India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் சினிமாக்களை மட்டும் இந்தியில் டப் செய்யலாமா? என பவன் கல்யாண் கேட்ட கேள்விக்கு, கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். மொழித் தடைகளை கடந்து திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் தங்களுக்கு உதவுவதாக கனிமொழி தெரிவித்தார். மேலும், பாஜக கூட்டணியில் இணைவதற்கு முன் ‘GO BACK HINDI’ என பவன் கல்யாண் போட்ட பதிவையும், தனது பதிலடிக்கு கீழே கனிமொழி பகிர்ந்துள்ளார்.
பயணிகளுடன் ரயிலை பலுசிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய சம்பவத்திற்கு இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான IS, பலுசிஸ்தான் மாகாண அரசு ஆகியவை ரயில் கடத்தல் மற்றும் பிற தீவிரவாத சம்பவங்களுக்கு இந்திய உளவு அமைப்பு ‘ரா’ நிதி உதவி செய்து, திட்டம்தீட்டி கொடுத்ததாக சாடியுள்ளன. ஏற்கெனவே இதே குற்றச்சாட்டை பாகிஸ்தான் முன்வைத்தபோது, இந்தியா மறுத்திருந்தது.
பணம் கொழிக்கும் விளையாட்டுத் தொடராக ஐபிஎல் பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த மொத்த ஐபிஎல் தொடர்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டியது ரோகித் சர்மா தான். அவர் மொத்தமாக ரூ.178.6 கோடியை ஐபிஎல் மூலம் சம்பாதித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில்தான் தோனி இருக்கிறார். ரூ.176.8 கோடி வருவாய் அவருக்கு கிடைத்துள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி, ரூ.173.2 கோடி சம்பாதித்துள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டை முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, 1000 உழவர் நல சேவை மையங்கள், மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் என பல முத்தான திட்டங்களுடன் ரூ.45,661 கோடி மதிப்பில் வேளாண் பட்ஜெட்டை வடிவமைத்த அமைச்சர், அதிகாரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாலிடெக்னிக் படிப்பில் இறுதியாண்டு முடித்தும் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள <
தெற்கு ரயில்வே பணிக்கான தேர்வில் தமிழக தேர்வர்கள் 90% பேருக்கு தெலங்கானாவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 493 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத் தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வு மையங்கள் 1000 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அஜித் நடித்த வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடலைக் கேட்டு Vibe செய்யாதவர்களே இருக்க முடியாது. இந்த பாடலை ரோகேஷ் எழுத அனிருத் பாடி இருந்தார். அதேபோல், குட் பேக் அக்லி பட OG SAMBAVAM பாடலையும் ரோகேஷ் எழுதி அனிருத் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 18-ல் வெளியாகும் OG SAMBAVAM பாடலை கொண்டாட அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் 4 ஆண்டுகளில் 10,187 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2025–26ல் மேலும் 2,338 ஊராட்சிகளில் விரிவுபடுத்தப்படும் என்றும், இதன் மூலம் 9.36 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரிலாக்ஸ் செய்ய குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். குடும்பத்துடன் கடலின் அழகை ரசித்த அவர், அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் தொடருக்காக மற்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், ரோகித் சர்மா அடுத்த வாரம் பயிற்சியை தொடங்குவார் என கூறப்படுகிறது.
பிரபல பாலிவுட் மூத்த நடிகரும், தயாரிப்பாளருமான தேவ் முகர்ஜி (83), உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் திரண்டு வந்து நேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தியபின், அவரது இறுதிச்சடங்கு நடந்தது. அப்போது நடிகர் ரன்பீர் கபூர் அவரது உடலை சுமந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முகர்ஜியின் மகனும் இயக்குநருமான அயன், ரன்பீரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.