India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், IPLல்லின் முதல் சில மேட்ச்களில் பும்ரா விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. BCCI மெடிக்கல் டீம் கிளியரன்ஸ் கொடுத்தால் மட்டுமே அவர் வரும் ஏப்ரலில் MI அணிக்கு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. எத்தனை மேட்ச்களில் பும்ரா விளையாடமாட்டார் என்பதும் இன்னும் தெரியவரவில்லை. AUSக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை உற்சாகப்படுத்துபவர் ஆப்கான் கிரிக்கெட் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய். ஆனால், அவரது வீட்டில் நடந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹஸ்ரத்துல்லாவின் 2 வயது மகள் உயிரிழந்துள்ளதாக, சக வீரர் கரிம் ஜனத் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பிஞ்சுக் குழந்தையின் படத்தைப் பதிவிட்ட அவர், இத்தகைய கடினமான நேரத்தில் இதயம் சோகத்தில் மூழ்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி களமாடி வருகிறார் தவெக தலைவர் விஜய். கட்சியில் இதுவரை 114 மா.செ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், உட்கட்டமைப்பு நிர்வாகிகள் நியமனத்திற்கான ஒப்புதலை பெற்று தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்காக, மார்ச் 28-ல் தவெக பொதுக்குழு நடைபெறும் என அறிவித்த விஜய், நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், படத்தின் கதை என்னவென்று இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது, கொடூரமான டானாக இருந்த AK, வன்முறையை கைவிட்டு அமைதியான வாழ்க்கைக்கு திரும்புகிறாராம். ஆனால், கடந்த காலத்தில் செய்த செயல்கள் அவரை மீண்டும் துரத்துகிறதாம். அதனை ஏகே எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை என சொல்லப்படுகிறது. பாட்ஷா படம் மாதிரி இருக்குல்ல…
தற்போது வீடுகளில் இருப்பவை டிஜிட்டல் எல்க்ட்ரிசிட்டி மீட்டர் ஆகும். இதை மாற்றிவிட்டு, தமிழகம் முழுவதும் 3.05 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த தமிழக அரசு திட்டமிட்டு, டெண்டர் கோரியுள்ளது. மின்சார வாரியத்தில் நிலவும் ஆள் பற்றாக்குறையால், 2 மாதங்களுக்கு ஒருமுறை தற்போது மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால், தானாகவே மின் பயன்பாட்டை அந்த மீட்டர் கணக்கிடும்.
மாத கடைசியில் மின்பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர், அதை பில்லாக்கி, மின்சார வாரியத்தில் பயனாளர்கள் அளித்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கும். அதில் கட்ட வேண்டிய தொகையுடன், கட்டணத்தை செலுத்த வேண்டிய கடைசி தேதியும் இருக்கும். இதுபோல மாதா மாதம் ஸ்மார்ட் மீட்டர் பில்லை உருவாக்கி, எஸ்எம்எஸ்ஆக அனுப்பும். இதன்மூலம் மாதந்தோறும் கணக்கெடுப்பு முறை அமலாகும்.
மகளிர் ப்ரீமியர் லீக் ஃபைனலில் டெல்லியும், மும்பையும் நாளை மோத உள்ளன. இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகை நோரா பதேகி டான்ஸ் ஆட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பிறந்து, பாலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் நோரா, பாகுபலி படத்தில் மனோகரி பாடலிலும் நடனமாடியுள்ளார். கிளாமரில் தாராளம் காட்டும் அவரது பெர்ஃபாமன்ஸை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) முன்னாள் இயக்குநர் ஆர்.சி.சர்மா காலமானார். ஹரியானாவின் 1963 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், பின்னர் மத்திய உள்துறைக்கு மாற்றப்பட்டார். 1997-98 காலகட்டத்தில் சிபிஐயின் இயக்குநராக இருந்தார். இந்திய அரசியலில் புயலைக் கிளப்பிய போபர்ஸ் ஊழல், பங்குச்சந்தை ஊழல், சாமியார் சந்திராசாமி தொடர்புடைய வழக்கு உள்ளிட்டவற்றை விசாரித்ததில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
TNன் கடன் சுமையை 10 லட்சம் கோடி ரூபாயை நோக்கி உயர்த்தியது தான் திமுக அரசின் சாதனை என பாஜக விமர்சித்துள்ளது. பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன், 2026, மார்ச் இறுதியில் TNன் கடன் 9 லட்சம் கோடியை கடந்திருக்கும். இந்தச் சூழலில் நடப்பு நிதியாண்டில் மேலும் ஒரு லட்சம் கோடி அளவுக்கு கடன் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், கடன்சுமை 10 லட்சம் கோடியாகும் என சாடியுள்ளார்.
ஒவ்வொரு துறையிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. நாம் கற்பனை செய்து பார்ப்பதை கண்முன் கொண்டுவருவது மட்டுமின்றி, கற்பனை கூட செய்ய முடியாத விஷயங்களையும் ஏஐ சாத்தியப்படுத்துகிறது. அந்த வகையில், இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டுவரும் நிலையில், உலகத் தலைவர்கள் ஹோலி கொண்டாடி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கும் உயிர் கொடுத்திருக்கிறது ஏஐ.
Sorry, no posts matched your criteria.