news

News May 7, 2025

அட்சய திருதியைக்கு தங்கம் விலை உயருமா?

image

அட்சய திருதியை என்பது இந்தியாவில் கடைபிடிக்கப்படும் ஒரு சடங்கு ஆகும். இந்த நாளில் சொத்து வாங்கினால் செல்வம் பெருகும் என்று நம்பிக்கை உண்டு. ஆனால், தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிலும், 10% தங்கம் மட்டுமே physical முறையில் வர்த்தகம் ஆகிறது. மீதம் அனைத்தும் பேப்பர் முறையில்தான். ஆகையால், அட்சய திருதியை தங்க விலையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

News May 7, 2025

EAM ஜெய்சங்கரின் ஆக்‌ஷன்: தயாராகிறதா இந்தியா?

image

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 7 உறுப்பு நாடுகளின் (நிரந்தரமல்லாத உறுப்பினர்கள்) பிரதிநிதிகளை தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. பஹல்காம் தாக்குதல் பின்னணியில் பயங்கரவாத சதி இருந்ததை அவர்களுக்கு, அவர் விளக்கியதாக கூறப்படுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால், பாகிஸ்தான் மீது இந்தியா தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News May 7, 2025

PM மோடியின் வெளிநாட்டு பயணம் ரத்து

image

ரஷ்யாவில் மே 9-ம் தேதி நடைபெறும் 2-ம் உலகப்போர் வெற்றி தின அணிவகுப்பில் PM மோடி கலந்துகொள்ள இருந்தார். ஆனால் தற்போது அந்நிகழ்ச்சியில் மோடி பங்கேற்க போவதில்லை என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் இந்தியா சார்பில் யார் பங்கேற்க போவது என்ற தகவல் இதுவரை பகிரப்படவில்லை. இந்தியா – பாக் இடையே பதற்றம் நீடித்து வருவதால் பயணம் ரத்து செய்யப்படிருக்கலாம் என கூறப்படுகிறது.

News May 7, 2025

மகளிர் உரிமைத் தொகை.. அமைச்சர் முக்கிய அப்டேட்

image

மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள், ஜூன் 4-ல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜூன் 4-ல் மாநிலம் முழுவதும் சுமார் 9000 இடங்களில் ’மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் ஆதார், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

News May 7, 2025

பாக்., ட்ரோனை சுட்டு வீழ்த்த இந்தியா புது ஐடியா!

image

போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், பஞ்சாப் மாநிலத்தை ஒட்டியுள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை நிறுவி பாகிஸ்தானில் இருந்து இந்திய வான்பரப்பிற்குள் வரும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. இதனால், ட்ரோன் மூலம் ஆயுதங்களை கொண்டு வரும் சதி முறியடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2025

பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்காதீங்க: இந்தியா

image

பாகிஸ்தானுக்கு பல்வேறு நெருக்கடிகளை இந்தியா கொடுத்துவருகிறது. சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா, தற்போது பாக்.,க்கு கடன் வழங்க கூடாது என சர்வதேச நிதியத்திடம்(IMF) கோரிக்கை விடுத்துள்ளது. கடனாக பெறும் நிதியை பயங்கரவாதத்துக்கு திருப்பிவிடுகிறது என்பது குற்றச்சாட்டு. ஏற்கனெவே பாக்.,கிற்கு IMF ₹ 5 ஆயிரம் கோடி கடனாக ஒதுக்கியுள்ள நிலையில், இந்தியாவின் கோரிக்கை குறித்து மே 9-ல் IMF விவாதிக்கிறது.

News May 7, 2025

அஜித் ஹாஸ்பிடலில் அனுமதி.. காரணம் வெளியானது

image

அப்போலோ <<16264930>>ஹாஸ்பிடலில் <<>>அஜித் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் வெளியாகியுள்ளது. பத்மபூஷன் விருது வாங்கியபின், நேற்று சென்னை திரும்பிய அவரை பார்க்க விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இதில், அவரின் காலில் சிறிய அளவில் அடிபட்டதால், அதற்கான பிசியோ சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News May 7, 2025

அணுகுண்டு.. இந்தியாவை எச்சரித்த இம்ரான் கான்!

image

இந்தியா ராணுவத் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கும் அனைத்து திறன்களும் தங்களிடம் இருப்பதாக சிறையில் உள்ள பாக்., Ex PM இம்ரான் கான் எச்சரித்துள்ளார். அணுகுண்டு வைத்துள்ள தங்கள் நாட்டிடம் மோதலில் ஈடுபடுவதை தவிர்த்து இந்தியா பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், அமைதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தங்களை கோழைகள் என தவறாக எண்ண வேண்டாமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

News May 7, 2025

போர் வருமா?.. ட்ரெண்டிங்கில் #IndiaPakistanWar

image

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிப்பதாக தெரிவித்துள்ள PM மோடி, உயர்மட்ட அளவில் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போரை தொடங்கும் என சோஷியல் மீடியாவில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து, X தளத்தில் #IndiaPakistanWar ட்ரெண்டாகி வருகிறது.

News May 7, 2025

BREAKING: நடிகர் அஜித் ஹாஸ்பிடலில் அனுமதி!

image

நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் ‘பத்ம பூஷன்’ விருது வாங்கிய பிறகு நேற்று மாலையில் சென்னை திரும்பினார். இந்நிலையில், வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் ரேஸின் போது அவர் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!