India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக களம் இறங்கினார். அவரை எதிர்த்து அதே பெயரில் பல பன்னீர்செல்வங்கள் களம் இறங்கியதால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், வாக்கு இயந்திரத்தில் அடுத்தடுத்து ஓ.பன்னீசெல்வம் என்று பெயர்கள் இடம்பெற்றிருப்பது மக்களை குழப்பும் வகையில் அமைந்திருக்கிறது. இதனால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் தேர்தலில், சினிமா பிரபலங்கள் பலரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றியுள்ளனர். இயக்குநர் ஷங்கர் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். இதேபோல், நடிகர் ஜெயம் ரவி, SV சேகர், இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் ஜனனி மற்றும் அதுல்யா ரவி உள்ளிட்ட பலரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினர்.

தேர்தலில் அனைவரும் வாக்களிக்குமாறு தவெக தலைவர் விஜய் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று காலையிலேயே அவர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். இந்நிலையில், தேர்தலில் வாக்களித்து நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜக நிர்வாகியான குஷ்பு #Vote4INDIA என X பக்கத்தில் பதிவிட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்த அவர், இந்தியாவிற்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். தான் எது செய்தாலும் சிலர் பிரச்னையாக்குவதாக குற்றம்சாட்டிய அவர், குழப்பத்தை உருவாக்க நினைப்பதாகவும் தெரிவித்தார். இந்தியா கூட்டணியை குறிப்பதாக இருந்தால் #Vote4I.N.D.I.A. என பதிவிட்டிருப்பேன் என்றார்.

மதியம் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. புதுச்சேரியில் 58.34 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 41.47 சதவீத வாக்குகள் பதிவாகியிருகின்றன. இத்தகவலை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இந்தியாவை மிகப்பெரிய வல்லரசு நாடாக மாற்றுவதற்கான தேர்தல் இது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த அவர், உலகளவில் போர் நடந்து வரும் சூழலில் இந்தியாவில் போர்க்கால அடிப்படையில் செயல்படும் அரசு தேவை என்றார். அத்தகைய சூழலில், வலுவான ஆட்சி அமைய வேண்டும். பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

விஜய்யை நடிகர் விஷால் காப்பி அடிக்கிறார். விஜய்யை, இளைய தளபதி என அழைத்ததால், விஷால் புரட்சி தளபதி என போட்டுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து, அரசியலில் குதித்துள்ள விஜய் 2026 தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் இவரும் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த தேர்தலில் விஜய் எப்படி சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினாரோ, அதே பாணியை இவரும் பின்பற்றி இருக்கிறார்.

தேர்தல் நேரத்தில் பிரபலங்களின் பதிவு முக்கியத்துவம் பெறும். அந்த வகையில், நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் X பதிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தான் வாக்களித்த புகைப்படங்களை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், எங்கள் கடமையை செய்துவிட்டோம், நீங்கள்? என கேட்டுள்ளார். இதனோடு, அவர் #Vote4INDIA என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியது இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறாரா? என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது.

2019 சட்டப்பேரவைத் தேர்தலின் போது கருப்பு, சிவப்பு நிறம் கொண்ட சைக்கிளில் வந்து நடிகர் விஜய் வாக்களித்தது பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் அவர் எப்படி வருவார் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இந்தத் தேர்தலில் விருப்பப்படி வாக்களியுங்கள் என கூறியிருந்த விஜய், அதை உறுதி செய்யும் விதமாக எவ்வித குறியீடும் இல்லாமல் வந்து வாக்களித்துச் சென்றார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் வாக்குப்பதிவு மந்தமாக நடந்து வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதத்தில் தமிழகத்திலேயே கடைசி 3 இடங்களை சென்னை தொகுதிகள் பிடித்துள்ளன. மத்திய சென்னை 32.31%, தென்சென்னை 33.93%, வட சென்னை 35.09% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 44.08% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Sorry, no posts matched your criteria.