India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடங்கப்பட்டுள்ள ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தின் 2ஆம் கட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்ற சென்னையைச் சேர்ந்த பெண்கள் வரும் ஏப்.6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி முதற்கட்டமாக 100 பயனாளிகளுக்கு CM ஸ்டாலின் ஆட்டோக்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹலுக்கும், அவரது மனைவி தனஸ்ரீக்கும் மும்பை நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இருவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால், பிரிவதாக முடிவு செய்து விவாகரத்துக்காக நீதிமன்றத்தை நாடினர். தனஸ்ரீக்கு 4.75 கோடி ஜீவனாம்சம் கொடுக்க சாஹல் ஒப்புக்கொண்ட நிலையில் இருவருக்கும் இன்று நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென டெல்லிக்கு பயணம் செய்தது ஏன் என புகழேந்தி மர்மம் உடைத்துள்ளார். செந்தில் பாலாஜி பாஜகவிடம் சரணடைந்துவிட்டதாகவும், அதனால்தான் அவர் தற்போது வெளியில் இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், திமுக அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், இது தெரியாமல் இந்த அரசு இருக்குமானால், அதை அவர்கள்தான் அனுபவிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
குட் பேட் அக்லி பட டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் அனைத்தும் இணையத்தில் பட்டையை கிளப்பியதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், வார இதழுக்கு இயக்குநர் ஆதிக் அளித்த பேட்டியில், அப்பாவுக்கும் மகனுக்குமான பிணைப்பு படத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். டீசரில் இளமையான, வயதான தோற்றங்களில் அஜித் இருந்ததால், அவர் 2 கதாபாத்திரங்களில் நடித்திருப்பாரோ என ரசிகர்கள் முணுமுணுக்கின்றனர்.
MTC, SETC, TNSTC உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை (மார்ச் 21) முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் தர்பூசணி சாப்பிட பலரும் விரும்புகின்றனர். நீர்ச்சத்தை அதிகரிக்கும் தர்பூசணியை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? 1 கப் தர்பூசணியில் 11 கிராம் கார்போஹைட்ரைட் உள்ளது. இதில், ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் குறியீடான கிளைசீமிக் இன்டெக்ஸ் 72 என்ற அளவில் இருக்கிறது. இது அதிகம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் குறைவான அளவே தர்பூசணி சாப்பிடுவது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
காதலில் நம்பிக்கைதான் முக்கியம் என்று சொல்லுவார்கள். ஆனால், காதலன் தங்களை ஏமாற்றுகிறானா என்ற சந்தேகம் பெண்களுக்கு இயல்பாகவே இருக்கும்போல. இங்கிலாந்தில் Cheat Eye என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், காதலனை துப்பறிவதற்காகவே டிண்டர் செயலியை லண்டன் பெண்கள் அதிகளவில் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. லண்டனில் 62.4%, மான்செஸ்டரில் 8.8%, பிர்மிங்கத்தில் 8.3% பெண்கள் இதற்காக டிண்டர் செயலியை பயன்படுகிறார்களாம்.
சர்க்கரை நோய் (டைப் 2) மற்றும் உடல் எடை குறைப்பிற்கு உலகளவில் பிரபலமான USAவின் Mounjaro மருந்து இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒற்றை டோஸ் குப்பி மட்டுமே தற்போது கிடைக்கும். இந்த மருந்தை வாரம் ஒரு முறை, அதுவும் பரிந்துரைக்கப்பட்ட உணவு, உடற்பயிற்சிகளுடன் மட்டுமே எடுத்துக் கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்தியாவில் சர்க்கரை நோய், உடல் பருமனால் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பட்டத்தை இந்த முறையும் பின்லாந்து தக்க வைத்துள்ளது. OXFORD பல்கலை. வெளியிட்ட ‘World Happiness Report 2025’ அறிக்கையின்படி, உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் நார்டிக் நாடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. 147 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில், இந்தியாவை பின்னுக்கு தள்ளி PAK 109வது இடத்திலும், இந்தியா 118வது இடத்திலும் உள்ளது. AFG கடைசி இடத்தில் உள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர், 200 ரூபாய் மதுபானத்துக்கு கூடுதலாக ₹40 வசூலித்த வீடியோ அண்மையில் வைரலானது. இந்நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட டாஸ்மாக் நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஊழியர் மகேஸ்வரனை தற்காலிக பணிநீக்கம் செய்ததோடு, இனி இதுபோல முறைகேட்டில் ஈடுபடும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.