India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதை போல், பாஜகவும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர விரும்புவதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். ஆசைப்படுவதில் தவறில்லை, ஆனால் பாஜகவின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது என்றும் தெரிவித்துள்ளார். பாஜகவின் வாக்கு வங்கி எத்தனை சதவீதம் உயர்கிறது என்பதை விட, எத்தனை இடங்களில் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு திரைப்பிரபலங்கள் ஹோலி பண்டிகையை தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். நடிகைகள் ராசி கண்ணா, ஸ்ரீலீலா, பிரியங்கா சோப்ரா, தமன்னா, அதிதி மிஸ்திரி உள்ளிட்ட பலர் ஹோலி கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த புகைப்படங்களை மேலே காணலாம். நீங்க ஹோலியை கொண்டாடுனீங்களா?
வாட்ஸ்அப்பில் CREATE EVENT என்ற வசதியை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. வழக்கமாக குரூப் சாட்களில் மட்டுமே இருந்த இந்த வசதி, தற்போது பிரைவேட் சாட்களுக்கும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனுடன் POLL DOCUMENT போன்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. ஆன்ட்ராய்டு, ஐபோன்களிலும் வந்துவிட்டது. உடனே உங்க ஃபோன எடுத்து வாட்ஸ் அப்ப செக் பண்ணிப் பாருங்க!
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு கசியவிட்டதாக ஆயுத தொழிற்சாலையில் பணியாற்றும் ரவீந்திரநாத் என்பவரை உ.பி போலீசார் கைது செய்தனர். பெண்களை வைத்து மயக்கும் ‘ஹனி டிராப்’ முறையில், இந்த ஊழியரிடமிருந்து ரகசியங்களை ஐ.எஸ்.ஐ., அமைப்பு பெற்றது அம்பலமாகி உள்ளது. ‘பேஸ்புக்’ வாயிலாக ரவீந்திரநாத்தை தொடர்பு கொண்ட நேஹா சர்மா என்ற பெண், இந்திய ராணுவ ரகசியங்களை பெற்றுள்ளார்.
அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த மார்ச் 30ஆம் தேதி வரை ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு கெடு விதித்துள்ளது. நேற்று பட்ஜெட்டில் அறிவிப்பை எதிர்பார்த்த தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக JACTO-GEOவின் மூத்த தலைவர் மாயவன் கூறியுள்ளார். வரும் 23ஆம் தேதி மாநிலம் முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்களை ஒன்று திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஹோலி கொண்டாட்டம் முடிந்து, ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். பத்தாம் வகுப்பு மாணவர்களான அவர்கள் ஆற்றில் குளித்தபோது, திடீரென நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்பட்டதால் இந்த துயர சம்பவம் நேரிட்டது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு 4 சிறுவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டன.
திபெத்தில் கடந்த 2 நாட்களில் 4 முறை நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. கடந்த 13 ஆம் தேதி அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் நேரிட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். ரிக்டர் அளவில் 3.5 முதல் 4.3 வரை பதிவாகியிருந்தது. இந்நிலையில், நேற்றிரவு 12.49 மணியளவில் 3.5 ரிக்டர் அளவில் 4 ஆவது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டது. யுரேசியன் தட்டுப்பகுதியில் திபெத் அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஆண் நண்பருடன் மனைவி ஆபாச Chat செய்வதை ஒரு கணவனால் எப்படி சகித்துக் கொள்ள முடியும் என ம.பி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கணவருடனான செக்ஸ் வாழ்க்கை குறித்து ஆண் நண்பரிடம் பகிர்வது, மனைவி மன ரீதியாக கொடுக்கும் கொடுமை என்றே கருத முடியும் எனவும் தெரிவித்துள்ளது. கணவர்தான் தனது மொபைலை ஹேக் செய்தது, ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாக மனைவியின் குற்றச்சாட்டையும் நிராகரித்து டைவர்ஸ் வழங்கியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணம் 3 ஆல் ரவுண்டர்கள்தான் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஹர்திக், அக்ஷர், ஜடேஜா போன்ற திறன்மிக்க மூவர் அணியில் இருந்ததால்தான் இந்தியாவுக்கு இந்த வெற்றி சாத்தியமானது என்றும் அவர் கூறியுள்ளார். போதுமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்ற குறை, வெளியில் தெரியவே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின், இந்த உன்னத பணிக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். உக்ரைனுடனான மோதலை நிறுத்த தீவிர கவனம் செலுத்தியதற்காக டிரம்பிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வர, புதினிடம் பிரதமர் மோடி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.