India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேளாண் நலத்துறையின் அனைத்து திட்டங்களையும் அதன் பயனையும் நேரடியாக விவசாயிகளின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்கிறது உழவரைத் தேடி வேளாண்மை திட்டம். இதன் கீழ், விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது & 4-வது வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த கிராமங்களில் நடக்கும். விவசாயிகளே, உங்களுக்கு சந்தேகங்கள், கோரிக்கைகள் இருந்தால் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம். அனைவரும் தெரிந்துகொள்ள SHARE THIS.

எங்காவது வைத்துவிட்டால், அவசரத்துக்கு தேட முடியாது என்ற காரணத்தால், பல பெண்களும் தாலியில் Safety Pin-ஐ மாட்டி வைப்பார்கள். ஆனால், இரும்பினால் செய்யப்படும் Safety pin-ஐ தாலியுடன் கோர்த்து வைத்திருப்பது நல்லதல்ல என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஜோதிடத்தின் படி, இரும்பு சனி பகவானின் பார்வை பெற்ற உலோகமாகும். இது எதிர்மறை ஆற்றலை கொடுக்கும் என்பதால், தாலியுடன் போட வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். SHARE IT.

குடும்பங்கள் கொண்டாடும் படங்களை இயக்கிய இயக்குநர் வி.சேகர் மரணப்படுக்கையில் இருக்கிறார். தற்போது அவரின் உடல்நிலை மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் குணமடைந்து மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிய சினிமா பிரபலங்கள் ஹாஸ்பிடலுக்கு நேரில் செல்லவுள்ளனர்.

தகுதியான ஒருவரின் பெயர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். CM ஸ்டாலின் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அவர், வாக்களர் பட்டியலை சரிபார்ப்பது அவசியம்தான் ஆனால் அதில் அவசரம் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 2026 தேர்தலுக்கு பிறகே SIR பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி டிசம்பர் இந்தியா வரவுள்ளார். கொச்சியில் கால்பந்து விளையாட்டில் பங்கேற்க இருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டு, சுற்றுப்பயணத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அட்டவணையில் முதலில் அகமதாபாத் நகருக்கு அவர் செல்வதாக இருந்த நிலையில், புதிய அட்டவணையில் அகமதாபாத்துக்கு பதிலாக, அவர் ஹைதராபாத் வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் சென்னைக்கும் வந்திருக்கலாம்ல?

கரூர் துயர சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் கூறியது எந்த கருத்தாக இருந்தாலும் அது பாராட்டதக்கதுதான் என DCM உதயநிதி கூறியுள்ளார். ஆனாலும், இதற்கு முறையாக யார் பேட்டி கொடுக்கனுமோ அவர் இன்னும் கொடுக்கவில்லை என்றார். முன்னதாக அஜித்குமார் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கரூர் துயர சம்பவத்தில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளதாகவும், தனி ஒருவர் மீது குறை கூறுவது நியாயமாகாது எனவும் பேசியிருந்தார்.

செங்கோட்டையன் நீக்கம் குறித்து செல்லூர் ராஜு விளக்கமளித்தார். அப்போது, எனக்கும்தான் மன வருத்தம் இருக்கும், அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது; அதை EPS-யிடம் தான் கூற வேண்டும் என்றார். உடனே, உங்களுக்கு என்ன மனவருத்தம் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். சுதாரித்துக் கொண்ட அவர், எனக்கு மனவருத்தம் இல்லை; EPS என்னை நன்றாக வைத்துள்ளார். இதை ஒரு BREAKING NEWS-ஆக போட்டு விடாதீங்க என கேட்டுக்கொண்டார்.

ஓவல் மைதானத்தில் நடக்கும் 3-வது T20-யில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சஞ்சு, ராணா, குல்தீப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக, ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளனர். பிளேயிங் XI: அபிஷேக் சர்மா, கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஜிதேஷ், துபே, அக்சர், சுந்தர், அர்ஷ்தீப், வருண் சக்கரவர்த்தி, பும்ரா.

தேர்தல் ஆணையம் SIR-ஐ திரும்ப பெறவில்லை என்றால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், SIR-ஐ ஏற்க முடியாது எனவும், இது வாக்குரிமைக்கு எதிரானது, சட்டவிரோதமானது எனவும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

வாக்களர் பட்டியலைச் சீர்செய்வது என்பதைவிட, குடியுரிமையைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே கருதவேண்டி உள்ளதாக SIR தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் திருமா தெரிவித்துள்ளார். அதாவது, CAA, NRC ஆகிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில்தான் தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது. எனவே, SIR நடவடிக்கையை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டுமென அனைத்து கட்சிகளிடமும் வலியுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.