆண்டில் டெக்கான் சார்ஜர்சுக்காக அவர் 114 ரன்கள் அடித்தார்.
2025-26ஆம் நிதியாண்டிற்கான TN பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். அதில், ₹1ல் TN அரசின் செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. செயல்பாடுகளும் பராமரிப்புகளும்- 3.5, மூலதனச் செலவு -11.8, வட்டி செலுத்துதல்- 14.5, உதவித்தொகை, மானியங்கள்- 31.6, கடன் வழங்குதல்- 1.8, ஓய்வூதியம், ஓய்வுக்கால பலன்கள் -8.5, சம்பளங்கள் -18.6, கடன்களை திருப்பிச் செலுத்துதல் -9.7 பைசா செலவாகிறது.
▶மார்ச்- 15 ▶பங்குனி – 1 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 09:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 01:30 AM – 03:00 AM ▶குளிகை: 06:00 AM- 07:30 AM ▶திதி: சூன்ய ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: சதயம் ▶நட்சத்திரம் : உத்திரம்.
2025-26ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை, சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். அதில், ₹1ல் TN அரசின் வரவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பொதுக்கடன் -31.4, கடன்களின் வசூல், மூலதன வரவு -0.2, மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள் -4.9, மத்திய வரிகளின் பங்கு- 12, மாநிலத்தில் சொந்தவரி அல்லாத வருவாய் – 4.9, மாநிலத்தில் சொந்த வரி வருவாய் – 45.6 பைசாவாகும்.
கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது ஐபிஎல் 2025 தொடர். வருகிற 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன. சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் 23ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த 4 தனித்துவமான இயக்குநர்களை இயக்கியது மறக்க முடியாதது என இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ந்துள்ளார். ‘டிராகன்’ படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த போட்டோவை பகிர்ந்த அவர், நினைவில் கொள்ளவேண்டிய தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். அதில், இயக்குநர்கள் KS ரவிக்குமார், கெளதம் மேனன், மிஸ்கின், பிரதீப் ஆகியோர் உடன் அஸ்வத்தும் இருக்கிறார். இதில் உங்களுக்கு பிடித்த இயக்குநர் யார்?.
இன்று (மார்ச் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கர்நாடகா Ex CM எடியூரப்பா மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மார்ச் 15ம் தேதி நேரில் ஆஜராக எடியூரப்பா உட்பட 4 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் எடியூரப்பா தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், 4 பேரும் ஆஜராகும் சம்மனை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் ஹிந்தி எதிர்ப்பை பவன் கல்யாண் விமர்சித்துள்ளார். தமிழ் படங்களை ஏன் ஹிந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய அவர், வடமாநிலங்களின் காசு மட்டும் வேண்டும், ஆனால் அவர்களின் மொழி வேண்டாமா எனவும் அவர் வினவியுள்ளார். ஒரு மொழிக்கு எதிராக ஏன் பாரபட்சம் காட்டப்படுகிறது எனவும், சமஸ்கிருதமும், ஹிந்தியும் நமது தேசத்தின் மொழிகள் அல்லவா எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.