India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வலுவான தாக்குதலை நடத்துமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடல் கொள்ளை, வன்முறை, தீவிரவாதம் என தீராத பிரச்னையாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருப்பதாக அவர் சாடியுள்ளார். இனிமேலும், அவர்களுக்கு ஈரான் பக்கபலமாக இருந்தால் விளைவுகள் மிகுந்த மோசமாக இருக்கும் எனவும் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
பங்குனி மாதத்தின் மங்களகரமான தினமான மார்ச் 17ம் தேதி அதிகளவில் பத்திர பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நாளை ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் அலுவலகங்களுக்கு 150 சாதாரண டோக்கன்களும் வழங்கப்படுகிறது.
மோகன்லால் – பிருத்விராஜ் கூட்டணியில் வெளிவந்த ‘லூசிபர்’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக படத்தின் 2ஆம் பாகமான ‘எல் 2 எம்புரான்’ படம் தொடங்கப்பட்டது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் பான் இந்திய அளவில் வருகிற மார்ச் 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 16) முதல் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கூறியுள்ளது. இதேபோல், வரும் 18, 19ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடனும், 20, 21ஆம் தேதிகளில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளது.
இந்திய கால்பந்து அணிக்காக மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்கியுள்ள சுனில் சேத்ரி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மாலத்தீவு மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டிகளில் அவர் விளையாடவுள்ளார். அதிக கோல்கள் அடித்த வீரர்களில் 4 வது இடத்தில் உள்ள சுனில் சேத்ரி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. நட்சத்திர வீரர் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.
சீமான் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகுவதாக நாதக நாமக்கல் மாவட்டச் செயலாளர் பாஸ்கர் அறிவித்துள்ளார். தமிழனின் முதன்மைப் பகையான வலது சாரிகளிடம் நேரடி கூட்டணி வைக்காத குறை ஒன்றே என்ற அளவிற்கு சீமான் உறவு கொண்டு வருவதாகவும், தனது சுயலநலனுக்காக தமிழ் தேசியத்தை அடமானம் வைத்துள்ளதாகவும் சாடியுள்ளார். மேலும், இனி அவருடன் பயணிப்பது தமிழின துரோகம் என்றும் விமர்சித்துள்ளார்.
கேரளாவில் 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீஸ் கைது செய்தது. சிறுமியின் செயலில் வித்தியாசம் இருப்பதை பள்ளியில் ஆசிரியைகள் கவனித்துள்ளனர். பின்னர் விசாரித்தபோது, 23 வயது ஸ்நேகா மெர்லின், மிட்டாய் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 14 வயது சிறுவனுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது புகார் உள்ளது.
கூகுள் chrome browserன் பழைய பதிப்பை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. chrome browserன் தற்போதைய பதிப்புக்கு முந்தைய பதிப்புகளில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை பயன்படுத்தி ஹேக்கர்கள் கணினியில் உள்ள தகவல்களை திருட முடியும். இதை தடுக்க, லேட்டஸ்ட் வெர்சனை இன்ஸ்டால் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அரசாணையை TN அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 3,592 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அங்கன்வாடி பணியாளர் பணிக்கு +2, உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 25-35க்குள் இருக்க வேண்டும்.
▶கையாலாகாதவனுக்கு கடவுள் துணை; அறிவு இல்லாதவனுக்கு ஆண்டவன் செயல்; தவறை உணரமுடியாத உனக்கு தலைவிதி. ▶பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும். ▶முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது; அறிவு தீப்பிடிக்க சற்று தாமதமாகும். ▶விதி என்பது ஒடுக்கப்பட்டவர்கள் கொதித்து எழாதிருக்க செய்யப்பட்ட சதியாகும் – தந்தை பெரியார்.
Sorry, no posts matched your criteria.