news

News August 18, 2025

துரைமுருகனிடம் நலம் விசாரித்த CM ஸ்டாலின்

image

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனை CM ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது அவருடன் எ.வ.வேலு உடனிருந்தார். கையில் கட்டுடன் துரைமுருகன் இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. முழுமையான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ஜூனில் காய்ச்சல் காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

News August 18, 2025

INDIA கூட்டணியிடம் ஆதரவு கேட்கும் NDA?

image

NDA கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடக்கவுள்ளது. இதனிடையே, மல்லிகார்ஜுன கார்கேவை தொலைபேசியில் தொடர்புகொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், NDA வேட்பாளர் CP ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA கூட்டணி வேட்பாளருக்கு INDIA கூட்டணி ஆதரவு அளிக்குமா?

News August 18, 2025

BREAKING: கவர்னர் ஆகிறார் எச்.ராஜா

image

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பாஜகவின் கழுகு பார்வை தமிழகத்தை நோக்கியே இருக்கிறது. சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், எச்.ராஜா கவர்னராக நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு பிறகு, மகாராஷ்டிரா (CPR-க்கு பதில்) அல்லது நாகலாந்து (இல.கணேசனுக்கு பதில்) கவர்னராக எச்.ராஜா நியக்கப்படலாம் என தெரிகிறது.

News August 18, 2025

Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

image

11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விகளுக்கு <<17440679>>இங்கே <<>>கிளிக் செய்யவும்
1. நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ்.
2. அகநானூறு.
3. 1945.
4. சங்கராபரணம்.
5. நிலா.
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?

News August 18, 2025

பிள்ளை சரியா படிக்கலையா? இதை பண்ணுங்க

image

உங்க பிள்ளை சரியா படிக்கலன்னு நினைச்சு வருத்தமா? பள்ளி நேரம் போதாதுன்னு அவங்கள டியூஷன்லயும் சேர்த்துவிட்டிருப்பீங்களே? டியூஷனை நிறுத்திட்டு அவங்கள மியூசிக் கிளாஸ்ல சேர்த்துவிடுங்க. காரணம், இசை பயிற்சி ஒரு குழந்தையோட Dopamine ஹார்மோனை அதிகரிக்குமாம். இதனால Critical thinking, எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை அதிகரிக்கிறதோடு, அறிவு திறன் மேம்படும்னு Stanford பல்கலை., ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.

News August 18, 2025

நெகிழ்ச்சியில் CPR-ன் தாய் பகிர்ந்த விஷயம்..

image

துணை ஜனாதிபதி தேர்தலுக்காக NDA கூட்டணியின் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதற்கு, அவரது தாயார் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். முதல் துணை ஜனாதிபதியாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பெயரைத்தான் தனது மகனுக்கு வைத்ததாகவும், இன்று அதே பதவியில் தனது மகன் அமரவிருக்கிறார் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்த அவர் இதற்காக பாஜகவிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

News August 18, 2025

பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

image

✪துணை <<17440516>>ஜனாதிபதி <<>>தேர்தல்.. திமுகவுக்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்
✪மனசாட்சி உள்ள <<17440212>>மக்களாட்சியை <<>>நோக்கி.. தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
✪ஏற்றத்தில் <<17439680>>பங்குச்சந்தை<<>>.. 1,084 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்
✪<<17439383>>உக்ரைன் <<>>NATO-வில் சேரக்கூடாது.. டிரம்ப்
✪₹400 கோடி <<17439244>>வசூலை<<>> அள்ளிய ‘கூலி’

News August 18, 2025

பிழையை திருத்திக் கொள்ள திமுகவுக்கு வாய்ப்பு: நயினார்

image

2002-ல் ஜனாதிபதி வேட்பாளராக அப்துல் கலாம் களமிறங்கியபோது, திமுக எதிராக வாக்களித்தது. இந்நிலையில், மாபெரும் சாதனை தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையில் இருந்த திமுக, அன்று ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்தது. அதை திருத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு தற்பொழுது அமைந்துள்ளது. துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழரை (CPR) DMK ஆதரிக்க வேண்டும் என நயினார் வலியுறுத்தியுள்ளார்.

News August 18, 2025

பிறப்பு மட்டுமே இல்லாத ஒரு போர்வீரன்!

image

‘ரத்தத்தை கொடுங்கள்.. நான் விடுதலை பெற்றுக் கொடுக்கிறேன்’ என முழக்கமிட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உலகின் கண்களில் இருந்து மறைந்த தினம் இன்று. அவரால் ஈர்க்கப்பட்டு பல இளைஞர்கள் இந்திய தேசிய ராணுவத்தில்(INA) இணைந்து பிரிட்​டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடினர். ஆகஸ்ட் 18, 1945-ல் தைவானில் விமான விபத்தில் நேதாஜி மரணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இன்றும் அவரின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.

News August 18, 2025

துணை ஜனாதிபதி தேர்தல்.. திமுகவுக்கு புதிய நெருக்கடி

image

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசி வாயிலாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். தமிழகத்தை சேர்ந்தவருக்கு உங்களின் ஆதரவு இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். CPR-க்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால், தமிழரை திமுக புறக்கணித்து விட்டதாக சட்டப்பேரவைத் தேர்தலின்போது NDA பரப்புரை செய்ய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!