India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தற்போதைய சூழலில் நடுத்தர மக்கள் மாதத் தவணையில் பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளது. பலர் EMI-இல் சிக்கி கடனை அடைக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், EMI மூலம் பொருள்களை வாங்குவதாக இருந்தால் ‘40% EMI’ விதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது, உங்களது மொத்த சம்பளத்தில் மாத EMI 40%ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. RCB தரப்பில் சிறப்பாக ஆடிய ஜேக்ஸ் (55), படிதார் (52) அரை சதம் அடித்தனர். கடைசிவரை போராடிய கரண் ஷர்மா 25 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பெர்குசன் 2 ரன்கள் எடுக்க முயற்சித்து ரன் எடுத்து அவுட்டானார். இதையடுத்து KKR த்ரில் வெற்றிபெற்றது.

கடந்த வாரம் இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களின் மூலதன மதிப்பு ரூ.1.40 இலட்சம் கோடி சரிந்தது. ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் கடுமையாக பாதிக்கப்பட்டன. டிசிஎஸ்-இன் மூலதன மதிப்பு 62,538 கோடி சரிந்து ரூ.13.84 இலட்சம் கோடியாக உள்ளது. அதே போல, இன்ஃபோசிஸ் ரூ.30,488 கோடியை இழந்து ரூ.5.85 இலட்சம் கோடியாக உள்ளது. ஐசிஐசிஐ, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் மதிப்பும் கணிசமாக சரிந்தது.

ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கூடுதல் பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு மக்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வதால் ரயில்வே கோட்ட அலுவலர்களுக்கு தெற்கு ரயில்வே புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு நிறுத்தத்திலும், ரயில் நிற்கும் நேரத்தை அதிகரிக்கவும், பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் ரயில்களை இயக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சினிமா அழியாது என்பதற்கு ‘கில்லி’ படத்தின் ரீரிலீஸே சாட்சி என இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார். ‘ரத்னம்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், விரைவில் போலீஸ் கதை அம்சம் கொண்ட படத்தை இயக்க இருப்பதாகக் கூறினார். மேலும், ‘கில்லி’ படத்தின் ரீரிலீஸுக்கு கூடியுள்ள கூட்டம், சினிமா எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை காட்டுகிறது. நல்ல படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்களித்திருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. 19ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 8 லட்சத்து 60 ஆயிரம் பெண்கள் ஆண்களை விட அதிகமாக வாக்களித்துள்ளனர். 2.12 கோடி ஆண்கள் வாக்களித்திருக்கும் நிலையில், 2.21 கோடி பெண்கள் வாக்குப்பதிவு செய்திருக்கின்றனர். 2019ஆம் ஆண்டு ஆண்களே அதிகமாக வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சண்டிகரில் இன்று நடைபெறும் இரண்டாவது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப், குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரண் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் குஜராத் அணி பவுலிங் செய்ய உள்ளது. இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் GT 3 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்திலும், PBKS 2 வெற்றிகளுடன் 9ஆவது இடத்திலும் உள்ளது.

தமிழ்நாட்டில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஈரோட்டில் இன்று அதிகபட்சமாக 42.2 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. அதே போல, கரூர் பரமத்தி – 41.5, சேலம் – 41, வேலூர் – 40.8, திருச்சி – 40.6, மதுரை – 40.2, திருப்பத்தூர் – 40.2, தருமபுரி – 40.2, திருத்தணி – 40, கோவை – 39.2, தஞ்சை – 39.5, சென்னை – 37.8, புதுச்சேரி – 36 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிவரும் பெங்களூரு அணி வீரர் படிதார் அரை சதம் கடந்துள்ளார். 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசிய அவர் 23 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ரஸல் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஜேக்ஸ் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து RCB அணி 12 ஓவர்கள் முடிவில் 145/4 ரன்கள் எடுத்துள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

பொதுப்பணி, தொழில்நுட்பம், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு திருமணம் ஆகாத ஆண்கள்/பெண்கள் நாளைக்குள் (ஏப்.22) <
Sorry, no posts matched your criteria.