India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

DC-க்கு எதிரான நேற்றைய IPL போட்டியில், MI வீரர் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் IPL வரலாற்றில் DC-க்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில், கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ரோஹித்- 1032, கோலி- 1030, ரஹானே- 858, உத்தப்பா- 740, தோனி- 709 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ஆசிரியா் ஓய்வூதிய பலன்களை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டுமென மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தனிப்பட்ட அரசு நிதி சாா்ந்த தணிக்கைத் தடை நிலுவை இல்லையென்றால், உடனடியாக 30 நாள்களுக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். பணிக் காலத்துக்கு உட்படாத முந்தைய அல்லது பிந்தைய பள்ளி சாா்ந்த தணிக்கை தடைகளுக்காக, ஓய்வூதிய பலன்களை நிறுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜாவா தீவின் கடற்கரையில், 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 70 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

CSK-SRH இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஹைதராபாத்தில் நடந்த முந்தைய போட்டியில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் சொந்த மண்ணில் பதிலடி கொடுக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும், லக்னோவுக்கு எதிரான 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த CSK அணி, புள்ளிப் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று (ஏப்.28) ஒரே நாளில் 20,583 மெகாவாட் மின் தேவை பதிவாகியுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இருந்த மின் நுகர்வுடன் ஒப்பிடும்போது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், அதிகப்படியான மின் நுகர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாகி கொண்டே செல்வதால், நாளுக்கு நாள் மின்தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வெயில் தாங்க முடியாமல் 10 பேர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான வெப்பம் காரணமாக பாலக்காடு, ஆலப்புழா, கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்ததால், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு தாமதமானதே இதற்கு காரணம் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

▶குடிநீர் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
▶அடுத்த 5 நாள்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
▶வறட்சி பாதித்த 22 மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
▶தமிழக மக்கள் மீது மோடி கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை: செல்வப்பெருந்தகை
▶தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் ORS கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
▶IPL: ராஜஸ்தான் அணி வெற்றி

RCB-GT இடையேயான ஐபிஎல் போட்டி, இன்று மதியம் 3.30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வி அடைந்த RCB அணி, SRH அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. எஞ்சி இருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதால், RCB அணி இன்று குஜராத்தை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

விடுதலை படத்தின் 2ஆம் பாகம் சிறப்பாக வந்துள்ளதாக நடிகர் சூரி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 2ஆம் பாகத்தில் ‘வாத்தியார்’ கதாபாத்திரத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் எனவும், முதல் பாகத்தைக் காட்டிலும் 2ஆம் பாகம் அனைவருக்கும் பிடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், ‘கொட்டுக்காளி’ திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அவர் உறுதியளித்தார்.

மக்களவைத் தேர்தலில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நாளை குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று ஓய்வெடுக்க உள்ளார். இதனால் கொடைக்கானலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் வருகையை முன்னிட்டு, கொடைக்கானல் பகுதிகளில் ஏப்ரல் 29 முதல் மே 4ஆம் தேதி வரை (5 நாள்கள்) டிரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. பிரதீப் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.