news

News April 30, 2025

34 வருடத்தில் 57 முறை டிரான்ஸ்ஃபர்.. இன்றுடன் ஓய்வு!

image

34 ஆண்டுகால சர்வீஸில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி அஷோக் கேம்கா இன்று ஓய்வு பெறுகிறார். நேர்மைக்கு பெயர் போன இவர், இதுவரை 57 முறை பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் மருமகன் ராபர் வதேரா தொடர்புடைய நில ஒப்பந்தத்தை ரத்து செய்து, தேசிய அளவில் பிரபலமானார். ஊழலை வேரோடு ஒழிப்பதே தனது லட்சியம் என கூறி வந்தவர், ஹரியானா போக்குவரத்து துறை கூடுதல் செயலாளராக இன்று ஓய்வு பெறுகிறார்.

News April 30, 2025

இன்று CSK vs PBKS.. விசில் பறக்குமா?

image

ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை, மீதமிருக்கும் 5 போட்டிகளில் வென்று கவுரமாக சீசனை விட்டு வெளியேற முயற்சிக்கும். அதேபோல், 5-வது இடத்தில் உள்ள பஞ்சாப், பிளேஆஃப் செல்ல முயற்சிக்கும். எனவே இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

News April 30, 2025

தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்

image

அட்சய திருதியை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம் தான். ஏனெனில் அந்த சுப தினத்தில் தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அந்தவகையில், இன்று அதிகாலை 5.41 மணி முதல் மதியம் 12.18 மணி வரை சுப முகூர்த்தமாகும். இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் கொழிக்கும். தங்கம் வாங்க இயலாதவர்கள் வெள்ளி, பித்தளை உள்ளிட்ட மற்ற உலோகங்களை வாங்கலாம்.

News April 30, 2025

அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி.. திமுக தலைமை அதிர்ச்சி!

image

NLC தொழிற்சங்க தேர்தல் முடிவு அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது. மொத்தமுள்ள 6,800 வாக்குகளில் DMKவின் தொமுச 2,507, ADMKவின் அதொமுச 1,389 வாக்குகள் பெற்றன. சிங்கிள் மெஜாரிட்டிக்கான 50% வாக்குகளை (3,183) DMK பெறாததால் பேச்சுவார்த்தைக்கு தகுதியான அங்கீகரிக்கப்பட்ட குழுவுக்கு அதிமுகவும் தேர்வாகியுள்ளது. சாதாரண தொழிற்சங்க தேர்தல் என்றாலும், ADMKவின் வெற்றியால் DMK தலைமை கடும் அதிர்ச்சியில் உள்ளதாம்.

News April 30, 2025

கனடா தேர்தலில் 3 தமிழர்கள் வெற்றி

image

கனடா நாடாளுமன்ற தேர்தலில் 3 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒக்வில்லே கிழக்கு தொகுதியில், ஆளும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட சென்னையைச் சேர்ந்த அனிதா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ஹரி ஆனந்தசங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய ஈழத்தமிழர்களும் வெற்றி பெற்றுள்ளனர். லிபரல் கட்சியின் மார்க் கார்னி மீண்டும் பிரதமரானார்.

News April 30, 2025

ALERT: தினமும் இதை சாப்பிடுகிறீர்களா?

image

கீழ்காணும் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகம் காலியாகிவிடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான உப்பு (பரிந்துரைக்கப்பட்ட அளவு 5 கி) சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள கொழுப்பு, பதப்படுத்திகள் மிகவும் கேடுவிளைவிக்கும். குளிர்பானங்கள் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்துகின்றன. அதீத சிவப்பு இறைச்சி மற்றும் சர்க்கரை சிறுநீரகத்திற்கு எமனாக அமையும்.

News April 30, 2025

2 அறை கொடுப்பேன்: VJD காட்டம்

image

டைம் மிஷின் கிடைத்தால் வரலாற்றில் யாரை சந்திப்பீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களுக்கு 2 அறை கொடுப்பேன் எனவும், ‘சவா’ படம் பார்த்த பிறகு அவுரங்கசீப்பிற்கு 2 அறை கொடுக்க வேண்டும் என தோன்றுவதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னிடம் இதுபோன்று அறை வாங்குவதற்கான ஆட்களின் பட்டியல் நிறைய இருப்பதாகவும் கூறினார்.

News April 30, 2025

ஏப்ரல் 30: வரலாற்றில் இன்று

image

*1945 – இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர், தனது மனைவி இவாவுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் செங்கொடியை ஏற்றினர். *1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது. *1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *2012 – இந்தியாவில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.

News April 30, 2025

இவரால கூட இலவச கல்வி கொடுக்க முடியல!

image

மெட்டா CEO மார்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா ஆகியோரின் தொடக்கப்பள்ளி அடுத்த ஆண்டு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க, கலிஃபோர்னியாவில் கடந்த 2016-ல் இப்பள்ளி தொடங்கப்பட்டது. இது மிகவும் கடினமான முடிவு எனவும், குழந்தைகளை மற்ற பள்ளிக்கு மாற்ற உதவி செய்வோம் எனவும் தம்பதி தெரிவித்துள்ளனர். இருப்பினும் மூடப்படுவதற்கான காரணத்தை அவர்கள் அறிவிக்கவில்லை.

News April 30, 2025

மே 29-ல் வரலாறு படைக்கும் இந்தியர்!

image

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா வரும் மே 29-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் SpaceX Felcon ராக்கெட் மூலம் அவர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளார். Axiom 4 என்ற தனியார் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் இப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி மையம் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார்.

error: Content is protected !!