news

News April 19, 2024

தூத்துக்குடியில் வாகனம் உடைப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் பெட்டலூரணி கிராமத்தில் காவல்துறை வாகனத்தை உடைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன் பதப்படுத்தும் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அக்கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு வந்த போலீசார், கள்ள ஓட்டு போட வந்ததாக நான்கு பேரை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசாரின் வாகனத்தை மக்கள் அடித்து உடைத்தனர்.

News April 19, 2024

கிராமங்களிடம் பாடம் கற்காத சென்னை

image

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் திருவிழாக் களைகட்டியுள்ளது. வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் கிராம மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். ஆனால், படித்தவர்கள் அதிகம் வசிக்கும் சென்னையில் வாக்குப்பதிவு குறைவாகவே உள்ளது. ஒரு மணி நிலவரப்படி, கிராமங்களின் சராசரி வாக்குப்பதிவு 40%ஐ கடந்துள்ள நிலையில், சென்னையில் 32% மக்களே வாக்களித்துள்ளனர். கிராமங்களை போல சென்னைவாசிகளும் வாக்களிக்க முன்வர வேண்டும்.

News April 19, 2024

₹2,011 கோடி லாபம் ஈட்டிய பஜாஜ்

image

2023-24 நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் ₹2,011 கோடி லாபம் ஈட்டியிருப்பதாக பஜாஜ் தெரிவித்துள்ளது. பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2022-23 நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் ₹1,704 கோடி லாபம் ஈட்டியதாகவும், அது 2023-24 நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் அதிகரித்துள்ளதென்றும் பஜாஜ் தெரிவித்துள்ளது. ஜன-மார்ச்சில் ₹11,554 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாகவும் பஜாஜ் கூறியுள்ளது.

News April 19, 2024

வாக்குக்கு பணம்? உரிமையை பறித்துவிடும்

image

தேர்தலில் வாக்களிப்பது அனைவரின் ஜனநாயகக் கடமையாகும். இதில் வாக்களிக்க பணம் பெறுவதும், பரிசுப் பொருள் வாங்குவதும் மிகப்பெரும் தவறாகும். இதுபோல பணம், பரிசுப் பொருள் தந்து ஒருவர் தேர்தலில் வெற்றி பெறும்பட்சத்தில், செலவை மீட்டெடுக்க எதையும் செய்வார். அத்துடன் அவரை நேரில் சந்தித்து கோரிக்கை குறித்து மக்கள் கேள்வி எழுப்பவும் முடியாது. இதை வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

News April 19, 2024

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு ஓட்டு என்பது பொய்

image

தமிழகத்தில் காலை முதல் அமைதியாக மக்கள் வாக்களித்து வருகின்றனர். இதற்கிடையில் வட சென்னை தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி மகாகவி பாரதி நகரில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்திற்கு வாக்கு செல்வதாக ஒருவர் புகார் அளித்தார். இதனால், திமுக, அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, புகார் அளித்த அந்த நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பொய்யான தகவலை கூறியது தெரியவந்துள்ளது.

News April 19, 2024

வாக்களிக்க சென்றவர்கள் அடுத்தடுத்து மரணம்

image

திருத்தணி அருகே வாக்கு செலுத்த வந்த கனகராஜ் (59) என்பவர் வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, சேலம் அருகே வாக்களிக்க சென்ற சின்னபொண்ணு (77), பழனிசாமி (65) ஆகிய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்து சில நிமிடங்களில், மேலும் ஒருவர் வாக்குச்சாவடியில் உயிரிழந்தது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News April 19, 2024

வெள்ளை சட்டையில் வாக்களித்த ஹீரோக்கள்

image

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில், திரைப் பிரபலங்கள் பலரும் காலை 7 மணி முதலே ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, அஜித், விஜய், ரஜினி, கமல், விக்ரம், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், வெள்ளை சட்டையில் வந்து வாக்களித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

News April 19, 2024

ஜனநாயகத்தை காப்பதற்கான யுத்தம் தொடக்கம்

image

நாட்டில் ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பதற்கான யுத்தம் இன்று தொடங்கியிருப்பதாக கார்கே தெரிவித்துள்ளார். அவரின் X பக்க பதிவில், மக்களவைக்கு முதல்கட்டத் தேர்தல் தொடங்கியுள்ளதாகவும், இதில் மிகவும் கவனமுடன் வாக்காளர்கள் வாக்கைப் பதிவு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் விதியை தீர்மானிக்கும் சக்தி வாக்குகளில் உள்ளதை உணர்ந்து வாக்களிக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

News April 19, 2024

வாக்களித்து வீட்டீர்களா, உடனே சென்று விடாதீர்கள்

image

தேர்தலில் வாக்குப்பதிவு செய்துவிட்டு, உடனே அங்கிருந்து சென்று விட வேண்டாம். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இவிஎம் இயந்திரம் அருகில் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும். அதில் வெளிவரும் சீட்டை பார்த்து தங்கள் வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க வேண்டும். அதன்பிறகு வாக்காளர்கள், சாவடியை விட்டு செல்வதே சிறப்பு.

News April 19, 2024

வாக்களிக்காவிடில் விடுமுறை ரத்து

image

விடுமுறை அளித்தும் வாக்களிக்காவிட்டால் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறையை சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்படும் என தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். இதேபோல் உள்துறை, டாஸ்மாக் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வாக்களிக்காத ஊழியர்கள் விடுப்புக்கணக்கில் இருந்து ஒருநாள் ரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

error: Content is protected !!