India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த செங்கோட்டையன், இபிஎஸ்ஸை சந்திக்காமல் புறக்கணித்திருக்கிறார். இதற்கு என்ன காரணம் என கேட்டபோது, அவரிடமே கேளுங்கள் என இபிஎஸ் சொல்ல, அதற்கு பதில் அளிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார் செங்கோட்டையன். உண்மையில் இருவருக்கும் இடையே என்ன பிரச்னை?
கோவை அன்னூரில் இபிஎஸ்ஸூக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் விரிசல் வெளியே தெரிய ஆரம்பித்தது. விழா அழைப்பிதழில் எஸ்.பி.வேலுமணிக்கு கீழ் அவரது பெயர் இடம்பெற்றது தான் செங்கோட்டையன் நிகழ்ச்சியை புறக்கணிக்க, காரணம் என கூறப்பட்டது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை இணைத்து தேர்தலை சந்திக்கலாம் என்ற ஐடியாவை இபிஎஸ் பரிசீலிக்காததும் செங்கோட்டையன் போர்க்கொடி உயர்த்த காரணம் என்கிறது அதிமுக வட்டாரம்.
ஹரியானாவின் சோனிபட் நகரில் முன்ட்லானா மண்டல பாஜக தலைவர் சுரேந்திர ஜவஹர் சுட்டுக்கொல்லப்பட்டார். நிலத் தகராறு காரணமாக, அவரின் வீட்டின் அருகே இருக்கும் நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். தனது நிலத்தில் கால் வைக்கக்கூடாது என கொடுத்த எச்சரிக்கையை மீறி ஜவஹர் அங்கு சென்றதால், இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. கொலை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்திய அணி நியாயமற்ற முறையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றதாக, தான் நினைக்கவில்லை என ஆஸி. முன்னாள் வீரர் மெக்ராத் கூறியுள்ளார். இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல முடியாத காரணத்தால் துபாயில் விளையாடியதாகவும், ஆனால், இந்தியா உள்நாட்டில் விளையாடியதை போல் சிலர் கூறுவதை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் அனுபவத்தால் இந்திய அணி மிகச் சிறப்பாக ODI-யில் விளையாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
12 மணிநேரத்தில் 1,057 ஆண்களுடன் உறவு மேற்கொண்டு சாதனை படைத்ததாக கூறும் போனி ப்ளூவின் புதிய அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் கான்கன் (Cancun) நகரில் பதின்ம வயதினருடன் உறவு மேற்கொள்ள கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இது சோஷியல் மீடியாவில் கடும் விமர்சனத்தை சம்பாதித்துள்ளது. 25 வயது ஆபாச பட நடிகையான இவரது போக்குக்கு ஒரு முடிவே இல்லையா? என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.
திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களுக்கும், ஏற்கெனவே முதல்வர் கூறியதற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
5.5 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதில் 10% பேருக்கு கூட வேலை வழங்கவில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.
வேளாண் பட்ஜெட்டை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என பட்ஜெட்டில் கூறப்பட்டதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, முன்னதாக இதை நாங்கள் கூறிய போது அமைச்சர் பெரியகருப்பன் ஏற்க மறுத்ததாக விமர்சித்தார். மேலும், நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற வாக்குறுதிகள் கூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு நேரடியாக டெலிவரி செய்யும் வகையில், உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைந்து இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இன்றி மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும். மேலும், இது நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள், சிறு,குறு வணிகர்களும் நேரடியாகப் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
கலியுகத்தில் யாரை நம்பியும் வெளியில் செல்ல முடியவில்லை என சொல்லுவார்களே அதனை உறுதி செய்யும் வகையில் உள்ளது இச்சம்பவம். பாலக்காட்டில் தோஷத்தை கழிக்க பூஜை என ஜோதிடரை வரவழைத்து, அவரை மிரட்டி பெண்ணின் அருகில் நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்துள்ளது ஒரு கும்பல். 4.5 பவுன் நகை, ₹5,000ஐ அபேஸ் செய்த கும்பலை சேர்ந்த 44 வயது பெண் கைமூனா சிக்கியுள்ளார். 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தும், விவசாயிகளுக்கு என்ன பலன் கிடைத்தது? என கேள்வி எழுப்பிய அவர், விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள் என்றும் சாடியுள்ளார். பல்வேறுத் துறைகளை ஒன்றிணைத்து அவியல், கூட்டு போன்று இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.