India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சட்டப்பேரவையில் தீர்மானங்களின் மீது 3 வகையில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. (1) குரல் வாக்கெடுப்பு (2) வாக்குச்சீட்டு முறை வாக்கெடுப்பு (3) டிவிஷன் முறை வாக்கெடுப்பு. இதில், முக்கிய பிரச்னைகள் மீது டிவிஷன் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வாக்கெடுப்பின்போது, சட்டப்பேரவையின் கதவுகள் அடைக்கப்படும். பங்கேற்கும் உறுப்பினர்கள் இடம் மாறி உட்காரக்கூடாது.
சபாநாயகர் அல்லது செயலாளர் தீர்மானத்தை படித்துவிட்டு, ஆதரவு தெரிவிப்போரை டிவிஷன் வாரியாக எழுந்து நிற்கச் சொல்வார். தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் 6 டிவிஷன்கள் உள்ளன. அதன்பின், எதிர்ப்பு தெரிவிப்போர் & நடுநிலையானோரை எழுந்து நிற்கச்சொல்லி, அவர்களது பெயர்கள் குறித்துக் கொள்ளப்படும். இறுதியில் தீர்மானம் வென்றதா இல்லையா என்று அறிவிக்கப்படும்.
9 மாதங்களாக விண்வெளியில் <<15786194>>மாட்டிக் கொண்டுள்ள<<>> சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவருக்கும் எவ்வளவு சம்பளம் தெரியுமா? அமெரிக்காவின் மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும் மிக அதிகமான GS-15 சம்பள பிரிவில் இருப்பதால், இந்திய மதிப்பில் ₹1.08 முதல் ₹1.41 கோடி வரை சம்பளம் கிடைக்கும். கூடுதல் வேலை நாட்களுக்கு ஒரு நாளைக்கு ₹347 என்ற அளவில், 9 மாதங்களுக்கு மொத்தம் ₹1 லட்சம் தான் கூடுதலாக கிடைக்குமாம்.
சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய EPS, பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். பல நேரங்களில் சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார், தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதை நேரலையில் வழங்குவதில்லை ஆகிய குற்றச்சாட்டுகளை EPS கூறினார். சபாநாயகர் அவையில் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழர்களின் நிதி நிர்வாகம் குறித்த ‘தமிழர் நிதி நிர்வாகம் – தொன்மையும் தொடர்ச்சியும்’ என்ற நூலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். நிதித்துறை சார்பில் தொகுக்கப்பட்டிருந்த இந்நூலில், பண்டைய தமிழரின் நிதி மேலாண்மை குறித்து விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான சிறப்பு இணையதள பக்கத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் மூலம், தமிழர்களின் சிறப்பான நிதி நிர்வாகத்தை உலகம் அறியும்.
சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடங்கியுள்ளது. சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் RB உதயகுமார் முன் மொழிந்தார். அதற்கு 35 பேருக்கு மேல் ஆதரவு இருந்ததால் தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு OPS & செங்கோட்டையன் இருவரும் ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தலைமையுடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் செங்கோட்டையனை சமாதானம் செய்ய மூத்த தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இன்று காலை EPS தலைமையில் நடைபெற்ற அதிமுக MLAக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து, தங்கமணி, SP வேலுமணி, KP முனுசாமி ஆகியோர் செங்கோட்டையனை தனிமையில் சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சமாதானம் ஆவாரா செங்கோட்டையன்?
தென் மாவட்டங்களில் அம்மன் கோயில்களில் பங்குனித் திருவிழா தொடங்க உள்ளதால், கோழி, சேவல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தென்மாவட்ட வியாபாரிகள், கிராம மக்கள் ஆடு, கோழி, சேவலை வாங்க தொடங்கியுள்ளனர். இதனால், 1kg எடைகொண்ட சேவல் ₹350க்கு விற்ற நிலையில், தற்போது ₹450 – ₹500 வரையும், 1kg எடைகொண்ட நாட்டுக்கோழி விலை ₹450 இல் இருந்து ₹1500 வரையும் விற்பனையாகிறது. ஆடு (ஒன்றுக்கு) ₹3000 வரை உயர்ந்துள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் குறித்து பாஜக எம்எல்ஏ பசன்கவுடா பாட்டீல் அறுவறுப்பாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடலில் எங்கெல்லாம் ஓட்டைகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் தங்கத்தை பதுக்கி கடத்தினார் என அவர் அறுவறுப்பாக பேசியதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. அதே சமயம் இந்த வழக்கில் தொடர்புடைய மாநில அமைச்சர்களின் பெயர்களை அம்பலப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
EPSஐ தொடர்ந்து புறக்கணித்து வரும் செங்கோட்டையன், இன்றைய சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டார். அப்போது, கடம்பூர் ராஜூவுடன் அவர் தீவிரமாக பேசிக் கொண்டிருந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. தலைமையுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் செங்கோட்டையன், மற்ற தலைவர்களையும் தன் வசம் இழுக்கிறார் என்று பேச்சு அடிபடும் வேளையில், இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது. என்னதான் நடக்கிறது அதிமுக கூடாரத்தில்!
Sorry, no posts matched your criteria.