India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக, முன்னாள் CM ஓபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். சாலைகளில் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு, மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்களை வன்முறையில் இருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,310க்கும், சவரன் ₹66,480க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ₹114க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது.
லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடியும், இளையராஜாவை அழைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பதாக பாராட்டினார். நாடாளுமன்றத்திலும் அவருக்கு புகழ் சூட்டப்பட்டது. இந்நிலையில் இயக்குனர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் இளையராஜாவை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து கூறினர்.
வங்கிகள் மீது புகார்கள் அதிகரித்து வருவதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார். வங்கி சேவைகள் குறித்து சமூகவலைதளங்களில் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை புகாராக பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வங்கி அதிகாரிகள், நிர்வாகத்தினர் நினைத்தால் இதற்கு எளிதாகத் தீர்வு காண முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ரகுராம் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தில், வில்லன் கும்பலைச் சேர்ந்த இரட்டையர்களில் ஒருவராக ரகுராம் நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் மெட்ரோ சண்டை காட்சியில் மாஸ் காட்டியிருப்பார். டெல்லியில் பிறந்த இவர் இந்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
X AI சாட்போட்டான Grok, பயனர்களின் கேள்விக்கு, ஆபாசமாக பதிலளித்தது குறித்து மத்திய IT அமைச்சகம் விசாரித்து வருகிறது. ஏன் இவ்வாறு நடந்தது என X நிறுவன ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு Grok நீண்ட நேரம் பதிலளிக்காமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், ஹிந்தியில் கொச்சையாக மீண்டும் கேள்வி எழுப்பியதால், அதுவும் கொச்சையாக பதிலளித்தது.
தெலங்கானாவில் ரயில்வே லோகோ பைலட் தேர்வு மையம் அமைக்கப்பட்டதற்கு தமிழக தேர்வர்கள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தமிழகத்தில் தேர்வு மையத்தை மாற்றுமாறு கூறியும் ரயில்வே அதை ஏற்காததால், வேறு வழியின்றி தமிழக தேர்வர்கள் நேற்று நடக்கவிருந்த தேர்வுக்காக ஐதராபாத் சென்றிருந்தனர். ஆனால், அதன் பிறகே தேர்வு ஒத்திவைக்கப்பட்ட தகவல் அவர்களுக்கு கிடைத்தது. இதனால், தமிழக தேர்வர்கள் அதிருப்தியடைந்தனர்.
ராணுவ அழுத்தம் கொடுத்து ஹமாஸை அடிபணிய வைக்கவே, 400 பேர் கொல்லப்பட்ட சமீபத்திய தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரீவன் அசார் தெரிவித்துள்ளார். ஹமாஸுக்கு இரண்டே வாய்ப்புகள் மட்டும் தான் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். USA, இஸ்ரேல் தரும் ஆஃபர்களை ஏற்றுக் கொள்வது அல்லது பணயக் கைதிகளை விடுவித்துவிட்டு காசாவில் இருந்து வெளியேறுவதுதான் அந்த வாய்ப்புகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருமுறை தொடுவதற்கு ₹5,000 கேட்பதாக, மனைவி மீது கணவன் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த IT ஊழியர் ஸ்ரீகாந்த் – பிந்துஸ்ரீ ஜோடிக்கு கடந்த 2022இல் திருமணம் நடந்துள்ளது. கணவருக்கு பல்வேறு நிபந்தனை விதித்த மனைவி, WFH ஆபீஸ் மீட்டிங்கின் போது லேப்டாப் முன்பு நடனமாடியதால் தனது வேலையே போய்விட்டதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். அடக்கடவுளே..!
காபி உற்பத்தியில் உலகிலேயே 7ஆவது இடத்தில் உள்ளது இந்தியா. உற்பத்தி குறைவு, பழைய ஸ்டாக்குகளை விற்க வேண்டிய கட்டாயம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஜனவரி மாதம் காபி கொட்டைகளின் ஏற்றுமதி 10% வரை வீழ்ச்சி கண்டது. தற்போது உற்பத்தி அதிகரித்திருக்கும் நிலையில், ஏற்றுமதி 43.37% வரை அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.