news

News April 28, 2025

வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

image

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

News April 28, 2025

அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு HAPPY NEWS!

image

அங்கன்வாடிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்க தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையில், ஆசிரியர்களுக்கு காலதாமதம் இல்லாமல் ஊதியம் வழங்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் மாதம் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Share it.

News April 28, 2025

அமைச்சர்களின் ராஜினாமா ஏற்பு

image

செந்தில் பாலாஜி, பொன்முடியின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் SC காட்டிய கெடுபிடியால் செந்தில் பாலாஜியும், சைவம், வைணவம் குறித்த பேச்சு சர்ச்சையானதால் பொன்முடியும் அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. இருவரின் ராஜினாமா கடிதங்களையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதேநேரத்தில், மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் இன்று பதவி பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்.

News April 28, 2025

GT vs RR: யாருக்கு கிடைக்கும் ஹாட்ரிக்?

image

ஹாட்ரிக் வெற்றியை பெற GT அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க RR அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும். 6 போட்டிகளில் வென்றுள்ள GT, இன்றிரவு வாகை சூடினால் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் செல்ல வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள RR-க்கு பிளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய பறிபோய்விட்டது. ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள இன்றைய ஆட்டத்தில் வெல்லப் போவது யார்?

News April 28, 2025

இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் பலி 52,000ஆக அதிகரிப்பு

image

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காசாவில் பலியானோரின் எண்ணிக்கை 52,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவுக்குள் புகுந்து அந்நாட்டு ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 52,243 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

News April 28, 2025

தயாளு அம்மாளுக்கு தீவிர சிகிச்சை

image

முதல்வர் ஸ்டாலினின் தாயார் அம்மாளுக்கு சென்னை தனியார் ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் நேற்று சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை சீராக இருப்பதாக ஹாஸ்பிடல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News April 28, 2025

விஜய பிரபாகரனுக்கு தேமுதிகவில் முக்கிய பொறுப்பு?

image

தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்.30-ல் தருமபுரியில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் எக்ஸ் கணக்கில், ‘பத்தோடு பதினொன்று நீ இல்லையே, பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி..!’ என பதிவிடப்பட்டுள்ளது.

News April 28, 2025

பிரபல நடிகை பியான்கா காஸ்ட்ரோ காலமானார்

image

‘RuPaul’s Drag Race’ நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற பிரபல நடிகை பியான்கா காஸ்ட்ரோ(44) காலமானார். பிலிப்பைன்ஸில் பிறந்த பியான்கா, தனது 10 வயதில் தாய், சகோதரருடன் அமெரிக்காவின் குயின்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். பின்னர் பெரும் சிரமத்திற்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்ற அவர் அண்மையில் ஏற்பட்ட தொற்று காரணமாக காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், திடீரென உயிரிழந்தார். #RIP

News April 28, 2025

இன்று இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

கோடை வெயில் வாட்டும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என IMD கூறியுள்ளது. நாளை முதல் மே 3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கீழே கமெண்ட் பண்ணுங்க.

News April 28, 2025

IPL-ல் புது வரலாற்றை எழுதிய கோலி!

image

IPL-ன் 11 சீசன்களில் 400-க்கும் அதிகமான ரன்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை கிங் கோலி படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை நடந்த 10 போட்டிகளில், 6 அரை சதங்கள் உள்பட 63.29 ஆவரேஜுடன் அவர் 443 ரன்களை எடுத்துள்ளார். சூர்யகுமார் யாதவிடம் இருந்து ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றியுள்ளார். அதேபோல், ஒரு சீசனில் அதிக ரன்கள் (973) எடுத்த வீரராகவும் அவர் உள்ளார்.

error: Content is protected !!