India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பத்மபூஷன் விருது வாங்கிய நடிகர் அஜித்குமாருக்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். X பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன் திரைத்துறை சாதனைகளுக்காக பத்ம பூஷன் விருது பெற்றுள்ள அன்பு சகோதரர் அஜித்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்தப் பதிவை அஜித் ரசிகர்களும், அதிமுக தொண்டர்களும் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 11-ம் தேதி உயிரிழந்த, பிரபல நடிகர் ஜீனி ஹேக்மேனின் உடற்கூராய்வு தகவல்கள் ஹாலிவுட்டை அதிரவைத்துள்ளது. இறப்பதற்கு முன் அவர், நீண்ட காலமாக சாப்பிடவில்லை எனவும் அவருக்கு அல்சைமர் நோய் இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அவரின் உடலில், நெயில் பாலிஷை அகற்ற பயன்படுத்தும் அசிட்டோன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜீனி ஹேக்மென் இரண்டு முறை ஆஸ்கர் வென்றுள்ளார்.
காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த சீமா ஹைதர் நாடு கடத்தப்படமாட்டார். அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றாலும், இந்தியரை திருமணம் செய்து கொண்டதால், அவர் இந்திய நாட்டின் பிரஜையாகி விட்டார். இதன் காரணமாக சீமா இந்தியாவிலேயே இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு பிரச்னையில் பாகிஸ்தானியர்களை வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
9 செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடுவது, வாழ்வில் செல்வத்தை பெருக்கி, செவ்வாய் தோஷம் பாதிப்புகளை குறைக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலையில் நீராடி, முருக பெருமானை வழிபடுங்கள். மாலை வரை பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதமிருந்து முருகனின் பெயரை உச்சரியுங்கள். மாலையில், பிரசாதம் செய்து, நெய்வேத்தியம் படைத்து முருகனை வழிபட்டு விரதத்தை முடியுங்கள்.
பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது X தளத்தில், தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் அஜித், பல்துறை நடிகர்களில் ஒருவராக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சினிமாவைத் தாண்டி பப்ளிசிட்டி இல்லாமல் பல தொண்டு செயல்களை அஜித் செய்து வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தரக்கூடாது என்ற உத்தரவை TN மின்சாரத் துறை திரும்பப் பெற்றுள்ளது. ஏப்.8-ல் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் இடையே எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து, அந்த சுற்றறிக்கையை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
ஜம்மு காஷ்மீரில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் 5-வது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாக்., இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே எல்லை கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவும் குப்வாரா மற்றும் பாரமுல்லா பகுதியில் பாக் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கனடா இன்னும் பாரம்பரியமான வாக்குச் சீட்டு முறையில்தான் தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் PM மார்க் கார்னியின் லிபரல் கட்சியே முன்னிலையில் உள்ளது. அக்டோபரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வேண்டிய நிலையில் PM நாடாளுமன்றத்தை கலைத்ததால் தேர்தல் முன்கூட்டியே நடந்துள்ளது.
ரன் மழை பொழியும் IPL தொடரில் அதிவேகத்தில் சதமடித்து பலர் சாதனை படைத்துள்ளனர். நேற்று ‘இளஞ்சிங்கம்’ வைபவ் சூர்யவன்ஷி அதிரடி காட்டியதால் அந்த பட்டியலை சற்று புரட்டிப் பார்க்கலாம். இதில், 30 பந்துகளில் சதமடித்து கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். வைபவ் சூர்யவன்ஷி(35), யூசுஃப் பதான்(37), டேவிட் மில்லர்(38), ஹெட்(39), பிரியன்ஷ் ஆர்யா(39), அபிஷேக் சர்மா(40) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி என்.கருண் (73) காலமானார். ஒளிப்பதிவாளராகவும் தனது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியுள்ள இவர் இயக்கிய ‘பிறவி’ படம் 70 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. வனஸ்பிரதம், குட்டி ஸ்ரங்க் உள்ளிட்ட 7 படங்களுக்கு தேசிய விருதுகளையும் வென்று அசத்தியவர். இவரது சேவையைப் பாராட்டும் விதமாக மத்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. #RIP
Sorry, no posts matched your criteria.