news

News March 17, 2025

ராசி பலன்கள் (17.03.2025)

image

➤மேஷம் – விருத்தி ➤ரிஷபம் – நலம் ➤மிதுனம் – ஓய்வு ➤கடகம் – சிரமம் ➤ சிம்மம் – லாபம் ➤கன்னி – நட்பு ➤துலாம் – பக்தி ➤விருச்சிகம் – நன்மை ➤தனுசு – வெற்றி ➤மகரம் – களிப்பு ➤கும்பம் – சோர்வு ➤மீனம் – போட்டி.

News March 16, 2025

மம்முட்டிக்கு கேன்சரா?

image

பிரபல மலையாள நடிகரான மம்முட்டிக்கு கேன்சர் இருப்பதாகவும், இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் செய்தி பரவி வருகிறது. ஆனால் இது பொய் செய்தி என்றும், ரம்ஜானுக்கு நோன்பு இருப்பதால், படப்பிடிப்பில் பங்கேற்காமல் விடுப்பு எடுத்து சென்னையில் குடும்பத்தினருடன் அவர் தங்கி இருப்பதாக மம்முட்டியின் அலுவலகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2025

திருமணமான ஆண்களுக்கு BAD NEWS

image

கல்யாணமான ஆண்களுக்கு தொப்பை வளர்வதை நாம் கிண்டல் செய்வதுண்டு. அது உண்மைதான் என்கிறது போலந்து நாட்டு ஆய்வு. பேச்சிலர் ஆண்களை விட, திருமணமான ஆண்களுக்கு உடல்பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு 3.2 மடங்கு அதிகமாகிறதாம். ஆனால், பெண்கள் குண்டாவதற்கும் திருமணத்துக்கும் பெரிய தொடர்பில்லையாம். அதனால் என்ன என்கிறீர்களா.. உடல்பருமன் அதிகரித்தால் BP முதல் கிட்னி பிரச்சனை வரை எண்ணற்ற நோய்கள் வரும் ஆபத்து அதிகம்.

News March 16, 2025

பாஜகவுக்கு புதிய தலைவர்.. தொடர்ந்து இழுபறி

image

பாஜக புதிய மாநிலத் தலைவர் யார் என மார்ச் மாத மத்தியில் அறிவிக்கப்படலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் அதற்கான அறிகுறியே இதுவரை இல்லை. தமிழக பாஜக தலைவர்களும் அதுகுறித்து வாய் திறந்து பேசவேயில்லை. அண்ணாமலை வழக்கம் போல தனது தலைவர் பதவிக்குரிய வேலையை செய்து வருகிறார். இதை சுட்டிக்காட்டும் அரசியல் ஆர்வலர்கள், மாநிலத் தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிக்கவே வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

News March 16, 2025

ரூ.350 நோட்டு வெளியீடா?

image

ரூ.200 தாள் நிறம் போல ரூ.350 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக படங்களுடன் சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இது உண்மையா என பிரபல செய்தி நிறுவனத்தின் உண்மை சரிபார்ப்பு குழு ஆய்வு செய்தது. அதில் அந்த செய்தி பொய்யான செய்தி என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரூ.350 நோட்டு தொடர்பாக வெளியாகும் செய்தியை நம்ப வேண்டாம் என்று மக்களை அக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

News March 16, 2025

திருச்செந்தூரில் பக்தர் உயிரிழப்பு

image

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு விடுமுறை என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. அப்போது, ₹100 கட்டண வரிசையில் நின்றிருந்த காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் (50) மூச்சுத்திணறி கீழே சரிந்தார். மருத்துவமனை அழைத்துச் சென்றதில் அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.

News March 16, 2025

பிரேமலதா பேசத் தயங்குவது ஏன்?

image

அதிமுக கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு மாநிலங்களவை MP சீட் அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாக முன்பு செய்தி வெளியானது. ஆனால், எந்த வாக்குறுதியும் தரவில்லை என அதிமுக தலைமை தற்போது கூறிய நிலையில், அதற்கு தேமுதிகவினர் நேரடியாக எதிர்வினை ஆற்றவில்லை. 2026 தேர்தல் கணக்கா (அ) வேறு விஷயத்தால் பிரேமலதா பேசத் தயங்குகிறாரா என கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

News March 16, 2025

8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: மனிதம் எங்கே?

image

வங்கதேசத்தின் மகுரா நகரில், 8 வயது சிறுமி, தன் அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளாள். அப்போது அங்கிருந்த அக்காள் கணவரின் சகோதரன், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். இதில் பலத்த காயமடைந்த சிறுமியை காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும், 3 முறை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதால் சிறுமி உயிரிழந்தாள். இதையடுத்து, எந்த குழந்தைக்கும் இந்த கொடுமை நடக்கக் கூடாது என, நீதிகோரி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

News March 16, 2025

அஜித்தின் வெற்றிக்கு இதுதான் காரணம்: லிங்குசாமி

image

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்தின் உழைப்பு, அர்ப்பணிப்பு குறித்து இயக்குநர் லிங்குசாமி பாராட்டியுள்ளார். படத்தின் டப்பிங்கிற்காக 50 தடவை பேசச் சொன்னாலும் அஜித் பேசுவார் என அவர் தெரிவித்துள்ளார். அஜித்தின் வெற்றிக்கும், தமிழ் சினிமாவில் அவர் முதல் இடத்தில் இருப்பதற்கும் அதுவே காரணம் என லிங்குசாமி தெரிவித்துள்ளார். அஜித்தின் ஜீ படத்தை லிங்குசாமி இயக்கி இருந்தார்.

News March 16, 2025

மகளிர் உரிமைத் தொகை.. பெண்களுக்கு சென்ற SMS

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர விரும்பும் பெண்கள், எப்போது அறிவிப்பு வரும் என காத்திருக்கின்றனர். இந்நிலையில், பெண்களின் செல்போன் எண்ணுக்கு தமிழக அரசு தரப்பில் SMS அனுப்பப்பட்டுள்ளது. அதில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ.13,807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!