India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
<<17416427>>SBI வங்கியை<<>> தொடர்ந்து IMPS முறையில் பணப் பரிமாற்றம் செய்வதற்கான கட்டணங்களை HDFC வங்கியும் உயர்த்தியுள்ளது. அதன்படி, ₹1,000 வரை ₹2.5, ₹1,000 – ₹1 லட்சம் வரை ₹5, ₹1 லட்சத்திற்கு மேல் ₹15 உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், NEFT முறையில் பணம் அனுப்புவதற்கும் ₹24 வரை கட்டணம் அதிகரித்துள்ளது. மேலும், சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு இனி 1 ஆண்டுக்கு 10 பக்கங்களை கொண்ட செக் புக் மட்டுமே இலவசம். SHARE IT.
அரசியலமைப்பின் வழியில் தன்னாட்சி அமைப்புடன் இயங்கும் தங்களை தவறான புகாரால் யாரும் மிரட்ட முடியாது என ECI தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார். BJP-க்கு ஆதரவாக மகாராஷ்டிரா, கர்நாடகா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ECI, வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் குற்றம்சாட்டினார். மேலும், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அசல் வாக்காளர்கள் தங்களுக்கு வாக்குகளைச் செலுத்தினாலே திமுக வென்றுவிடும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். CM தொகுதியில் 9,000 போலி வாக்குகள் இருந்ததாக <<17426871>>அனுராக்<<>> தாக்கூர் கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, தங்களுக்கு போலி வாக்காளர்கள் தேவையில்லை என்றார். பொன்னியின் செல்வனைப் போல் 2-ம் பாகம், 3-ம் பாகம் என திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் நீங்க போன் யூஸ் பண்றீங்க’னு, எந்த App-ல் மூழ்கி போயிருக்கீங்க’னு தெரிஞ்சிக்கணுமா? உங்க போனிலேயே இந்த தகவலை தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு போன்களில் Settings-> Digital Wellbeing option சென்று பாருங்க. இது Iphone-களில் Screen Time app and the Attentive app என்ற பெயரில் இருக்கிறது. நீங்க எவ்வளவு நேர விரையும் பண்றீங்க என புரியும். SHARE IT.
தேர்தல் ஆணையத்தை கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக BJP மாற்றியுள்ளதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சேலம் CPI மாநாட்டில் பேசிய அவர், ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தலையே கேலிக் கூத்தாக்கி விட்டதாக சாடினார். ECI ஆணையர் நியமனத்தில் சதி செய்கிறார்கள் என்றால், வாக்காளர் பட்டியலிலும் சதி செய்கிறார்கள் என கூறினார். BJP உடன் இணைந்து ECI வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக INDIA கூட்டணியினர் கூறி வருகின்றனர்.
நமது அண்டை நாடான மியான்மரில் 2021 முதலே ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதனால், கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ராணுவம் தரப்பில் அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் பள்ளி மீது குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று மொகோக் நகரில் ராணுவம் நடத்திய தாக்குதலில் கர்ப்பிணி உள்பட 21 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. So sad..!
வாங்க உங்க மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுப்போம். மேலே உள்ள படத்தில் கடைசியாக இருக்கும் 5+1= ? எவ்வளவு சொல்லுங்க. பார்க்கும் போது கொஞ்சம் கடினமானதாக இருந்தாலும், கொஞ்சம் பொறுமையாக, உன்னிப்பாக கவனித்து பாருங்கள். உங்களுக்கு ஈசியாக பதில் கிடைக்கும். எத்தனை பேர் சரியான பதிலை கமெண்ட் பண்றீங்க என பார்ப்போம்? நேற்றைய கேள்விக்கான பதில் 18. கேள்விக்கு இங்கே கிளிக் செய்யவும்.
ஜூலை 15-ம் தேதி முதல் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் மகளிர் உரிமைத் தொகை பெற 13 லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரிசீலனை முடிந்தபின் இம்மாத இறுதியில் விண்ணப்பித்தவர்களுக்கு விவரங்கள் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கோயிலின் போட்டோஸை பார்க்கும் போது, நிச்சயமாக உங்களுக்கு ‘Goosebumps’ வரும். இதுதான் உலகில் அதிக உயரத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயிலாகும். கடல் மட்டத்தில் இருந்து 12,778 அடி உயரத்தில், இமாச்சல பிரதேசத்தில் யூல்லா காண்டா என்ற இடத்தில் பனி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த கோயிலின் மெய்சிலிர்க்க வைக்கும் போட்டோக்களை தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா X-ல் பதிவிட்டுள்ளார். எப்படி இருக்கு..?
ப்ரோ கபடி லீக்கில் புனேரி பல்தான் அணியை சாம்பியன் ஆக்கிய கேப்டன் அஸ்லாம் இனாம்தார், தனது கடந்த காலத்தை பகிர்ந்துள்ளார். வீட்டில் யாரும் பசியுடன் தூங்கக்கூடாது என்பதால், டீக்கடையில் எச்சில் கிளாஸை கழுவுவதில் தொடங்கி அனைத்து பணிகளையும் செய்ததாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், காத்திருப்பு, சுய ஒழுக்கம், கடின உழைப்பு தான் ஒருவரை வெற்றிக்கு அழைத்து செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.