India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இருமொழிக் கொள்கை, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் பொருத்தமானதாக இருக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஹிந்தி படித்தால் வேலைவாய்ப்பு உறுதிப்படும் என்றால், அதனை படிப்பதை யாராலும் தடுக்க முடியாது. TNல் உள்ளவர்கள் கூட ஹிந்தி படிப்பர். ம.பி, உ.பி, ராஜஸ்தான் மாநிலங்களின் தாய்மொழியை கடுமையாக சிதைத்துவிட்டதாகவும், ஹிந்தி பேசும் மாநிலங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் சாடினார்.
TN அரசின் 2025-26 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். இதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய பட்ஜெட்டில் வேளாண் துணைக்கு ₹42,281 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம். தொடர்ந்து, மார்ச் 17 முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
TN அரசின் கடன் வரும் நிதியாண்டில் ₹9.30 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இக்கடனை ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டால், தலா ஒரு குடும்பத்துக்கு ₹4.13 லட்சம் கடன் இருக்கும். TNல் தற்போது, 2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 7.03 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அதன் அடிப்படையில், தனி நபருக்கு கணக்கிட்டால் ஒவ்வொரு நபருக்கும் தலா ₹1.32 லட்சம் கடன் உள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட 3°C அதிகமாக இருக்கக்கூடும் என IMD கணித்துள்ளது. வட மாவட்டங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் நேற்று 38°C மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பால், வெளியில் செல்லும் பொதுமக்களுக்கு அசெளகரியம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
இன்று நடைபெறும் WPL இறுதிப் போட்டியில் DC vs MI அணிகள் மோதுகின்றன. இம்முறை கோப்பை வெல்லும் முனைப்பில் டெல்லியும், இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் மும்பையும் உள்ளது. ஆல்ரவுண்டர்களான நாட் சீவர், ஹெய்லி மேத்யூஸ் ஆகியோருடன் MI அணி வலுவாக உள்ளது. இந்த சீசனில் மும்பையை டெல்லி ஆதிக்கம் செலுத்தியது. போட்டி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. JioHotstar, ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரலையில் காணலாம்.
▶ கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது. ▶எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீ தாங்கித் தாங்கி வலுவைப் பெறு. ▶போட்டியும், பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே. ▶விதியை நம்பி, மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது கேடு – பேரறிஞர் அண்ணா.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே ஜாக்டோ ஜியோ அமைப்பின் நீண்ட கால கோரிக்கை. பட்ஜெட்டில் அதுதொடர்பாக அறிவிப்பு எதுவும் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்த அவர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 23-ல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், மார்ச் 30-ல் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் புதிய பிரதமரான மார்க் கார்னி, பதவியேற்ற முதல் நாளிலேயே தனது முத்திரையை பதித்துள்ளார். கனடா ஒருபோதும் அமெரிக்காவின் அங்கமாக இருக்காது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எனினும், நாட்டின் நலன்களுக்காக டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், கனடாவை அமெரிக்காவின் ஒரு அங்கமாக மாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
தனியார் நிறுவனமான அர்பன் கம்பெனி வீட்டு வேலை, சமையல் வேலை வாடகைப் பணியாளர் சேவைகளை மும்பையில் சோதனை முயற்சியில் அறிமுகம் செய்துள்ளது. இதில் விண்ணப்பித்தால், 15 நிமிடங்களில் வேலைக்கு ஆட்கள் வருவர். அவர்களுக்கு 1 மணி நேரத்திற்கு ரூ.49 அளிக்க வேண்டும். இது அறிமுக சலுகையே. பிறகு ரூ.245 ஆகும். மும்பையைத் தொடர்ந்து பிற நகரங்களுக்கும் சேவை விரிவுபடுத்தப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.
மும்மொழிக் கொள்கை குறித்த ஆந்திர துணை முதல்வர் <<15763979>>பவன் கல்யாணின்<<>> கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள்” என்று கூறுவது மற்றொரு மொழியை வெறுப்பதாகாது என்று பதிலடி கொடுத்துள்ளார். இது நமது தாய்மொழியையும், தாயையும் சுயமரியாதையுடன் பாதுகாக்கும் முயற்சி என்பதை யாராவது பவன் கல்யாணிடம், எடுத்துச் சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.