India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
<<15756270>>அரசு ஊழியர்கள்<<>> ஈட்டிய விடுப்பு (EL) சரண் செய்து பணமாக பெறும் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி காரணமாக, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறும் முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வரும் ஏப்.1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும், ஆண்டுக்கு 15 நாள்கள் வரை சரண் செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
SC & ST நலத்துறைக்கு ₹3,000 கோடியும், BC, MBC நலத்துறைக்கு ₹1,563 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மத்திய அரசு உரிய நிதி அளிக்காததால், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை மாநில அரசின் நிதியிலிருந்து வழங்கப்படும் எனக் கூறிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் 5வது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இருமொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், பள்ளிகளுக்கு தேவையான நிதியை தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். 2.38 மணி நேரம் வரை பட்ஜெட் உரை நீடித்தது. வேளாண் பட்ஜெட் நாளை ( மார்ச்.15) தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதம் வரும் 17 ஆம் தேதி தொடங்குகிறது.
டாஸ்மாக்கில் ₹1,000 கோடி ஊழல் தொடர்பாக மதுவிலக்கு அமைச்சரை பதவி நீக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுப்பது மட்டுமின்றி, அதிலும் ஆட்சியாளர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றனர். இதற்கு காரணமான செந்தில் பாலாஜி, முத்துசாமியை பதவி நீக்க வேண்டும். டாஸ்மாக் ஊழல்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஏப்.30 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சட்டப்பேரவையில் நாளை வேளாண் பட்ஜெட்டை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
73 வருடங்களில் தமிழகத்தின் கடன் ₹5.18 லட்சம் கோடி மட்டுமே. ஆனால், திமுக ஆட்சியில் 3 வருடங்களில் ₹3.54 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். கடன் வாங்கித்தான் அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு சம்பளம் கொடுப்பதாக சாடிய அவர், அதிமுக அரசின் திட்டங்களை புதிய திட்டங்கள் போல் பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர் என்றும் குறை கூறியுள்ளார்.
மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லாவுக்கு சென்னை ஐகோர்ட் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. 1997இல் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக ₹1.5 கோடி நிவாரண நிதி பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் வரும் 22 ஆம் தேதி நடக்கும் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் பங்கேற்க, கேரள CM பினராயி விஜயனுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. திருவனந்தபுரத்தில் அவரை நேரில் சந்தித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக MP தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு வலுவான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக பினராயி விஜயன் உறுதியளித்தார்.
TN பட்ஜெட்டை காலி பட்ஜெட் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் மட்டுமே செய்து, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத வெற்று அறிவிப்பு என்றும் சாடியுள்ளார். மேலும், பட்ஜெட்டை நேரலையில் காண அரசு ஏற்பாடு செய்திருந்த ஒரு இடத்தில் நாற்காலிகள் காலியாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், அரசின் பட்ஜெட்டும் இதுபோன்றே காலியாக இருப்பதில் வியப்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிமெண்ட் நிறுவனங்கள் வெட்டியெடுக்கும் சுண்ணாம்புக்கல் மீது 1 டன்னுக்கு ₹160 தமிழக அரசு கூடுதல் வரியாக விதித்துள்ளதால், சிமெண்ட் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூடுதல் வரி விதிப்பானது வரும் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. சுண்ணாம்புக்கல்லுக்கு ஏற்கெனவே ராயல்டி வசூலிப்பதுடன், கூடுதலாக வரியும் விதிப்பதால் தங்கள் செலவு அதிகரிக்கும் என சிமெண்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Sorry, no posts matched your criteria.